புதன், ஜனவரி 17, 2018

குறள் எண்: 0899 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 090 - பெரியாரைப் பிழையாமை; குறள் எண்: 0899}

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்

விழியப்பன் விளக்கம்: சீர்மிகு கொள்கையுடைய பெரியோர் கோபப்பட்டால்; அரசாள்பவரும் கூட, தம் அரசாட்சியை இடையிலேயே இழந்து கெடுவர்!
(அது போல்...)
பகுத்தறியும் இயல்புடைய மனிதர்கள் மிருகமானால்; துறவிகளும் கூட, தம் துறவறத்தைப் பாதியிலேயே கைவிட்டு விலகுவர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக