ஞாயிறு, ஆகஸ்ட் 10, 2014

பேரீச்சம்-பழமும்; சில புரிதல்களும்...




            நான் தற்போது குடியிருக்கும் வீட்டில் 5-க்கும் மேற்பட்ட பேரீச்சம்-பழ மரங்கள் இருக்கின்றன. அவைகளை சாப்பிடலாமா? நமக்கு சாப்பிட அனுமதி உண்டா?? என்ற குழப்பங்கள்! எவரும் பறிக்காமல் பழங்கள் கீழே விழுந்து வீணாவதை காண முடிந்தது. அதனால், சென்ற-வாரத்தில் ஓர் நாள் - ஒரு பழத்தை பறித்து சாப்பிட்டால்.... அட! அட!! அட!!! என்ன ஒரு சுவை?! இதை எழுதும்போதே... நாவில் எச்சில் ஊறுகிறது. அரபு மற்றும் வளைகுடா நாடுகளில் பேரீச்சம்-பழம் பிரசித்து பெற்றது என்பது அனைவர்க்கும் தெரியும். ஆனால், மரத்திலிருந்து அப்படியே பறித்து சாப்பிடுதலில் உள்ள சுவையை; அதை உணர்ந்தோருக்கு மட்டுமே புரிய வாய்ப்பிருக்கிறது. முதன்முதலில் சாப்பிட்ட கணம் முதல்... அதற்கு இணையான இன்னுமொரு பழத்தை எனக்கு நினைவூட்டியது. என்னவென்பதை... கொஞ்சம் சஸ்பென்ஸ்!!?? இருக்கட்டும் என்று பின்குறிப்பில் கொடுத்துள்ளேன். பின்னர், ஒரு கைப்பை நிறைய பறித்து கொஞ்சம், கொஞ்சமாய் வைத்து சாப்பிட ஆரம்பித்தேன்.

            என்மகள் எல்லா பழங்களையும் விரும்பி சாப்பிடுவாள் என்று முன்பே குறிப்பிட்டுள்ளேன். ஆனால்,    பல தரம்-வாய்ந்த பேரீச்சம் பழங்களை பலமுறை வாங்கி சென்றும்; அவள் அதை மட்டும் சாப்பிடுவதில்லை. அதன் காரணம், சென்ற வாரம் புரிந்தது. மரத்தில் இருந்து பழத்தை பறித்து, பின் 3/4 நாட்கள் ஆனவுடன் சுவை மாறிவிடுகிறது. அதாவது, பழத்தில் இருக்கும் நீர் வெளியேறியவுடன் - அது இறுக்கமாகி விடுகிறது (கடைகளில் கிடைப்பது போல்!). மேலும், நீரின் அளவு குறைந்து விடுவதால்; திகட்டும்-அளவிற்கு இனிப்பின் அளவு கூடிவிடுகிறது. இதுதான், என்மகள் சாப்பிடாததற்கு காரணம் என்று தெரிந்தது. பின்னர், ஓர்நாள் அந்த பழங்களை கழுவி - சாப்பிடாமல் வைத்துவிட்டேன். என்ன விந்தை? அடுத்த நாள், கழுவியதன் மூலம் கிடைக்கப்பெற்ற நீரை உள்வாங்கி பழங்கள் சுய-சுவையை அடைந்துவிட்டது. இதுபோல், முன்பொரு முறை மணிலா-அவித்ததை எழுதியது நினைவிருக்கலாம். என்னவளிடம் "அம்மாதிரி செய்து" செய்ய சொல்லியிருக்கிறேன். பார்ப்போம்...

நீரும்-இனிப்பும் அளவாய் இருக்கும் பழங்களை என்மகள் விரும்புகிறாளா?! என்று!!!

பின்குறிப்பு: அந்த பழம்... "சப்போட்டா"பழம்! ஆம்... நன்கு கனிந்த சப்போட்டா-பழத்தை, தோலை-நீக்கி வாயில் போட்டவுடன் ஒரு-சுவை வருமே?! அதே சுவைதான், மரத்திலிருந்து பறிக்கப்பட்ட பேரீச்சம்-பழத்தில் இருக்கின்றது. மேலும், சப்போட்டா போலவே; பேரீச்சம்-கொட்டை தானாய் பழத்தில் இருந்து பிரிந்து தனியாய் வரும் பாருங்கள்! ம்ம்ம்... அதை சுவைத்தால் தான் அந்த அனுபவம் கிடைக்கும்!! முயன்று பாருங்களேன்... 

ஷ்ருதியைப் பார்க்கும் என் மனநிலை...


     பல-நடிகைகளின் "சாதாரண போஸ் கொண்ட" புகைப்படங்களை(கூடப்) பார்க்கும்போது வரும் "அந்த மாதிரியான எண்ணங்கள்"; ஸ்ருதி(ஹாசன்)-யின் அதீத-போஸ் கொண்ட புகைப்படங்களைப் பார்க்கும்போது வருவதில்லை! உண்மையில், அந்த பெண்ணின் அம்மாதிரியான புகைப்படங்களைப் பார்க்கவே முடிவதில்லை; பார்க்கவேண்டும் என்ற எண்ணம் கூட எழுவதில்லை!! கமலின் மேல் எனக்கிருக்கும் அபிமானம், ஸ்ருதியை என்மகள் போல் பார்க்கும் மனநிலையை கொடுத்திருக்கிறது. என்னதான், நடிப்பு/திரைப்படம் என்றாலும் - இதை "என்னால்" நியாயப்படுத்த முடியவில்லை.

இதை யோசிக்க ஆரம்பித்தவுடன் - பின் ஏன் மற்ற நடிகைகளை; அம்மாதிரியான எண்ணங்களுடன் பார்க்கவேண்டும்?! என்று என்னுள் ஓர் கேள்வி!! 

பதில்?!... 

வேறென்ன? மற்ற நடிகைகளையும் அம்மாதிரியான எண்ணத்துடன் பார்ப்பது(ம்) தவறு(தான்) என்பதை ஒப்புக்கொள்வதை தவிர?!

புருவ-முடி...



சென்றவாரத்தில் ஒரு காலை-நேரத்தில் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டிருந்த போது; என்னுடைய புருவத்தில் "ஒரேயொரு"முடி மட்டும் சற்றே-நீண்டு இருப்பதை பார்த்தேன்! உடனே அதை நறுக்கியபோது பின் வருபவை தோன்றின:
  1. புருவ-முடி மட்டும் ஏன் எப்போது "தானாகவே"ஒரேயளவோடு வளர்ந்து நின்றுவிடுகிறது? இமாதிரி எல்லா முடிகளும் இருந்தால் எப்படி இருக்கும்?? ஒருவேளை... அசிங்கமாய் ஆகிவிடுமோ?!
  2. பெண்கள் மட்டும் ஏன் அடிக்கடி "புருவ திருத்தம்", "புருவ நிறமேற்றம்" போன்ற பலதும் செய்கின்றனர்? அவர்களுக்கு  புருவ-முடி அதிகமாய் வளர்கிறதா?! அல்லது இருப்பதை அவர்கள் அழகுபடுத்திக் கொள்கின்றனரா?!

"சீன வீட்டு-மனை" மற்றும் "சீன ஃபிளாட்"



சென்ற-வாரம் தினமலரில் "சீனப்பாட்டாசு விவகாரம்" குறித்து ஒரு செய்தியைப் படித்தேன். அதைப் படித்ததும்; எனக்குள் பின்வரும் இரண்டு விசயங்கள் தோன்றின:
  1. தமிழில் "பார்லிமெண்டில்" உரையாடியது குறித்தான மகிழ்ச்சியும் அதற்கான பாராட்டும்!
  2. "அடப்பாவி(சீனப்பசங்)களா"! பட்டாசு வரைக்கும் வந்துட்டீங்களா?!

சரி... சரி... அப்படியே "சீன வீட்டு-மனை" மற்றும் "சீன ப்ளாட்" கொண்டு வந்தீங்கன்னா "செத்த; புண்ணியமா போகும்யா"! கண்டிப்பா, நீங்க உள்ள-வந்தீங்கன்னா "இந்த விலையேற்றம்" தானா குறைஞ்சிடும்!! 

ஞாயிறு, ஆகஸ்ட் 03, 2014

வாடகைத் தாய்...



        "எத்தனை குழந்தைகள் வேண்டும்???" என்ற என் முந்தைய தலையங்கத்தை  பலரும் படித்திருக்கக்கூடும். அங்கே கூறியது போல், அது 05.05.2013 அன்று ஒளிபரப்பான "நீயா நானா" நிகழ்ச்சியை அடிப்படையாய் கொண்டது. ஒரு-குழந்தை போதும் என்று சொன்னவர்கள் அனைவரும் பெண்கள் (மனைவிகள்); மறுபக்கம் இரண்டு-குழந்தையாவது வேண்டும் என்றவர்கள் ஆண்கள் (கணவன்கள்). பொருளாதார-நெருக்கடியை தான் பலரும் காரணம் காட்டினர் என்பதை அங்கேயே குறிப்பிட்டு இருந்தேன். உடல்-நிலை சார்ந்த சில நியாயமான காரணங்கள் கூறப்பட்டாலும், பெரும்பான்மையில் கூறப்பட்டது "பொருளாதாரம்" என்ற காரணமே! எனக்கு அது மிகவும் அபத்தமாய் தெரிந்தது. அந்த நிகழ்வு சார்ந்த என்னுடைய பார்வையைத்தான் மேற்குறிப்பிட்ட தலையங்கத்தில் எழுதி இருந்தேன். அதனை தழுவிய பார்வைதான் இந்த தலையங்கமும்! ஆனால், இது எத்தனை குழந்தைகள் வேண்டும் என்ற கேள்வி அல்ல. 

       அந்த நிகழ்ச்சியில் பேசிய ஆண்கள் எல்லோருக்கும் இன்னுமொரு குழந்தையாவது வேண்டும் என்ற ஏக்கம் இருந்தது. அதைப்பற்றி எவரும் பெரிதாய் பேசவில்லை; அவர்களின் ஏக்கமும்/வேண்டலும் அங்கே சரியான விதத்தில் விவாதிக்கப்படவில்லை. அவர்கள் - அதே எண்ணத்துடன் ஏங்கிக்கொண்டு இருக்கும் பல்லாயிரக் கணக்கான நபர்களின் பிரதிநிதிகள். ஒரு பெண்ணின் பிரசவ-வேதனை தெரியாத/அதைப் புரிந்து கொள்ளாத கணவனை விரல் விட்டு எண்ணிவிடலாம்! அதைப்புரிந்தும், ஏன் இந்த ஆண்கள் இப்படி "பிடிவாதமாய்" இருக்க வேண்டும்?! ஏனெனில், குழந்தை பிறக்க ஒரு பெண்ணின் பங்கும் முக்கியமாய் தேவைப்படுகிது; அவளின் கருப்பை தேவைப்படுகிறது. நான் அடிக்கடி குறிப்பிடுவது போல் இறைவன்/இயற்கை தானே பெண்களுக்கு அளித்திட்ட வரம் அது; பெண்களாய் வேண்டி பெறவும் இல்லை! ஆண்கள், வெறுத்து மறுக்கவும் இல்லை!! இது இயல்பாய் நிகழ்ந்தது. கருப்பை இல்லாததால் தான், ஒரு ஆணால் கருவை சுமக்க இயலாது என்பதே நிதர்சனம்.

