tag:blogger.com,1999:blog-3266290874050949052.post8634149913238087509..comments2023-05-14T16:10:57.821+04:00Comments on விழியப்பன் பார்வை (விழியமுதினியின் அப்பன் பார்வை): அறத்தின் அடிப்படை - பயமா???Elangovan Elamuruguhttp://www.blogger.com/profile/02016322058387726275noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3266290874050949052.post-63924161319662812992016-07-27T10:15:10.755+04:002016-07-27T10:15:10.755+04:00\\\\ Dont Follow western scientists, philosophers ...\\\\ Dont Follow western scientists, philosophers = they dont know what we know. we in the east have known a lot. ////<br /><br />நன்றி.<br /><br />மேற்கத்தியரோ/நம்மவரோ - எவரையும் நான் அப்படியே பின்பற்றுவதில்லை! எவர் என்ன சொன்னாலும்; என் தேடல்/புரிதல் அடிப்படையிலேயே "என் பயணம்" தொடர்கிறது. <br /><br />எவரையும்/எதையும் - முழுமையாய் ஆதரிப்பதுமில்லை! மறுப்பதுமில்லை!!.<br /><br />நன்றி. :)Elangovan Elamuruguhttps://www.blogger.com/profile/02016322058387726275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3266290874050949052.post-69986385780379666542016-07-27T10:00:36.425+04:002016-07-27T10:00:36.425+04:00முதற்கன் உங்கள் கருத்திற்கு மனமார்ந்த நன்றி. உங்கள...முதற்கன் உங்கள் கருத்திற்கு மனமார்ந்த நன்றி. உங்கள் கருத்தில் - எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.<br /><br />என்னுடைய நட்பு சிலர் சொன்னது போல், நீங்களும் தவறாய் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்றே நம்புகிறேன். <br /><br />நீங்களே "மிகத்தெளிவாய் சொல்லி" ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள் - கடவுளுக்கு பயப்படுவதும்; மனசாட்சிக்குப் பயப்படுவதும்; மற்றும் "செய்யும் வினை(கர்மா)களுக்கு பயப்படுவதும் - அறம் என்று! <br /><br />பின் ஏன் இந்த குழப்பம்?! சரி, பின்வரும் விளக்கம் உங்களுக்குப் போதுமானதாய் இருக்கும் என்று நம்புகிறேன்.<br /><br />இங்கே, மனிதர்களை மூன்று விதமாய் பிரிக்க விரும்புகிறேன்:<br /><br />1. முதல் வகை: நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வகையினர். அவர்களுக்கும் கூட, நீங்களே சொன்னது போல் "கடவுள்/மனசாட்சி/கர்மவினை - இப்படி ஏதோ ஒன்றின் மீதான பயமே" - அறத்தின் அடிப்படை ஆகிறது. உண்மைதானே?! இந்த பிரிவினர் "எந்த நிலையிலும்" அறத்தை மீறாத ஒழுக்கமும்/மன-உறுதியும் கொண்டோர். அவ்வகை மனிதர்கள் - இப்போது "மிக மிக" அரிது (ஏன், எவரும் இல்லை என்றே கூட சொல்லலாம்!). அதைப் பற்றிய விவாதம் "இங்கே" வேண்டாம். இந்த தலையங்கம் அது சார்ந்ததும் அல்ல!<br /><br />2. இரண்டாவது வகை: அறம் என்ற ஒன்றைப் பற்றி எந்த சிந்தனையும்/புரிதலும்/பயமும் இல்லாதோர்! அவர்களுக்கு அறம் பற்றிய எந்த அக்கரையும் இருப்பதில்லை. அவர்களைப் பற்றியும் இங்கே நான் பேசவில்லை - அது தேவையுமில்லை. இதில், அறம் பற்றிய சிந்தனையும்/அறிவும் இருந்தும் - தெரிந்தும்; மனசாட்சிக்கு தெரிந்தே - மீறுவோரும் அடக்கம். இவர்களுக்கு "எதை சார்ந்த பயமும் இருப்பதில்லை!". இவர்களுக்கு "அறத்தின் அடிப்படையான (கடவுள்/மனசாட்சி/கர்ம-வினை சார்ந்த) பயம்" இல்லாதது தான் - அறத்தை மீறக் காரணமாக அமைகிறது.