ச்சும்மா; தமாஷா... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ச்சும்மா; தமாஷா... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், பிப்ரவரி 22, 2017

"ஆதி பான" கடை...


     வெளி மாநிலத்தில் இருந்து, தமிழ்நாட்டிற்கு "பொதுநல போர்வையில்" ஒரு கைதேர்ந்த வியாபாரி  வந்தார்! "இங்கே டாஸ்மாக் நிறைய இருக்கிறது; அதனால் பலரும் மது அருந்திவிட்டு ஆனந்தத்தைத் தொலைக்கிறார்கள்!" என்று வேதனைப்பட்டார். உடனே பலரும், அவரை வியந்தனர்! அதைக் கண்ட அவர் "மதுவிலிதுந்து விடுபட உங்களுக்கு கற்று தருகிறேன்! நீங்கள் உண்மையான ஆனந்தத்தை அடையளாம்!" என்று சொல்லி ஒரு குடிசையில் பாடம் எடுக்க ஆரம்பித்தார்! குடியிலேயே மூழ்கித் தவித்த பலரும், அதில் இருந்து "தாமாக மீளவே முடியாது!" என்ற மாயையான நம்பிக்கையால்; அதில் சேர்ந்தார்கள்! பணம் அதிகமாய் கிடைக்க, அந்த வியாபாரி அதைப் பெரிய "கார்ப்பரேட் நிறுவனமாய்" மாற்றினார்! "கார்ப்பரேட் என்றாலே மயங்கும்" பலரும், அதில் சேர்ந்தார்கள். பணம் மென்மேலும் பெருக, தமிழகம் கடந்து; பல மாநிலங்களையும் தாண்டி, வெளிநாடுகளிலும் அந்த நிறுவனம் கிளைகளை உருவாக்கியது! 

     பல்கிப் பெருகிய கிளைகளால், பணத்தோடு படைபலமும் சேர; பல ஆக்கிரமிப்புகளைச் செய்தார், அந்த வியாபாரி. ஒரு கட்டத்தில், அவரின் அடியார்கள் எல்லோரும் அவர் சொல்வதே வேதமென நம்ப; வியாபாரத்தின் உச்சம் தொட எண்ணினார்! "மதுவருந்துவதே கெட்ட பழக்கம்!" என்று சொல்லி மயக்கி வந்தவர்; திடீரென "நான் ஒரு நல்ல பானத்தை அறிமுகம் செய்கிறேன்!"; அதன் பெயர் “சோம பானம்!”; அதைத்தான் “ஆதி ஞானிகள்” பருகினர்! அதை மக்கள் மறந்து விட்டதால்தான், இப்போது எல்லோரும் ஆனந்தமின்றி தவிக்கின்றனர்.  எனவே, குடியின் பிடியில் இருந்து "உண்மையாகவே விடுபட வேண்டுமெனில்"; ஆதி காலத்து மதுவான "சோம பானம்" பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என பிரசங்கம் செய்தார்! அதுதான், உண்மையான ஆனந்தத்திற்கு வழி என்று ஆனந்த கூக்குரலிட்டார். உடனே ஆங்காங்கே "ஆதி பானம்" கிடைக்க சிறிய கடைகளை நிறுவினார்! கூட்டம், பெரிய அளவில் அலைமோதவே... 

      122 வகையான பானங்களுடன், மிகப்பெரிய "ஆதி பான" கடையை நிறுவி அதை வெகு விரைவில், மிகப் பிரம்மாண்டமாய் திறக்கவிருக்கிறார்! அதை ஆரம்பிக்கும்போதே, மிகப்பெரிய அளவில் ஆரம்பிக்க; அற்புதமான திட்டம் ஒன்றை வகுத்தார், அந்த நவீன வியாபாரி! ஏற்கனவே, பணமும்/படையும் உள்ள அவர்; தன்னுடன் அரசியல் அதிகாரத்தையும் இணைக்க திட்டமிட்டார்! அதுதான், ஆக்கிரமித்த இடத்தில் எழுந்தருளியுள்ள; தன் மாபெரும் கடைக்கு பாதுகாப்பு என்பதை உணர்ந்தார்! எனவே "உலக அளவில் தொடர்புடைய" ஒரு அரசியல்வாதியை தேர்ந்தெடுத்தார்!". அவரை அழைத்து வந்து, இந்த பெரிய "ஆதி பான" கடையைத் திறக்கவிருக்கிறார். அதனால், உலகெங்கும் தன் கடைக்கு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்பது அவர் திட்டம். ஆக "மதுபான அடிமையில் இருந்து மீட்கிறேன்!" என்று உறுதியளித்த அவர்; இறுதியில் "மாற்றான ஒரு மது பானத்தை" அறிமுகப் படுத்துகிறார்! என்னவொரு வியாபார யுக்தி? வாருங்கள்... 

“ஆதி பானம்” பருகுவோம்!
“அதி ஆனந்த” கூத்தடிப்போம்!!

வெள்ளி, மார்ச் 11, 2016

ஹியூமென்ஸோட "நேம்ஸ" வச்சி ஒரு ஹியூமர் "சென்ஸு"!!!


{அடிக்கடி, என் நட்புகள் சிலர் பேரை வச்சி கலாய்ப்பதுண்டு! அதை வைத்து ஒரு பதிவு எழுதவேண்டும் என்று தோன்றியது; அதான், இந்த "ஹா... ஹா... ஹா..."}


      "கார்த்தி" கிட்ட உனக்கு "கீர்த்தி" இருக்காப்பான்னு கேட்க; அவன் சம்பந்தமே இல்லாம "ஃபிரஷ்ஷா" இருக்க "சுரேஷ்ஷ" பார்த்து இப்படி கேட்பியான்னுட்டான்.  அதுக்கு, சுரேஷ்ஷு ஏன் என்னை மட்டும்?; எப்ப பார்த்தாலும் "கெத்து" காட்டறானே "முத்து", அவனைக் கேட்க சொல்லு பார்ப்போம் என்றான். அப்போது, தன்னோட "பிம்பத்"தோட அங்க வந்தான் "சம்பத்". எல்லாத்தையும் நம்ம டெர்ரர் "கிரி" வழக்கம்போல ஒரு "வெறி" யோட பார்த்துக்கிட்டு இருந்தான்; அதைப் பார்த்த நம்ம "அருள்" எப்பவும் போல "பொருள்" ஏதும் இல்லாம பேச ஆரம்பிச்சுட்டான். இதையெல்லாம் "முரளி" பெரிய "புரளி" யா கிளப்பிவிட; நம்ம "பாலா" அதை ரொம்ப "கூலா" கேட்டு சிரிச்சுக்கிட்டு இருக்க, உடனே "கண்ணா" ஏன் "அண்ணா" இப்படி சிரிக்கறன்னு கேட்டாப்ல. அந்த நேரம் பார்த்து அங்க வந்த சின்ஸியர் "சரவணன்" திடீர் "ராவணன்" மாதிரி லுக் விட்டுட்டு; என்னாங்கடா நடக்குது இங்கன்னான் கோபமாய்! எல்லாத்தையும் சாமியார் போல  அமைதியா பார்த்துக்கிட்டு இருந்தான் "ராகு" திசை நடக்கற "ரகு". அப்போ... லொக்கு/லொக்குன்னு சத்தம் கேட்க; என்ன ஆச்சு "நிர்மல்"னு கேட்டா, "இருமல்"னு சொன்னாப்ல. நடந்துக்கிட்டு இருக்கற எதையும் கண்டுக்காம பெரிய "காட்ரேஜ்" பீரோவுல எதையோ தேடிக்கிட்டு இருந்தாப்ல "நடராஜ்". 

      இதை இப்படி காமெடியா உங்களுக்கு சொல்லிக்கிட்டு இருப்பது “கிங்கா”ன இந்த “இளங்கோ”ன்னு சொன்னா - அதுக்கு, நீங்க - போடா “மாங்கா”ன்னு சொல்லி சிரிக்கக்கூடாது! ஆமாம், சொல்லிப்புட்டேன்!

ஞாயிறு, மார்ச் 23, 2014

ஃபர்ஸ்ட் அடிச்ச "பியர்"...




      கண்டிப்பா எல்லாருக்கும் மொத, மொத "தண்ணி அடிச்சது" நியாபகம் இருக்கும்! எனக்கு ரொம்ப-தெளிவா நியாபகத்துல இருக்குது!! 1991-ல B. Sc., செகண்ட்-இயர் படிக்கும்போது நான் மொத "பியர" அடிச்சேன். நான் தண்ணி அடிக்க ஆரம்பிச்ச கதை ரொம்ப வித்தியாசமானது! இதுமாதிரி, யாருக்காவது நடந்திருமாங்கறது சந்தேகம் தான்... ஆனா, எனக்கு அப்படித்தான் நடந்தது.

      நானும், என் ஃபிரண்டும் "கார்ட்ஸ்"ஆடிக்கிட்டு இருந்தோம்! கார்ட்ஸ்-ஆடும்போது "பெட்" இல்லாம ஆடறது நெறைய பேருக்கு புடிக்காது! எனக்கு கண்டிப்பா புடிக்காது; அதனால, "அது-இது"ன்னு யோசிச்சப்போ என் ஃபிரண்ட் "எது"ன்னு சொன்னான்; அவன் சொன்ன பெட் "பியர்"!  அதாவது, தோக்கறவங்க; ஜெயிக்கரவங்களுக்கு "பியர்"வாங்கிக் கொடுக்கனம்னு முடிவானது. எனக்கு,  அந்த பழக்கம் இல்லைன்னாலும்; சரின்னு ஒத்துக்கிட்டேன். அப்புறம், ஒரு வழியா ஆடி கேம்-முடியும்போது பார்த்தா "நான் தோத்துட்டேன்!". நான், என் ஃபிரண்டுக்கு பியர் வாங்கி கொடுக்கணும்.

       சரின்னு "மெட்ராஸ்-டிரிப்லிகேன்ல" அப்போ இருந்த ஒரு "ஒயின் ஷாப்"புக்கு போனோம்! கடைக்குள்ள போனதும் "ஒரு திருட்டு யோசனை?!" வந்துச்சு... சரி, அவனுக்கு மட்டும் ஏன் வாங்கி கொடுக்கணும்?! நாமளும் ஒன்னு வாங்கி அடிச்சா என்னனு தோனுச்சு! சரின்னு, மச்சி "ரெண்டா வாங்கலாம்டா!"; நானும் அடிக்கப்போறேன்னு சொன்னேன். அவன், சரி மச்சி! ஆனா, முடியலைன்னா ஏதும் அசிங்க பண்ணிடாதடா! என்கிட்ட கொடுத்துடுன்னான்; சரி, மச்சி! என்னால முடியலன்னா ஒனக்கு கொடுத்துடறேன்னு சொல்லி 2-பியர் வாங்கிக்கிட்டு உள்ளே போனோம்!

         நான், அன்னைய தேதிக்கு சுமார் 1-வருஷத்துக்கு மேல காலைல எழுந்ததும் 1 அல்லது 1.5 லிட்டர் தண்ணி குடிக்கற பழக்கத்த வச்சிருந்தேன்! இன்னைக்கு வரைக்கும் காலைல எழுந்ததும், மொதல்ல செய்யற வேலை அது தான்! அதனாலேயே என்னவோ, அந்த பியரை (வெறும் 650 மில்லி லிட்டர் தானே??!!​) ரெண்டு மொடக்குல குடிச்சுட்டேன். நல்ல எதமான-கூலிங்ல இருந்ததாலையோ என்னவோ?! எனக்கு ஒண்ணுமே தடங்களா இல்லை! அவன் சரியான காண்டாயிட்டான்... அவன் இன்னும் அரை-பியர் கூட குடிச்சி முடிக்கல! அவன் மெட்ராசுக்கே உரிய அந்த வார்த்தைய சொல்லி..."நெஜமா இதுக்கு முன்னாடி" தண்ணி அடிச்சதுல்ல?! அப்படின்னு கொஞ்சம் கூட நம்பாம கேக்கறான்! இல்லடா... ஒனக்கு தான் தெரியுமே! நான் எப்படா, குடிச்சிருக்கேன்?!-ன்னு கேட்டேன்! அவனுக்கு, இன்னும் ஒரு-அரை பியராவது கிடைக்கும்னு நெனைச்சு ஏமாந்த காண்டு வேற! இல்லடா, நான் தான் காலைல எழுந்ததும் தண்ணி குடிப்பன் இல்ல?! அதனால தான் குடிச்சுட்டன் போல?!ன்னேன்! அவனுக்கு அது "பிரஸ்டிஜ்"இஷ்ஷுவா வேற போயிடுச்சு! அவனைவிட சீக்கிரமா வேற குடிச்சுட்டன் இல்ல?! அப்பறம், ஒரு வழியா ஹாஸ்டலுக்கு போயி சேர்ந்துட்டோம். ஆனாலும், அவனால, தாங்க முடியல; எல்லார்க்கிட்டயும் மீண்டும் அந்த மெட்ராஸ்-ஸ்பெஷல் வார்த்தைய சொல்லி நடந்ததை சொல்லி அவன் மனச தேத்திக்கிட்டான்!

            நான் மொதல்ல அடிச்ச அந்த பியர் "ப்ளாக் & நைட்" வேற! அது, ஸ்ட்ராங்கான பியர் வேறயாம்! அவனுக்கு அந்த காண்டு வேற! ஆனா, அதுக்கப்பறம் நம்ம ஃபேவரைட் "கோல்டன் ஈகிள்"ங்கறது வேற விசயம்!

        அப்படி ஆரம்பிச்ச அந்த "கருமம் பிடிச்ச!!??" பழக்கத்தை இன்னைக்கு வரைக்கும் சுத்தமா-நிறுத்த முடியல! எவ்வளவோ கொறைஞ்சுடுச்சுன்னாலும், இன்னமும் சுத்தமா நிறுத்த முடியல!! கூடிய சீக்கிரம் நிறுத்திடுவேன்; நிறுத்திடனும்! "தம்மடிக்கற" பழக்கத்த நிறுத்தறது தான் ரொம்ப கஷ்ட்டம்னு எல்லாருக்கும் தெரியும்! அதையே, சுத்தமா நிறுத்தி 3.5 வருஷம் ஆவுது! இது ஒன்னும் பெரிய விசயம் இல்லை. என்னதான் 3 மாதம், 4 மாதம்-னு அடிக்காம இருந்தாலும், என்னைக்காவது ஒரு-நாளு திரும்ப ஏதாவது பார்ட்டி, அது-இதுன்னு ஏதாவது வந்துடுது! ஏம்-பொண்ணு கூட இல்லைங்கறது கூட காரணமா இருக்கலாம்! தம்மையே-அவளால நிறுத்தியாச்சு!! ஆனா, இத அவ இல்லாதப்பவே சுத்தமா நிறுத்திடம்னு "ட்ரை" பண்ணிக்கிட்டு இருக்கேன்; பார்ப்போம்...

என்ன இருந்தாலும்; அந்த ஃபர்ஸ்ட் பியர் மறக்கமுடியாத அனுபவம்!!!        

ஞாயிறு, மார்ச் 16, 2014

பிரேக்-கத்தான் "ண்ணா" தேடிக்கிட்டிருந்தேன்...




          எங்க கேங்கை சேர்ந்த அந்த குட்டிப்பைய்யன் தான் இந்த செக்க்ஷனை ஓபன் பண்ண ஐடியா கொடுத்தான்னு போனவாரம் "இன்ட்ரொடக்க்ஷன்"-ல சொன்னது நியாபகம் இருக்குதுங்களா?!. என்னது நியாபகம் இல்லையா?! அட... என்னங்க நீங்க? முதல்ல அத நல்லா படிச்சு எல்லாரையும் நியாபகத்துல வச்சுக்குங்க... "எங்க வரலாறை கரெக்ட்டா தெரிஞ்சுக்கிட; எல்லா இன்சிடென்ட்ஸ்-களையும் செமையா ரசிக்க... அந்த இன்ட்ரொடக்க்ஷன், ரொம்ப முக்கியம்" மக்களே! போங்க...ப்ளீஸ்...அத தெளிவா படிச்சு வச்சுக்கோங்க!! அப்பத்தான் எங்கள நேர்ல பார்த்தவங்க ரசிக்கற மாதிரி; யாரப்பத்தியும் கவலைப்படாம சிரிக்கலாம். தேங்க்ஸ்-ங்க மக்களே!