         கர்ப்பப்பை இல்லாததால், ஆண்களுக்கு குழந்தைகளின் எண்ணிக்கையை வரையறுக்கும் உரிமை இல்லை என்பதும் முறையல்ல! அந்தப்பை இருப்பதால், பெண்கள் தான் அதை நிர்ணயிக்கவேண்டும் என்பதும் முறையல்ல!! இது இருவரும் உடன்பட்டு செய்யவேண்டிய ஒன்று; இங்கே இருவருக்கும் சரி-சமமான உரிமை உண்டு. திடீரென பெருகிவிட்ட பொருளாதாரத்தால் - சென்ற தலைமுறைகள் "குழந்தை வளர்ப்பில்" சிறிது தள்ளாடினார் என்பதை மறுப்பதற்கில்லை! ஆனால், இன்று பொருளாதாரத்திற்கு இணையான வருமானம் இருக்கிறது; மேலும், பெரும்பான்மையில் இருவரும் வேலைக்கு செல்கின்றனர். அதிக வருமானமும் கிடைக்கிறது; மேலும், சென்ற தலைமுறைகள் சொத்து என்ற ஒன்றை (பணம்/நிலம்/பொன்/வீடு இப்படி பல வகையில்) தன் மகளுக்கும்/மகனுக்கும் கொடுக்கின்றனர். இப்படி எந்த விதத்தில் பார்ப்பினும், சென்ற தலைமுறையை விட இந்த தலைமுறையினருக்கு; பொருளாதாரத்திற்கும் அதிகமான வருமானமும்/பொருளும் இருக்கின்றன.

         அப்படி இருக்கையில், சென்ற தலைமுறையினர் பெரும்பான்மையில் குறைந்தது 3 குழந்தைகள் என்று இருந்த நிலையில்; இன்றைய தலைமுறையினர் அதிகபட்சம் 3 குழந்தைகள் என்றாவது இருக்கவேண்டாமா? நான் முந்தைய தலையங்கத்திலேயே குறிப்பிட்டது போல் உடல்-நிலை கோளாறு போன்ற காரணிகள் கொண்டோரை நான் இங்கே கணக்கில் கொள்ளவில்லை. இன்னுமொரு குழந்தையை வளர்க்கும் திராணி இல்லாத கணவன் அல்லது குடும்பம் வேண்டுமானால்; ஒன்றோடு நிறுத்திக்கொள்ளட்டும். அந்த திராணி இருப்போர் செய்யலாமே? அப்படி இருப்போரையும்; பலதையும் சொல்லி அந்த பெண்ணின் மனதை சிதைக்கும் சமுதாயத்தை என்ன செய்வது? சரி, எல்லாம் இருக்கட்டும்; இன்னுமொரு குழந்தை வேண்டும் என்றே ஏங்கும் அந்த கணவன் என்ன செய்யவேண்டும்?? ஒரு பெண்ணின் கர்ப்பப்பைக்கு சரியான திறன் இல்லாதபோது "டெஸ்ட்-டியூப்" என்ற மருத்துவ முறையில் கருத்தரிக்கும் செயலுக்கு அந்த பெண்ணும் தானே ஆதரவு தருகிறாள்?

        அதுபோல, இன்னுமொரு குழந்தை வேண்டும் என்று ஏங்கும் ஒரு கணவன்; ஏன் "வாடகை தாய்" மூலம் பெறக்கூடாது?! இதை ஆதரிக்கும் சட்டங்கள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. சட்டங்களை தாண்டி; எனக்கு இங்கே இருக்கும் நிபந்தனை ஒன்றேயொன்று தான். முதல் குழந்தை நன்கு வளர்ந்தவுடன்; அந்த குழந்தையின் முழு சம்பந்தத்துடன் இது நடக்கவேண்டும். அப்போது தான், முதல் குழந்தையின் சகோதரன்/சகோதரி-ஆய் "வாடகைத் தாய்" மூலம் பிறக்கும் குழந்தை வளரும். இதற்கு ஒரு "குழந்தையை தத்தெடுக்கலாமே?!" என்ற தத்துவ-வாதம் எழும்; என்னுள்ளும் எழுந்தது! எனக்கு பிறக்கும் குழந்தை என்-வித்தாய் இருக்கவேண்டும் என்ற எண்ணம் எனக்கே இருக்கும்போது; மற்றவரிடம் எவருடையதாய் இருந்தால் என்ன?! என்று எப்படி வாதிட முடியும்? ஒரு குழந்தையை தத்தெடுத்து நாளை; ஒவ்வொரு பிரச்சனைக்கும் இந்த சமுதாயம்... அவன் உங்க அப்பன்தானான்னு?! கேளுன்னு சொல்லுமே! ஏனோ, "யார் தாய்; என்பதை" இந்த சமூகம் பெரிதாய் ஆராய்வதில்லை!!

