வியாழன், ஜூன் 25, 2015

செவ்வாய், ஜூன் 16, 2015

புதன், ஜூன் 03, 2015

"செய்யுள் போல் ஒரு" என்றால் என்ன? எப்படி??



"சாகாவரம் போல் ஒரு" என்று துவங்கும் "உத்தமவில்லன்" படப்பாடலில்...

விளங்கி, துலங்கிடும் வம்சம் வாழ...
வாழும் நாளில் கடமை செய்ய...
"செய்யுள் போல்" ஒரு காதல் வேண்டும்!

என்றோர் வரி வரும். சரி...
"செய்யுள் போல் ஒரு" என்றால் என்ன? எப்படி??

குறிப்பு: "நல்ல புரிதலை" கொடுக்கும் கருத்துகளை(மட்டும்) எதிர்பார்க்கிறேன்! :)

வியாழன், மே 28, 2015

கமலின் கவி, மெய், விஞ் = ஞானங்கள் - 2



மாலா-ஒளியாம்; ஞாயிறும் கூட மற்றோர் யுகத்தில்... போகும் கரிந்தே....ஏஏஏ!
கரிந்தே, கரிந்தே...ஏஏஏ!!
கரிந்து எரிந்தும், வெடித்த பின்னும்; உதிக்கும் குழம்பில் உயிர்கள் முளைக்கும்!!
முளைத்து முறிந்தும், துளிர்க்கும் வாழை; தன் மரணம்-குள்ளே விட்டது விதையை!...
கேளாய் மன்னா... ஓ ஓ ஓ ! கேளாய் மன்னா...!!

விதைத்திடும்-மெய், போல்-ஒரு உயிரை; உயிர்த்து விளங்கும்...
என் கவிதை விளங்கும்!
கவிதை விளங்கும்... ஓ ஓ ஓ !

விளங்கி, துலங்கிடும் வம்சம் வாழ...
வாழும் நாளில் கடமை செய்ய...
"செய்யுள் போல்" ஒரு காதல் வேண்டும்!
காதல் வேண்டும்....
"செய்யுள் போல்" ஒரு... காதல் வேண்டும்!
"செய்யுள் போல்" ஒரு...
ஹேய்...

"வேண்டியதெல்லாம் வாய்த்த ஒருவன்" சாவையும் வேண்டி; செத்த கதைகள்...
"ஆயிரம் உண்டு"!
கேளாய் மன்னா...!
"ஆயிரம் உண்டு"!
ஓ ஓ ஓ !
கேளாய் மன்னா...!

கமலின் கவி, மெய், விஞ் = ஞானங்கள் - 1



சாகாவரம் போல், சோகம் உண்டோ?... கேளாய் மன்னா!
கேளாய் மன்னா!...
தீராக் கதையை, கேட்போர் உண்டோ?... கேளாய் மன்னா!!
கேளாய் மன்னா!!...

கணியர் கணித்த கணக்குபடி நாம்; காணும் உலகிது, வட்டப்பந்தாம்!
வட்டப்பந்தாம்... ஓ ஓ ஓ ! வட்டப்பந்தாம்... ஓ ஓ ஓ !!
வட்டப்பந்தை வட்டம...டிக்கும் மற்ற பந்தும்; போகும் மாண்டே!
போகும் மாண்டே... ஓ ஓ ஓ ! போகும் மாண்டே... ஓ ஓ ஓ !!

புதன், மே 27, 2015

"உத்தம வில்லனின்" தத்துவ சொல்லல் - 5



கேள்வி: முத்தத்தின்... ஆசானே! முனிவராய், செய்தாயோ?! லவ்வா...? லவ்வா...?

(அட்டகாசமான) பதில்:

புதிதான...!
புதிதான - வேலைக்கு "பிள்ளையார் சுழி"தான்...
முத்தம்! வாடி லவ்வா...!!

சோதிக்கப்பட்ட - உண்மையும், நேர்மையும்!



       ஒருவரின் "உண்மையையும்/நேர்மையையும்" எவர் சோதித்தாலும் - ஓர் ஆற்றாமையும்/கோபமும் வரும். அதிலும், ஒருவர் அதிகம் நேசிக்கும் நபராலேயே அப்படிப்பட்ட சோதனை வந்தால்?!... எத்தனை வலியும்/வேதனையும் வரும்? சமீபத்தில் மே-மாதம் 21ஆம் தேதி எனக்கு "மீண்டும் ஓர் முறை" அப்படிப்பட்ட சோதனை வந்தது! என் வாழ்நாளில் நான் மறக்க நினைக்கும் நாட்களின் பட்டியலில் சமீபத்தில் இடம்பெற்ற நாள் - அது! அதிலும்... ஒரே விசயத்திற்காய் "மீண்டும் மீண்டும்" ஒருவரின் உண்மையும்/நேர்மையும் சோதிக்கப்படும் போது, அந்நிகழ்வு அவரை இன்னும் பலவீனமாக்கும்! செயலிழக்க செய்யும்! செய்வதறியாது நிற்க வைக்கும். இப்படிப்பட்ட சூழலை கையாள்வது மிகக்கடினம்; எல்லோருக்கும் அந்த திறன் எளிதில் வந்துவிடாது. இயற்கையாய்... எனக்கு அந்த திறன் இருப்பது மட்டுமல்லாமல்; ஏற்கனவே, அப்படிப்பட்ட சூழல்களை கடந்து வந்திருப்பதால்/ அப்படிப்பட்ட சூழலை ஏற்கும் பக்குவம் இருப்பதாலும்...