<br /><br />3. மூன்றாவது வகை: அறம் பற்றிய சிந்தனையும்/புரிதலும்/அறிவும் இருப்போர் - அதனால், பல அறமீறல்களையும் தவிர்த்து வாழ்வோர். இருப்பினும் - இந்த வகை பிரிவினர் சூழல்/அபத்தமான ஆசை போன்ற காரணிகளால் (இதை நியாயப்படுத்தவில்லை!) - சில தவறுகளை செய்ய முற்படுவர். - இந்த வகையினர் தான் - பெரும்பான்மையான நாம் அனைவரும்!!!!!!!!! அவர்களுக்கு - சில குறிப்பிட்ட செயல்கள் - "அற மீறல்" என்பது தெளிவாய் தெரியும்; அவர்களின் புத்திக்கு மிகத்தெளிவாய் தெரியும். இருப்பினும், மனது அவர்களை வற்புறுத்தும். செய்யடா! பார்த்துக் கொள்ளலாம் என்று உந்தும். அப்படி செய்ய முனையும் போது - அவர்களுக்குள் இனம் புரியாத பயம் வரும். அதற்கு - கடவுள் தண்டிப்பார் என்ற பயமும் காரணமாய் இருக்கலாம் (அல்லது) மனசாட்சி தண்டிக்கும் என்ற பயமும் காரணமாய் (அல்லது) கர்மவினைகள் தண்டிக்கும் என்ற பயமும் காரணமாய் இருக்கலாம் (அல்லது) சட்டம் தண்டிக்கும் என்ற பயமும் காரணமாய் இருக்கலாம். "எது காரணம்?!" என்பது இங்கே இரண்டாம் பட்சமாய் வருகிறது; ஆனால், எதையோ சார்ந்த "பயம் தான்" அவர்களைத் தடுக்கும். இந்த அடிப்படையில் தான், இவர்களை மையப்படுத்தி தான் - இந்த தலையங்கத்தை எழுதி இருக்கிறேன்.<br /><br />- எந்த வகைப் பிரிவினராய் இருப்பினும் - பயமே (கடவுள்/மனசாட்சி/கர்மவினை/சட்டம் - எதை சார்ந்தும் இருக்கலாம்!) அறத்தின் அடிப்படையாய் இருப்பதை இப்போது உணரலாம். <br /><br />முதல்/மூன்றாம் வகையினருக்கு "பயம் இருப்பதால்" அறம் காக்கப்படுகிறது!<br />இரண்டாம் வகையினருக்கு "பயம் இல்லாததால்" அறம் மீறப்படுகிறது!!<br /><br />எனவே, எந்த வகையில் பார்ப்பினும் - அறத்தின் அடிப்படை "ஏதோவொரு" பயமாகத்தான் இருக்கிறது. <br /><br />"கடவுள் என்பதே கற்பிக்கப்பட்டது என்பதால்" - எனக்கும் கடவுள் பக்தி இருப்பினும்; நான் கடவுளை ஒரு உயர்சக்தி என்பதாய் மட்டுமே பார்ப்பதால் - கடவுள் தண்டிப்பார்! என்ற மாயையான-நம்பிக்கை எனக்கில்லை. என் கடவுள் சார்ந்த நம்பிக்கை வேறு; கடவுள் தண்டிப்பாரா?! என்ற கேள்வி வேறு.<br /><br />என்னளவில் முக்கியமான "அறம் சார்ந்த அடிப்படை பயம்" - 1. என் மனசாட்சி 2. ஒவ்வொரு வினைக்கும் - எதிர்வினை உண்டு என்ற கோட்பாடு (கர்மவினை) மற்றும் 3. சட்டம் - இந்த வரிசையிலேயே எழுகிறது.<br /><br />காரணம் ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம். ஆனால் "அடிப்படை பயம் மட்டுமே!".<br /><br />இதை இந்த தலையங்கத்தின் தொடர்ச்சியாய் (இரண்டாம் பாகமாய்) முடிவெடுத்து நாட்கள் பலவாகின்றன. நேரமின்மையால், செய்ய முடியவில்லை. உங்களின் கேள்வி என்னை - கிட்டத்திட்ட அந்த தலையங்கத்தை எழுதியது போன்ற அளவில் பதிலளிக்க வைத்திருக்கிறது. அதற்காய், மீண்டும் ஓர்முறை - உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.Elangovan Elamuruguhttps://www.blogger.com/profile/02016322058387726275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3266290874050949052.post-26102741517551442952016-07-27T09:27:51.711+04:002016-07-27T09:27:51.711+04:00very wrong. all indian kings followed Aram even un...very wrong. all indian kings followed Aram even under most troublesome times. example Harichandran Arichandran kadhai. His Moral Value was to speak Truth always. He met lot of troubles, lost kingdom, he had none to fear for except his own conscience and God. <br />Fear of God is Aram. Fear of Conscience is Aram.<br />Fear of Karma Vinai is Aram.<br />Thevaram lines tell us =<br />"Aram Paavam ennum Arum Kayirral Katti"<br />Purandhol Engum Puzhu Alukku Moodi<br />Means, all Atmas Humanity are tied with Punyams, Papams.<br />Sanjitha Karma, Prarptha Karma, PAzha Vinai, Oozh Vinai.<br />Kindly amend your blog.<br />Dont Follow western scientists, philosophers = they dont know what we know. we in the east have known a lot.<br />Anonymoushttps://www.blogger.com/profile/01562964358314012056noreply@blogger.com