    ஒருவரின் வித்து "டெஸ்ட்-டியுப்" மூலமாய் கருவாக்கப்பட்டு பின்னர் அவரின் மனைவியின் கருப்பையை அடையும் போது; அது சட்டத்தாலும்/மனோ-தர்மத்தாலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதேதான் "வாடகைத் தாய்" எனும் செயலிலும் அல்லவா? இரண்டிலும் ஒருவரின் வித்து நேரடியாய் மனைவியை சென்றடையவில்லை தானே? டெஸ்ட்-டியூப் எனும் முறையில்; ஒரு பெண்ணின் கருப்பை வெறும்-தங்குமிடமாய் தானே?! பார்க்கப்படுகிறது? அங்கே உணர்வும்/உறவும் இல்லை என்பது உண்மையானால்; வாடகைத் தாய் விசயத்திலும் அப்படியே இருக்கவேண்டும். ஏன், இரண்டிலும் மாறுபட்ட கருத்துகள்/உடன்பாடுகள்?. எனக்கென்னவோ?! இரண்டாவது குழந்தைக்கு பொருளாதாரம் மட்டுமே ஒரு பெண் காரணம் என்று கூறும்போது; அங்கே அவள் கணவனின் ஆசையும்/ அவனின் உரிமையும் மறுக்கப்படுகிறது. இது தவறில்லை என்றால் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதும் தவறில்லை என்றே தோன்றுகிறது. மேலே குறிப்பிட்ட வண்ணம்...

முதல் குழந்தையின் மனப்பூர்வமான சம்மதம் மட்டுமே முக்கியம் என்று தோன்றுகிறது!!!

(திருட்டு)கல்யாண சாப்பாடு...



  இளங்கலை-அறிவியல் சென்னை மாநிலக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நேரமது. அப்போதெல்லாம், என்னப்பனின் பணத்தில், செலவு செய்து கொண்டிருந்த காரணத்தால் - நான் "உணவிற்கு கூட" அதிகம் பணம் செலவழிப்பதில்லை! எங்கள் விடுதியில் "குத்தகை அடிப்படியில்"தான் உணவு-விடுதி நடக்கும்; குத்தகைக்காரர் பணம் போதவில்லை என்று உணவு-விடுதியை "அடிக்கடி" மூடி விடுதல் சர்வ-சாதாரணமாய் நடக்கும் ஒன்று. அப்படி மூடிவிடும் வேலையில்; வெளியில் உணவகத்தில் சாப்பிட வேண்டும்; திருவல்லிக்கேணியில் "முரளி கஃபே" என்ற ஒரு உணவகம் மிகவும் பிரசித்தி பெற்றது. இன்றும் இருக்கிறதா? என்று தெரியவில்லை! அங்கே தான் உணவு-விடுதி மூடப்படும் நாட்களில் சாப்பிடுவது வழக்கம்; ஒரு நாளைக்கு 10-உரூபாய் என்பது என் கணக்கு. காலை/இரவு "ஒரு ப்ளேட்" சாம்பார்-இட்லி! மாலை "ஒரு ப்ளேட்" பரோட்டா! சாம்பார்-இட்லி 2.50 உரூபாய்; பரோட்டா 5 உரூபாய். 10 உரூபாய் கணக்கு சரியாகிவிடும்; எத்தனை நாளானாலும், இதேதான் என் உணவு முறை. 

