ஞாயிறு, ஜனவரி 01, 2017

குறள் எண்: 0518 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 052 - தெரிந்து வினையாடல்; குறள் எண்: 0518}

வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்

விழியப்பன் விளக்கம்: ஒரு வினையைச் செய்வதற்குத் தகுதியானவராய், ஒருவரை நியமித்த பின்; குறுக்கீடு ஏதுமின்றி, முழு அதிகாரத்தையும் - அவருக்கு அளித்தல் வேண்டும்.
(அது போல்...)
ஒரு நம்பிக்கையை வளர்ப்பதற்குக் காரணியாய், ஓர்சக்தியைத் தேர்ந்தெடுத்த பின்; கவனச்சிதறல் ஏதுமின்றி, முழு சிந்தனையும் - அச்சக்தி மேல் இருக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக