வெள்ளி, ஆகஸ்ட் 31, 2018

குறள் எண்: 1125 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 113 - காதற்சிறப்பு உரைத்தல்; குறள் எண்: 1125}

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்

விழியப்பன் விளக்கம்: கருணையொளி/போர்க்குணம் இரண்டும் வெளிப்படும் விழிகளுயுடைய என்னவளை; மறந்தால் தானே, நான் மீண்டும் நினைப்பன்? அப்படி மறப்பதை, நானறியேன்!
(அது போல்...)
ஞானப்பசி/தேடல்குணம் இரண்டையும் வளர்க்கும் திறமுடைய என்குருவை; விலகினால் தானே, நான் மீண்டும் நெருங்க? அப்படி விலகுவதை, நானறியேன்!

வியாழன், ஆகஸ்ட் 30, 2018

குறள் எண்: 1124 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 113 - காதற்சிறப்பு உரைத்தல்; குறள் எண்: 1124}

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து

விழியப்பன் விளக்கம்: தேர்ந்த வாழ்வியல் அணிகலனாகிய என்னவள்; என்னுடன் சேரும்போது, உயிருடன் வாழ்வதற்கு நிகராவாள்! என்னை விட்டு நீங்கும்போது, இறப்பதற்கு நிகராவாள்!
(அது போல்...)
சிறந்த அரசியல் காரணியான இனவுணர்வு; நல்லாரிடம் சேரும்போது, மக்களாட்சியை வளர்க்கும் உரமாகிறது! நல்லாரை விட்டு நீங்கும்போது, அதையழிக்கும் நஞ்சாகிறது!

புதன், ஆகஸ்ட் 29, 2018

குறள் எண்: 1123 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 113 - காதற்சிறப்பு உரைத்தல்; குறள் எண்: 1123}

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்

விழியப்பன் விளக்கம்: கருவிழியில் உள்ள கண்மணியே! நான் விரும்பும் அழகு நெற்றியுடைய என்னவளுக்கு, விழியில் பாதுகாப்பான இடமில்லை என்பதால்; நீ வெளியேறுவாயாக!
(அது போல்...)
என்னகத்தில் இருக்கும் சோம்பலே! நான் சிந்திக்கும் சமூகம் சார்ந்த புரிதல்களை, பதிவுகளாய் பகிர்ந்திட முடியவில்ல என்பதால்; நீ அழிந்தொழிவாயாக!

செவ்வாய், ஆகஸ்ட் 28, 2018

குறள் எண்: 1122 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 113 - காதற்சிறப்பு உரைத்தல்; குறள் எண்: 1122}

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு

விழியப்பன் விளக்கம்: உடம்புக்கும்/உயிர்க்கும் இடையேயான உறவு எத்தகையதோ; அதற்கு இணையானதே, எனக்கும்/என்னவளுக்கும் இடையில் இருக்கும் நட்புறவும்!
(அது போல்...)
நாட்டுக்கும்/மொழிக்கும் இடையேயான உறவு எத்தகையதோ; அதற்கு இணையானதே, எனக்கும்/என்னப்பனுக்கும் இடையில் இருக்கும் அன்புறவும்!

திங்கள், ஆகஸ்ட் 27, 2018

குறள் எண்: 1121 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 113 - காதற்சிறப்பு உரைத்தல்; குறள் எண்: 1121}

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்

விழியப்பன் விளக்கம்: பணிவானச் சொற்களைப் பேசும், என்னவளின் தூய்மையானப் பற்களுக்கு இடையே ஊறும் உமிழ்நீர்; பாலுடன் தேனும் கலந்ததற்கு இணையாகும்!
(அது போல்...)
கடினமானப் பணிகளைச் செய்யும், என்னப்பனின் அகன்ற மார்புகளுக்கு இடையே வழியும் வியர்வை; அன்புடன் அருளும் சேர்ந்ததற்கு ஒப்பாகும்!

ஞாயிறு, ஆகஸ்ட் 26, 2018

அதிகாரம் 112: நலம்புனைந்து உரைத்தல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 3 - காமம்இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 112 - நலம்புனைந்து உரைத்தல்

1111.  நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
          மென்னீரள் யாம்வீழ் பவள்

          விழியப்பன் விளக்கம்: அதிமென்மை கொண்ட அனிச்சம் பூவே! நீ வாழ்வாய்! ஆனால், நான் 
          விரும்பும் என்னவள்; உன்னினும் மென்மையானவள் என்பதையும் உணர்வாயாக!
(அது போல்...)
          அதிவலிமை கொண்ட பூமித் தாயே! நீ சிறப்பாய்! ஆனால், நான் வணங்கும் என்னம்மை; 
          உன்னினும் வலிமையானவள் என்பதையும் ஏற்பாயாக!
      
1112.  மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
           பலர்காணும் பூவொக்கும் என்று

           விழியப்பன் விளக்கம்: மலர்களைக் கண்டால், மயங்கும் நெஞ்சமே! இவளின் கண்களும், 
           பலர் கண்டு வியக்கும் பூக்களுக்கு இணையாகும், என்றெண்ணி தான் மயங்குகிறாயோ?
(அது போல்...)
           உறவுகளைக் கண்டால், உருகும் மனிதமே! இயற்கையால் பாதிக்கப்பட்டோரும், பலர் 
           உறவாடி உருகும் உறவுகளுக்கு இணையாவர், என்றெண்ணி தான் உருகுகிறாயோ?
           
1113.  முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
           வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு

           விழியப்பன் விளக்கம்: மூங்கில் போன்ற தோளை உடையவளுக்கு - மேனி, 
           இளந்தளிருக்கும்; பல், முத்துக்கும்; உடல்மணம், நறுமணத்திற்கும்; மைதீட்டிய கண், 
           வேலுக்கும் - இணையாகும்!
(அது போல்...)
           வைரம் போன்ற சிந்தனை உடையோருக்கு - செயல், உயிர்மூச்சுக்கும்; சொல், 
           குருதிக்கும்; உடல்வலிமை, மனவலிமைக்கும்; பண்பட்ட மனம், அரணுக்கும் - 
           இணையாகும்!  

1114.  காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
           மாணிழை கண்ணொவ்வேம் என்று

           விழியப்பன் விளக்கம்: அழகிய குவளை மலர், என்னவளைக் கண்டால்; சிறந்த 
           அணிகலனாகிய அவள் கண்ணுக்கு ஒப்பமாட்டேன் எனவுணர்ந்து, தலைகுனிந்து நிலம் 
           நோக்கும்!
(அது போல்...)
           தேர்ந்த அரசியல் விமர்சகர், நற்தலைவரைக் கண்டால்; உயர்ந்த குணமாகிய அவர் 
           வாய்மைக்கு ஒப்பமாட்டேன் என்றறிந்து, வழிவிட்டு விலகி நிற்பர்!

1115.  அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
           நல்ல படாஅ பறை

           விழியப்பன் விளக்கம்: தன் மென்மையை உணராமல், காம்பு களையாத அனிச்சம் பூவைச்      
           சூடியதால்; ஒடிந்த என்னவளின் இடுப்புக்காக, மங்களமற்ற இசை ஒலிக்கும்!
(அது போல்...)
           தன் கடமையைச் செய்யாமல், ஊழல் கலையாது அரசியல் ஆதாயம் தேடியதால்; இழந்த 
           மக்களின் ஆட்சிக்காக, அறமற்ற தண்டனை கிடைக்கும்!

1116.  மதியும் மடந்தை முகனும் அறியா
           பதியின் கலங்கிய மீன்

           விழியப்பன் விளக்கம்: ஒளிமிக்க என்னவளின் முகத்தில், மதிமயக்கம் கொண்ட 
           விண்மீன்கள்; நிலவுக்கும்/பெண்முகத்திற்கும் வித்தியாசம் அறியாமல், தன்னிலை மறந்து 
           அலைகின்றன!
(அது போல்...)
           புகழ்மிக்க எந்தலைவனின் கடமையில், சித்தம் கலங்கிய எதிர்க்கட்சிகள்; குடும்பத்திற்கும்/
           மக்களாட்சிக்கும் வித்தியாசம் அறியாமல், தன்கடமை மறந்து இருக்கின்றன!

1117.  அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
           மறுவுண்டோ மாதர் முகத்து

           விழியப்பன் விளக்கம்: மறைந்து மீண்டும் தோன்றும் நிலவில் இருக்கும், ஒளிவு குறைந்த 
           இருள் போல்; என்னவளின் ஒளிமிக்க முகத்தில், களங்கம் ஏதுமுண்டோ?... இல்லையே!
(அது போல்...)
           ஆவியாகி மீண்டும் பரவும் கடலில் இருக்கும், உப்பு மிகுந்த நீர் போல்; என்னம்மையின் 
           ஒப்பற்ற அன்பில், குறை ஏதுமுண்டோ?... இல்லையே!

1118.  மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
           காதலை வாழி மதி

           விழியப்பன் விளக்கம்: அழகான நிலவே! என்னவளின் முகம் போல், ஒளியை வீசும் 
           வல்லமையைப் பெற்றால்; என் காதலைப் பெற்று வாழ்வாயாக!
(அது போல்...)
           மக்களுக்கான ஆட்சியே! என்னம்மையின் தாய்மை போல், அன்பைப் பகிரும் இயல்பைப் 
           பெற்றால்; என் தொண்டைப் பெற்றுத் தொடர்வாயாக!

1119.  மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
           பலர்காணத் தோன்றல் மதி

           விழியப்பன் விளக்கம்: நிலவே! அழகுமலர் போன்ற விழியுடைய என்னவளின் முகத்திற்கு, 
           நிகராய் இருக்க விரும்பினால்; பலரும் காணும் வண்ணம் தோன்றாதே!
(அது போல்...)
           அரசே! அன்புக்குவியல் போன்ற இதயமுடைய என்னம்மையின் பொதுமைக்கு, இணையாய் 
           வளர விரும்பினால்; பலரையும் அழிக்கும் பிரிவினையைக் கைவிடு!

1120.  அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
           அடிக்கு நெருஞ்சிப் பழம்

           விழியப்பன் விளக்கம்: அனிச்சம் பூ/அன்னப்பறவையின் இறகு - இவையிரண்டும் கூட, 
           என்னவளின் பாதங்களுக்கு; நெருஞ்சிப் பழத்தின் மேலுள்ள, சிறிய முட்களுக்கு 
           நிகரானவை ஆகும்!
(அது போல்...)
           ஒருவேளை உணவு/ஓரிரவு தூக்கம் - இவையிரண்டும் கூட, ஆதரவற்றோரின் 
           வாழ்வியலுக்கு; இமய மலையின் மீதேறி, உச்சத்தைத் தொடுவதற்கு இணையானவை 
           ஆகும்!

குறள் எண்: 1120 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 112 - நலம்புனைந்து உரைத்தல்; குறள் எண்: 1120}

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்

விழியப்பன் விளக்கம்: அனிச்சம் பூ/அன்னப்பறவையின் இறகு - இவையிரண்டும் கூட, என்னவளின் பாதங்களுக்கு; நெருஞ்சிப் பழத்தின் மேலுள்ள, சிறிய முட்களுக்கு நிகரானவை ஆகும்!
(அது போல்...)
ஒருவேளை உணவு/ஓரிரவு தூக்கம் - இவையிரண்டும் கூட, ஆதரவற்றோரின் வாழ்வியலுக்கு; இமய மலையின் மீதேறி, உச்சத்தைத் தொடுவதற்கு இணையானவை ஆகும்!