     ஒருதடவ, அந்த குட்டிப்பைய்யன் என்ன பைக்-ஓட்ட கூப்பிட்டான்! ஆங்...எங்கிட்ட பைக் இல்லைங்கறது ஒங்களுக்கே தெரியுமே!! அதனால, நம்மளோட முதல் "கெஸ்ட் அப்பியரன்ஸ்" இந்த ஃபர்ஸ்ட் ஆர்டிக்கல்லையே வரப்போறாரு! அதுவும், என் "மாமூ"வே முதல் ஆளா வர்றது எனக்கு ரொம்ப சந்தோசம். ஆமாங்க...என் மாமூ; அவருக்கு நான் மாமூ! சிலபேர பார்த்தவுடனே பிடிக்கும்பாங்கல?! அப்படி மொத தடவையா பாத்ததுமே, எனக்கு என் "மாமூ"வையும்; என் "மாமூ"வுக்கு என்னையும் ஸ்ட்ராங்-ஆ புடிச்சு போச்சு! எனக்கு, என் "மாமூ"வைப் புடிக்கும்; ரொம்ப புடிக்கும் அவ்வளோதான். சரி, இப்போதைக்கு என் மாமூ புராணம் போதும்னு நெனைக்கறேன்! ஆனா, அப்பாலைக்கு என் மாமூ - ஒரு சிங்கிள் ஆர்டிக்கல்ல "சிங்கிளா" வருவாப்ல!!

           ஆங்...இங்க என் மாமூ ஏன் வந்தாப்புலன்னா?! பைக் என்னோட மாமுவோடது - SUZUKI MAX 100R! நான், முதல்ல பைக் ஓட்டக்கத்துக்கிட்டது எங்க பஞ்சகல்யாணி-லனாலும்; நான் அதிகமா ஓட்டனது என் "மாமூ"வோட வண்டிதான்! காரணம், ரொம்ப சிம்பிள்: அதான் இன்ட்ரொடக்க்ஷன்-லையே சொன்னனே! எங்க பஞ்சகல்யாணி பெரிய குடிகாரன்னு! அதுக்கு "ஊத்தி" நமக்கு கட்டுபடி ஆகாதுங்கறதால அத-ரொம்ப எடுக்கறதில்ல!! அப்படி ஒருநாள், எல்லாரும் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தாங்க. இந்த குட்டிப்பைய்யன் செமையா கிரிக்கெட் ஆடுவான். காமெடி-பீசு நானே ஆடலாம்னு நெனைச்சுக்கிட்டு இருக்க, குட்டிப்பைய்யன் "ண்ணா! (ஆமாம், அவரு அண்ணாவை 'ண்ணா'ன்னு தான் ஸ்டைல்-ஆ கூப்பிடுவாரு)!" பைக் ஓட்டலாம் வாங்கனான்னான்! அன்னைக்கு என் மாமூ பைக் என்கிட்டே இருந்துச்சு.

   இந்தப்பய அப்படி கேட்டதும், நான் மொதல்ல கேட்டது "முன்னபின்ன; பைக் ஒட்டியிருக்கியாடா?!"ங்கறது தான்! ஏன்னா, எனக்கே அப்ப அரை-கொறையா தான் ஓட்டத் தெரியும்! கொஞ்சம் கூட யோசிக்காம, "ண்ணா! நான் பஞ்சகல்யாணியே" ஓட்டியிருக்கண்ணா-ன்னு சொன்னான்! எங்க பஞ்சகல்யாணி "பெரிய குடிகாரன்னாலும்" செம வண்டி!! பெரிய வண்டி; அதை ஓட்டறது அவ்வளவு சுலபம் இல்ல!!! ஆனா, பழகிட்டா ச்சும்மா...கொழந்த கணக்கா போகும். சரி, பஞ்சகல்யாணியை ஓட்டியிருந்தா சரிதான்னு! அவன ஓட்ட சொல்லி நான் பின்னால ஒக்காந்து கிட்டேன். அப்படியே எல்லா டிபார்டுமெண்டு வழியாவும் ஒரு ரவுண்டு போனான்! அப்புறம், திரும்பி வந்து "அட்மினிஸ்ட்ரேஷன் ப்ளாக்" பக்கமா போனான்! அந்த  பெண்டுல திரும்பி "லைப்ரரி"க்கு எதிரா போயிக்கினே இருந்தவன், திடீர்னு ரோட்ட-விட்டு சைடுல போக ஆரம்பிச்சான்! டே...டே... பிரேக்க போடுடா....போடுடான்னு கத்துறேன்! கத்துறேன்!! கத்திக்கிட்டே இருக்கேன்!!!