            இன்னமும் கூட... அந்த நபரின் பால் பிடிப்பும்/நம்பிக்கையும் இருப்பதால்; என்னால் இந்த சமீபத்திய நிகழ்வை கூட கடந்து வர முடிந்திருக்கிறது! இதை சம்பந்தப்பட்டவரிடம் சொல்லி... புரிய வைத்தல் மிகவும் சிரமமானது! அவர்கள் புரிந்து கொள்பவர்களாய் இருப்பின், அப்படி சோதித்து இருக்கமாட்டார்கள்! அதிலும் "மீண்டும்/மீண்டும்" அப்படி சோதிக்கமாட்டார்கள். இது அவர்களின் இயலாமையாய் கூட இருக்கலாம்; ஆனால், தம் "உண்மையும்/நேர்மையும்" சோதிக்கப்பட்ட ஒருவரின் நிலை - சொல்லில் வரையறுக்க முடியாதாது. அதை அனுபவிப்போருக்கு மட்டுமே புரியும். சோதித்தவர், இன்னமும் நமக்கு வேண்டும் என்ற நிலை இருக்கும்வரை தான் - அந்த அவமதிப்பையும் தாண்டி; அவர்களின் பால் ஒருவருக்கு ஈர்ப்பு இருக்கும்; அந்த அவமதிப்பும் நினைவு கூறப்படும். அவர்கள்... இனிமேலும், நம் வாழ்க்கைக்கு தேவையில்லை என்ற நிலை வரும்போது; அப்படிப்பட்ட நிகழ்வுகள் பாதிப்பை தருவதில்லை...

இப்படி ஒரு மனதங்கமாயும் வெளிப்படுவதில்லை!!!

பின்குறிப்பு: இந்த உண்மையை கவனியுங்கள்! நம்முடைய "உண்மையையும்/நேர்மையையும்" சோதிக்கும் பலரை நாம் சந்திக்கக்கூடும். ஆனால், அவர்களைப் பற்றி கவலைப்பட நாம் நினைப்பது கூட இல்லை - அதாவது, அவர்களை நாம் பொருட்படுத்துவதே இல்லை!

செவ்வாய், மே 26, 2015

"உத்தம வில்லனின்" தத்துவ சொல்லல் - 4



பிரிந்தவர் கூடினால்... பேசவும் வேண்டுமா?!
மோகத்தை சொல்லிட... மொழியும் ஓர்-தடை ஆகுமோ?!
"இசையின் காலம்" கணிக்கும்-தாளம், போல... என்னுடன் கலக்க வா!
இன்ப-மலையின் சிகரம் சேர்க்க; கொஞ்சி, கொஞ்சி "என் செவியில்" பேசிடும்...

காதலாம்... கடவுள்-முன்!
கண்களாம்... கோவில்-இல்!
தேகத்தின் தாகமே...
ஆராதனை! ஆராதனை!!

"உத்தம வில்லனின்" தத்துவ சொல்லல் - 3



காமமாம் கடும்புனல்... கடந்திடும் படகிது!
ஆசையாம் பாய்மரம்... அமைந்ததோர் படகிது!!
கரையைத் தேடி அலையும் நேரம்; உயிரும் மெழுகாய் உருகுதே!!!
வீணையை மீட்டும் விரல்கள் போலே - சுண்டி சுண்டி எனை மீட்டி மகிழ்திடும்...

காதலாம்! ம்ம்ம்ஹாம்... கண்களாம்!! ம்ம்ம்ஹாம்...

"உத்தம வில்லனின்" தத்துவ சொல்லல் - 2



அரசியல்வாதியவன் உண்மையை சொன்னார்ப்போல்...

"அதிசயம்" நானும் கண்டேன்!

"உத்தம வில்லனின்" தத்துவ சொல்லல் - 1



"வேண்டியதெல்லாம் வாய்த்த ஒருவன்" சாவையும் வேண்டி; செத்த கதைகள்...

"ஆயிரம் உண்டு"!