சனி, ஆகஸ்ட் 25, 2018

குறள் எண்: 1119 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 112 - நலம்புனைந்து உரைத்தல்; குறள் எண்: 1119}

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி

விழியப்பன் விளக்கம்: நிலவே! அழகுமலர் போன்ற விழியுடைய என்னவளின் முகத்திற்கு, நிகராய் இருக்க விரும்பினால்; பலரும் காணும் வண்ணம் தோன்றாதே!
(அது போல்...)
அரசே! அன்புக்குவியல் போன்ற இதயமுடைய என்னம்மையின் பொதுமைக்கு, இணையாய் வளர விரும்பினால்; பலரையும் அழிக்கும் பிரிவினையைக் கைவிடு!

வெள்ளி, ஆகஸ்ட் 24, 2018

குறள் எண்: 1118 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 112 - நலம்புனைந்து உரைத்தல்; குறள் எண்: 1118}

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி

விழியப்பன் விளக்கம்: அழகான நிலவே! என்னவளின் முகம் போல், ஒளியை வீசும் வல்லமையைப் பெற்றால்; என் காதலைப் பெற்று வாழ்வாயாக!
(அது போல்...)
மக்களுக்கான ஆட்சியே! என்னம்மையின் தாய்மை போல், அன்பைப் பகிரும் இயல்பைப் பெற்றால்; என் தொண்டைப் பெற்றுத் தொடர்வாயாக!

வியாழன், ஆகஸ்ட் 23, 2018

குறள் எண்: 1117 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 112 - நலம்புனைந்து உரைத்தல்; குறள் எண்: 1117}

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து

விழியப்பன் விளக்கம்: மறைந்து மீண்டும் தோன்றும் நிலவில் இருக்கும், ஒளிவு குறைந்த இருள் போல்; என்னவளின் ஒளிமிக்க முகத்தில், களங்கம் ஏதுமுண்டோ?... இல்லையே!
(அது போல்...)
ஆவியாகி மீண்டும் பரவும் கடலில் இருக்கும், உப்பு மிகுந்த நீர் போல்; என்னம்மையின் ஒப்பற்ற அன்பில், குறை ஏதுமுண்டோ?... இல்லையே!

புதன், ஆகஸ்ட் 22, 2018

குறள் எண்: 1116 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 112 - நலம்புனைந்து உரைத்தல்; குறள் எண்: 1116}

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்

விழியப்பன் விளக்கம்: ஒளிமிக்க என்னவளின் முகத்தில், மதிமயக்கம் கொண்ட விண்மீன்கள்; நிலவுக்கும்/பெண்முகத்திற்கும் வித்தியாசம் அறியாமல், தன்னிலை மறந்து அலைகின்றன!
(அது போல்...)
புகழ்மிக்க எந்தலைவனின் கடமையில், சித்தம் கலங்கிய எதிர்க்கட்சிகள்; குடும்பத்திற்கும்/மக்களாட்சிக்கும் வித்தியாசம் அறியாமல், தன்கடமை மறந்து இருக்கின்றன!

செவ்வாய், ஆகஸ்ட் 21, 2018

குறள் எண்: 1115 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 112 - நலம்புனைந்து உரைத்தல்; குறள் எண்: 1115}

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை

விழியப்பன் விளக்கம்: தன் மென்மையை உணராமல், காம்பு களையாத அனிச்சம் பூவைச்  சூடியதால்; ஒடிந்த என்னவளின் இடுப்புக்காக, மங்களமற்ற இசை ஒலிக்கும்!
(அது போல்...)
தன் கடமையைச் செய்யாமல், ஊழல் கலையாது அரசியல் ஆதாயம் தேடியதால்; இழந்த மக்களின் ஆட்சிக்காக, அறமற்ற தண்டனை கிடைக்கும்!

திங்கள், ஆகஸ்ட் 20, 2018

குறள் எண்: 1114 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 112 - நலம்புனைந்து உரைத்தல்; குறள் எண்: 1114}

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று

விழியப்பன் விளக்கம்: அழகிய குவளை மலர், என்னவளைக் கண்டால்; சிறந்த அணிகலனாகிய அவள் கண்ணுக்கு ஒப்பமாட்டேன் எனவுணர்ந்து, தலைகுனிந்து நிலம் நோக்கும்!
(அது போல்...)
தேர்ந்த அரசியல் விமர்சகர், நற்தலைவரைக் கண்டால்; உயர்ந்த குணமாகிய அவர் வாய்மைக்கு ஒப்பமாட்டேன் என்றறிந்து, வழிவிட்டு விலகி நிற்பர்!

ஞாயிறு, ஆகஸ்ட் 19, 2018

குறள் எண்: 1113 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 112 - நலம்புனைந்து உரைத்தல்; குறள் எண்: 1113}

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு

விழியப்பன் விளக்கம்: மூங்கில் போன்ற தோளை உடையவளுக்கு - மேனி, இளந்தளிருக்கும்; பல், முத்துக்கும்; உடல்மணம், நறுமணத்திற்கும்; மைதீட்டிய கண், வேலுக்கும் - இணையாகும்!
(அது போல்...)
வைரம் போன்ற சிந்தனை உடையோருக்கு - செயல், உயிர்மூச்சுக்கும்; சொல், குருதிக்கும்; உடல்வலிமை, மனவலிமைக்கும்; பண்பட்ட மனம், அரணுக்கும் - இணையாகும்!

சனி, ஆகஸ்ட் 18, 2018

குறள் எண்: 1112 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 112 - நலம்புனைந்து உரைத்தல்; குறள் எண்: 1112}

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று

விழியப்பன் விளக்கம்: மலர்களைக் கண்டால், மயங்கும் நெஞ்சமே! இவளின் கண்களும், பலர் கண்டு வியக்கும் பூக்களுக்கு இணையாகும், என்றெண்ணி தான் மயங்குகிறாயோ?
(அது போல்...)
உறவுகளைக் கண்டால், உருகும் மனிதமே! இயற்கையால் பாதிக்கப்பட்டோரும், பலர் உறவாடி உருகும் உறவுகளுக்கு இணையாவர், என்றெண்ணி தான் உருகுகிறாயோ?

வெள்ளி, ஆகஸ்ட் 17, 2018

குறள் எண்: 1111 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 112 - நலம்புனைந்து உரைத்தல்; குறள் எண்: 1111}

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்

விழியப்பன் விளக்கம்: அதிமென்மை கொண்ட அனிச்சம் பூவே! நீ வாழ்வாய்! ஆனால், நான் விரும்பும் என்னவள்; உன்னினும் மென்மையானவள் என்பதையும் உணர்வாயாக!
(அது போல்...)
அதிவலிமை கொண்ட பூமித் தாயே! நீ சிறப்பாய்! ஆனால், நான் வணங்கும் என்னம்மை; உன்னினும் வலிமையானவள் என்பதையும் ஏற்பாயாக!

வெள்ளி, ஆகஸ்ட் 03, 2018

ஒரு தந்தையின் உண்மையான மேன்மை...


ஒரு பெண்ணின் உண்மையான கொடை...


குறள் எண்: 1097 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 110 - குறிப்பு அறிதல்; குறள் எண்: 1097}

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு

விழியப்பன் விளக்கம்: பகையற்ற சிறுமையான பேச்சும்/பகைவர் போன்ற பார்வையும் - வேண்டாதவர் போல் தோன்றும், நட்புடையோரின் அன்பின் குறிப்புகளாகும்!
(அது போல்...)
வெறுப்பற்ற கோபமான கண்டிப்பும்/சர்வாதிகாரி போன்ற நடத்தையும் - மாற்றார் போல் தோன்றும், பெற்றோரின் கடமையின் குறிப்புகளாகும்!