          பய, லைப்ரரிக்கு எதுத்தாப்புல இருக்கற சின்ன-சிமெண்ட் கட்டமேல இடிச்சு ஏத்தி அங்க இருந்த செடில எல்லாம் ஏத்தி கிட்டத்திட்ட லைப்ரரி வாசல்ல கிட்ட-போயி வண்டிய படுக்க வச்சுட்டான்! எனக்கா செம டென்ஷன்... என்-மாமூ;  வண்டிய வேற  யாருக்கிட்டயும் கொடுக்காதன்னு சொல்லிட்டு போயிருந்தான்! ஏண்டா?! பிரேக்க போடு, போடுன்னு கத்தினனே ஏண்டா?! போடலைங்கறேன்?! பயபுள்ள! கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம "ண்ணா! பிரேக்கத்தான் தேடிக்கிட்டு இருந்தேங்கறான்!!". அவ்வளவு கோவத்துலயும் எனக்கு சிரிப்பே வந்துடுச்சு!! பயபுள்ள! வண்டி ஓட்டத்தெரியும்னு ஏங்கிட்ட புளுவிட்டு..."கீழ குனிஞ்சு" பிரேக்க தேடிக்கிட்டு இருந்திருக்கு! 

            பெட்ரோல் டேங்குல "ஒரு டொக்கு" விழுந்துடுச்சு! நல்ல வேலை, ஓட்டை எதுவும் விழலை!! சரி, என்னடா பண்றதுன்னு பக்கத்துல இருந்த வொர்க்-ஷாப்ல போயி விசாரிச்சா, அதை சரிபன்னனும்னா மெட்ராசுக்கு டேங்கை கழட்டி அனுப்பனும்னு சொல்லிட்டாய்ங்க! சரின்னு, ஒருவழியா ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்தா என் மாமூ வண்டிக்காக காத்திட்டிருக்கான்! அவன் வழக்கமா கோபப்படறதே எனக்கு சிரிப்பா வரும்;  அன்னைக்கும் அப்படியே கோபமா; "மாமூ! சொன்னன் இல்ல மாமூ! இவ்வளவு லேட்டா வர்ற"ங்கறான்! அடப்பாவி...லேட்டானதுக்கே இப்படின்னா; டேங்குக்கு எப்படின்னு... பொறுமையா அவன்கிட்ட இப்படி ஆயிடுச்சி மாமுன்னேன்! அவன், சரி விடு மாமூ! பாத்துக்கலாம்னு அசால்ட்டா சொல்லிட்டு போயிட்டான். 

     இதெல்லாம் விட பெரிய தமாசு...இன்னொரு நாளு, நம்ம பயபுள்ள... "ண்ணா!" வாங்க! பஞ்சகல்யாணில ஒரு-ரவுண்டு போயிட்டு வரலாம்னான் பாருங்க!!  அவனும், என்னென்னவோ சொல்லி பாத்தான். நானா?! சிக்குவேன்? அதுவும், பஞ்சகல்யாணிய போட்டுக்கிட்டு விழுந்தா எப்படி இருக்கும்?!

யெப்பா, சாமி! ஆள-விடுடான்னு நான் எஸ்கேப்!!!  

ஞாயிறு, மார்ச் 09, 2014

முன்னுரை (ச்சும்மா; தமாஷா...)



          நம்ம எல்லார்க்கும்,  நம்ம  "க்ளோஸ் சர்க்ககிள்" கூட அடிச்ச கூத்தெல்லாம் அடிக்கடி நியாபகம் வரும். அது நல்லதா/கெட்டதா; சரியா/தப்பா - ன்னு எதைப்பத்தியும் கவலைப்படாம செஞ்சிருப்போம். அது நியாபகத்துக்கு வர்றப்ப; பக்கத்துல இருக்கறவங்கள பத்தி அலட்டிக்காம நாம பாட்டுக்கு சிரிக்கவும் செய்வோம்! அதுலயும், கூட இருந்த ஒருத்தன் சிக்கி - அவன்கூட அந்த நியாபகத்தையெல்லாம் நெனைச்சு பாக்கறப்போ; நமக்குள்ள ஒரு சிலிர்ப்பு வரும். பயங்கரமா சிரிப்போம்; அப்படி ஒருநாளு சிரிச்சுக்கிட்டிருந்தப்போ; ஃபிரண்ட் ஒருத்தன் "அண்ணா! அதையெல்லாம்; சும்மா ஜாலியா" எழுதுங்க; சூப்பரா இருக்கும்னு சொன்னான்! எனக்கும் பட்டுச்சு; இருத்தாலும், ஒரு தயக்கம். இப்படி, நல்ல தமிழ்ல எழுதிட்டு திடீர்னு சாதாரணமா-பேசறா மாதிரி எழுதுறதுக்கு கொஞ்சம் சங்கடமா இருந்துச்சு! அப்பறம்; நாம சிரிக்கரம்ல? படிக்கறவங்களும் சிரிப்பாங்கதானே?! அதுல என்ன இருக்குன்னு ஒரு கேள்வி வந்துச்சு!

      சரி "ச்சும்மா; தமாஷா..." எழுதலாம்னு முடிவு பண்ணதும் அதையே இந்த செக்க்ஷனுக்கு "டைட்டிலா" வச்சுட்டேன்! சரி, எதப்பத்தி முதல்ல எழுத ஆரம்பிக்கலாம்னு கேள்வி வந்துச்சு; சரி, இந்த ஐடியா கொடுத்த நண்பன் கூடவிருந்த "Ph. D.," லைஃப்-ல; அந்த ஹாஸ்டல் க்ரூப்போட பண்ணின அட்டகாசத்துல இருந்தே ஆரம்பிக்கலாம்னு தோனுச்சு. அதுதான், கரெக்டாவும் இருக்கும்; ஏன்னா, என் வாழ்க்கைல பல திருப்பங்கள் நடந்தது - அந்த ஸ்டேஜ்லதான்! அப்போ - படிக்கறது போக மீதி நேரத்துல பணனதுலாம்; "அராத்துலையும்; அராத்து! சரி! அதை எழுதலாம்னா, பலபேரோட "உண்மை"கதைகள் எல்லாம் வெளில வரும்; என் பொண்டாட்டி முதல் எங்க வீட்டுல, எல்லாருக்கும் நான் தண்ணி-அடிக்கறது தெரியும்! தம்மு-அடிச்சது தெரியும்; இப்போ 3 வருஷத்துக்கு மேல அடிக்கறதில்லைன்னும் தெரியும்! ஏன், என்னுடைய தம்மு-கதை உங்களுக்கே நல்லா தெரியும்!! ஆனா, மத்தவங்களுக்கு இது தர்ம-சங்கடமா ஆவும்; என்ன பண்றதுன்னு யோசிச்சேன். 

            இதுமாதிரி எல்லா கேங்குலயும் கண்டிப்பா; எல்லாருக்கும் பட்டபெயர்னு ஒன்னு இருக்கும்! சரி, "செல்லப்பெயர்னு" வச்சுக்கோங்களேன்! அதனால, பட்டப்பெயர் வச்சே எழுதிடலாம்னு தோணிச்சு! சரின்னு, அதை; இந்த ஐடியா கொடுத்தவன்கிட்ட சொன்னேன்; அவனும் சரின்னு சொன்னான்! அதுல பார்த்தா, அவனுக்குன்னு ஒரு பட்டப்பெயர் இல்லை; அவனை "அவன் பேர்" சொல்லியே கூப்பிடுவோம்; சரின்னு, அவனை எப்பவாவது "கூப்பிடற"ஒன்னை முடிவு செஞ்சுட்டேன். சிலபேரை "ஜாதியும்/மதமும்" சொல்லி கூப்பிடுவோம்; அது நண்பர்களுக்குள்ள ஓக்கேன்னாலும், இங்கே அப்படி எழுத என்னால் முடியாது. மேலும், நான் அப்படி அவங்க யாரையும் கூப்பிட்டதில்லை; ஆனா, மத்தவங்க கூப்பிடுவாங்க! அதனால, அவங்களுக்கு வேறொரு பெயர் இப்போது வைப்பதுன்னு முடிவு செஞ்சேன். அதையும், அந்த நண்பன் கிட்ட எக்ஸ்ப்ளைன் பண்ணேன்! அதுவும் ஓக்கே செய்யப்பட்டது. சரி, இப்போ இந்த ஐடியாவுக்கு ஒரு "இன்ட்ரொடக்க்ஷன்" குடுக்கணும்.

        ஆங்ங்ங்...அதான், இப்ப நீங்க படிச்சிக்கினு இருக்கறது! சரி, எங்க கேங்கில் "2 க்ரூப்";  அதாவது, ஒன்னு "சீனியர்"செக்க்ஷன்; இன்னொன்னு "ஜூனியர்"செக்க்ஷன்! சீனியர்/ஜூனியர் - லாம் டிபார்ட்மெண்டோட சரி. ஹாஸ்டலுக்கு வந்துட்டா "தண்ணி அடிக்கறதுல" தொடங்கி எந்த "நல்ல காரியத்துலையும்" எங்களுக்குள்ள எந்த டிஃபரன்சும் இருக்காது; ஒரே, சோஷலிசம் தான்! அதுவும், "குட்டிப்"பைய்யனெல்லாம் சமயத்துல எங்க எல்லாரையும் சரியா கலாய்ப்பான்!! அப்படியொரு, சோஷலிசம்! சரி இப்போ, இன்ட்ரொடக்க்ஷன்...

*****

மக்கள பத்தி சொல்றதுக்கு முன்னால; எங்க பஞ்சகல்யாணி!: (சீனியர் செக்க்ஷனோட)லீடர்-ங்கறதுக்கு ஏத்தாப்புல அவர்கிட்ட மட்டும்தான் "பைக்" இருந்துச்சு! (ம்ம்ம்...யேன் பைக் கதைய போன வாரம்தான சொன்னேன்?!) அதுக்கு பேர்தான் "பஞ்சகல்யாணி"; கண்டுபிடிச்சுட்டீங்களே?! சபாஷு! அப்படியொரு வேகமாய் போகும்???!!! ஆனா, எப்படியாவது எங்கள கொண்டாந்து கரை சேர்த்திடும்! "எங்கள?!" அப்படிங்கறத யோசிக்கறீங்களா? அதுல கொறைஞ்சது 4-பேர் போவோம்! அப்படி ஒரு "டிராபிக் சென்ஸ்" எங்களுக்கு!!

ஆனா, பஞ்சகல்யாணி கிட்ட எனக்கு பிடிக்காத ஒரு கெட்டபழக்கம் உண்டு! நான், அப்பப்போ இப்படித்தான் அதைப்பத்தி சொல்வேன்: "அது நம்மள விட பெரிய குடிகாரண்டா" என்று! ஆமாங்க...! "பெட்ரோலை" அநியாயத்துக்கு குடிக்கும்!  

*****   

சரி, இப்போ மக்கள்!

சீனியர் கேங்:
  1. முதல்ல, கேங்-லீடர்! அவரு நல்லா ஒயரமா இருப்பாரு! லீடர்ங்கறதுக்கு ஏத்தாப்பல, அப்படியொரு சகல-கலா வல்லவன்! ஒருத்தன, அழவைக்கனம்னு "மவன்" முடிவு பண்ணிட்டா; விடவே மாட்டாப்ல! நான் நிறைய சென்சிடிவ்-ங்கறதால அடிக்கடி மாட்டறது நானாத்தான் இருக்கும்! அப்படியே அவன கொல்ட்ற அளவுக்கு கோபம் வரும்; ஆனாலும், எதுவும் செய்யமாட்டேன். ஏன்னா?! அவன் எனக்கு பலவருஷத்துக்கு முன்னாடியே "நன்பேண்டா...!!!" 
  2. ரெண்டாவது ஸ்தானம் எனக்குன்னு சொல்ட்றாங்க! நானும், சரின்னுட்டேன்; நம்மள பத்தி நாமளே சொன்னா நல்லா இருக்காது; அவனுங்ககிட்ட கேளுங்க! "நல்லா; நார்ற"மாதிரி சொல்லுவானுங்க! ஆனா, டைமிங் சென்ஸ்-ல நாமதான் பிஸ்த்து!! என்னது... ஜோக்கர் மாதிரியா?! சரி... அப்படியே வச்சுக்குங்க!!!
  3. அப்புறம், நம்ம மாப்ளேய் (அவன் பட்டப்பெயர் மாற்றப்பட்டுள்ளது); அவன் ராகமாய் எங்களை "மாப்ளேய்" என்று இழுத்து கூப்பிடுவான்! அதனால, அவன் இங்கே/இனிமே; "மாப்ளேய்"! மகா-பொறுமைசாலி; எப்பவும் சிரிச்சுகிட்டே இருப்பான்! ஆனா, எங்களுக்கு ஒண்ணுன்னா ஒரு கோவம் வரும் பாருங்க! வேணாம், வேணாம்...பாத்துடாதீங்க; தாங்கமாடீங்க!!
  4. அப்புறம், காளி! ரொம்ப சாதுவா இருப்பாப்ல!! எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் (ஏன்னா, இவைங்க கேங்-ல நான் லேட்டா தான் சேர்ந்தேன்!); இவனுக்கு எதுக்கு "காளி"ன்னு பேர் வச்சாய்ங்க? ரொம்ப சாதுவா இருக்கானேன்னு! பயபுள்ள; சபரி-மலை போயிருந்தப்போ என்னை ஒரு-தடவ முறைச்சான் பாருங்க! அன்னைக்கு புரிஞ்சது; அவனுக்கு ஏன் "காளி"ன்னு பேர் வந்துச்சுன்னு!! அப்பால, அவன்...இல்லையில்லை; அவரு மேல கொஞ்சம் மரியாதை வந்துடுச்சு!
  5. கடசியா, கட்டபைய்யன்! ஆனா, எனக்கு இவர்தான் முதல்-ஆள்! ஆமாங்க, இவரு தான் "ஆள் புடிச்சு விடற" மாதிரி "எங்க; லீடர்கிட்ட" சேத்துவிட்டவரு... ச்சேச்சே... என்ன ரௌடிங்க மாதிரி சொல்ட்றேன்?... "இன்ட்ரடியுசு" பண்ணி வச்சவரு!! இவரு, வெளில லாட்ஜ்-ல தங்கி இருக்கறதால, லிஸ்ட்-ல கடைசில வந்துட்டாரு! நானும், அந்த லாட்ஜ்-ல தங்கி இருந்தபோது தான் இந்த கேங்-குல சேத்துவிட்டாரு!!
{குறிப்பு: இது, மெயின் கேங்-மெம்பர்ஸ் லிஸ்ட் தான்! (அதாவது மத்தவைங்கல்லாம் கெட்ட பசங்க; எங்களை மாதிரி இல்லாம; "ஒரு தம்மு" கூட அடிக்கத் தெரியாதவைங்க!). கெஸ்ட்-ரோல் மாதிரி அப்பப்போ சில பேர் வருவாங்க! அவங்களுக்கு அப்போ இன்ட்ரொடக்க்ஷன் இருக்கும்!}

ஜூனியர் கேங்:
  1. இந்த கேங்-குக்கு லீடர் பேரு "செவத்தவன்" (பட்டபெயர் மாற்றப்பட்டுள்ளது)! சீனியர்-கேங் லீடர் போலவே, ஒருத்தன அழவைக்கரதுல மன்னன்! அதுவும், "சீனியர்" ரொம்பல்ல்லாம் மெனக்கெட மாட்டரு! ரெண்டு, மூணு வார்த்தைதான் வெளில வரும்; மத்ததுல்லாம் "பாடி லாங்க்வேஜ்" தான்! பயபுள்ள, ஒருத்தர விடமாட்டன்! அதுவும், எங்க கேங்குக்கு வெளிலைன்னா; அவனுங்க செத்தானுங்க! (எங்களுக்கு, கொஞ்சம் கன்செஷன்!... அப்பப்ப "சேம்ப்பில்" மட்டும்தான்). ஆனா, சீக்கிரமா; கோர்ஸ்-முடிஞ்சு எங்கள விட்டு போயிட்டான்!
  2. இதுக்கு என்னைமாதிரி அடுத்த-லெவல் லீடர் பேரு "தம்பு"! பேருதான், தம்பு; செய்யருதுல்லாம் ஒரே "அழும்பா" இருக்கும்!! மூஞ்சை-வச்சு சைகை பண்ணியே, நம்மளை மண்ட காய விட்டுடுவான். காட்டுலயே (ஏற்காடு) வளந்த பயங்கறதால, எதுக்கும் பயப்பட மாட்டான்; எவனுக்கும் பயப்பட மாட்டான்! ஆனா, பாசக்காரப்பய!! பாசத்தை பங்கு-போடவும் விடமாட்டான். ஒரிஜினல் லீடர் (மேலே உள்ளவரு) சீக்கிரம் வெளில போயிட்டதால "இவரே! அன்னபோஸ்ட்டா" லீடர் ஆயிட்டாரு!
  3. அப்புறம், ஒரு குட்டிப்பைய்யன்! அவருதான், இந்த செக்க்ஷனை ஓப்பன் பண்ண சொல்லி "சஜெஷன்"குடுத்து ரெக்கமெண்ட் பண்ணவரு!! நல்லா டேன்ஸ் ஆடுவாரு! சமயத்துல அவனுடைய அறிவை பார்த்து நாங்களே மெரண்டுடுவோம்!! ஒருதடவ "பொண்டாட்டிக்கு; பொண்டாட்டின்னு" ஏன் பேர் வந்துச்சுன்னு "அறிவா கண்டுபிடிச்சு சொன்னான் பாருங்க!"; சென்சார் காரணமாய் அதை இங்க சொல்லமுடியாது! ஆனா, இதை படிக்கற எங்க கேங் எல்லாரும் "குபுக்குன்னு" சிரிச்சுடுவாங்க! என் போர்ச்சுக்கல் ஃபிரண்டுகளுக்கு கூட சொல்லி இருக்கேன்; அவங்க படிச்சாக் கூட ச்சும்மா... விழுந்து விழுந்து... சிரிப்பாய்ங்க! 
{குறிப்பு: இங்கயும், சில கெஸ்ட்-ரோல் அப்பப்போ வருவாங்க! அப்போ இன்ட்ரொடக்ஷன் இருக்கும்!}

காட் ஃபாதர்: 

இப்படி ஒவ்வொருத்தனும் ஒரு "கோளாறா" இருக்கற 2 கேங் இருந்தா; அங்கே ஒரு "காட் ஃபாதர் இருக்கணும்தானே? எங்களுக்கும் அப்படி ஒருத்தர் இருந்தாரு/இருக்காரு! அவர் எங்க எல்லாருக்கும் அண்ணன்! "சரக்க-சரியா ஊத்தறதுல" இருந்து; "நியாயமா/நாட்டமையா இருந்து; எங்களுக்குள்ள" நடக்கற கசமுசாக்களுக்கு தீர்ப்பு சொல்வாரு! அவருக்கு "தலைவலியா" இருக்கறது நானும்; எங்க கேங் லீடராத் தான் இருப்போம்! ஏன்னா, நானும் எங்க கேங் லீடரும் எந்த அளவுக்கு கொழைஞ்சுக்கரமோ?! அந்த அளவுக்கு அடிச்சிப்போம்!! இதுல, என்ன பிரச்சனைன்னா "காட் ஃபாதார" மண்ட-காயவிட்டுட்டு நாங்க கொஞ்ச நேரத்துல "ச்சியர்ஸ்"பண்ணிக்கிட்டு இருப்போம்; அவுரு காண்டாயிடுவாப்ள! அவரு "உங்க சங்காத்தமே; வேண்டாம்டா!" அப்படின்னுவாரு. ஆனா, தங்கமான அண்ணன்; மனுஷன்! எங்க கேங்-லீடருக்கெல்லாம் அவரு பல-வருஷமா பழக்கம்; நான் லேட்டா அதுல சேந்திருந்தாக்கூட, அவருகிட்ட அந்த பாகுபாடெல்லாம் இருக்காது!

*****

இந்த செக்க்ஷனை தொடர்ந்து படிக்கப்போறவங்களுக்கு இந்த இன்ட்ரொடக்க்ஷன் வரலாறு போன்றது! ஏன்னா "வரலாறு, முக்கியம் - மக்களே!". அதனால, கவனமா படிச்சுக்குங்க! ஏன்னா, இந்த செக்ஷன்ல வரப்போற எல்லா போஸ்ட்லயும் - இனிமே, வெறும் பட்டப்பெயர் மட்டுமே வரும்! பேரைப்படிச்சவுடனே, இதுல்லாம் நியாபகம் வந்தா - படிக்கறதை நீங்க நல்லா என்ஜாய் பண்ணலாம்!! அப்பால, உங்க இஷ்ட்டம்!!! 

முதல்ல, என்னுடைய இந்த-ஹாஸ்டல் லைஃப் சர்க்கிள் பத்தி எழுதப்போறேன்! போகப்போக, மத்த எல்லா சர்க்கிள்-ல நடந்த சமாச்சாரங்களும்; இதே மாதிரி "ச்சும்மா; தமாஷா..." வரும்.

எதப்பத்தியும் கவலைப்படாம; ச்சுமா தமாஷா சிரிச்சுட்டு போங்க மக்களே!!!