        விளையாட்டாய் ஓர்நாள் ஒரு திருமண-மண்டபத்தில் சாப்பிடலாம் என்று நானும்; என் நண்பர்களும் முடிவெடுத்து உள்ளே சென்று "மிகுந்த பயத்துடன்" சாப்பிட்டுவிட்டோம். எங்களுக்கும், அந்த திருமணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை! இப்படியாய், தொடர்ந்து அடிக்கடி ஏதாவது ஒரு திருமணத்தில் சென்று சாப்பிடும் வழக்கம் அதிகமானது. ஒருமுறை, என் நண்பனின் - தந்தையின்; நண்பரின், நண்பர் வீட்டு - முகம்மதியர் திருமணம் ஒன்று! மட்டன்-பிரியாணி என்றான் நண்பன்!! வாயில் எச்சில் ஊறிற்று!! பலவிதமான ஆலோசனைகளுக்கு பிறகு அங்கு சென்று சாப்பிடவும் ஆரம்பித்து விட்டோம். அருமையான சாப்பாடு! சாப்பிட ஆரம்பித்ததும், வீடியோ-எடுப்பவர் தொடர்ந்து எங்களையே எடுப்பதாய் ஒரு உணர்வு! அவசர, அவசரமாய் சாப்பிட்டுவிட்டு; பயத்துடன் ஒருவழியாய் அங்கிருந்து கிளம்பி வந்துவிட்டோம். அன்று - எங்கள் அனைவரின் மனதிலும் அப்படியொரு குற்ற உணர்வு; பெருத்த அசிங்கமாய் தோன்றியது. அந்த முகம்மதியர் வீட்டு பிரியாணிதான்...

நாங்கள் திருட்டுத்தனமாய் சாப்பிட்ட இறுதி கல்யாண சாப்பாடு!!!     

"சென்று சேருமிடம்" பொறுத்தே சிறப்பு!!!



       சமீபத்தில் எங்கள் "நிறுவன-தேநீர் அறையில்" பணி புரியும் ஒருவர்; என்னிடம் கடனாய் ஒரு தொகை கேட்டார். பெரிதாய், ஒன்றுமில்லை - நம் மதிப்பில் 8,500 உரூபாய். ஒரு குறிப்பிட்ட தேதியில் தருவதாய் சொன்னார்; நான் அன்று ஊரில் இருக்கமாட்டேன் என்பது எனக்கு தெரியும். என்மகளின் பிறந்த நாளை கொண்டாட முன்பே பயணச்சீட்டு எல்லாம் வாங்கியாகி விட்டது. நான், அதை சொல்லவில்லை; அவர் கேட்ட ஒரு மணி-நேரத்தில் கொடுத்துவிட்டேன். அவர் மலையாளம் பேசும் அன்பர்; அவன் என்னிடம் மலையாளத்தில் தான் பேசுவார் - நான் பதிலுக்கு தமிழில் பேசுவேன். இருவரும், முடிந்த அளவிற்கு புரிந்து கொள்வோம் - இப்படித்தான் நாங்கள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாய் உரையாடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், அவரின் தேவை மிக-முக்கியம் என்பது அவரின் குரலில் தெரிந்தது; பணம் வாங்கிய பின் அவரின் முக-மலர்ச்சியில் தெரிந்தது - மொழிக்கு அங்கே வேலையே இல்லை! மனிதனும், மனிதமும் மேலோங்கி நின்ற தருணம் அது.

       கண்டிப்பாய், அந்த பணம் எனக்கு ஒரு பொருட்டே அல்ல; ஆனால், அதே தொகை ஒருவருக்கு எந்த அளவிற்கு பெரிதாய் இருக்கிறது என்று நினைத்து பெருத்த ஆச்சர்யம்! அப்போது தான், பணம் மட்டுமல்ல; எந்த பொருளானாலும்/உறவானாலும் சென்று சேருமிடம் பொறுத்தே - அது கையாளப்படுவதும்/ சிறப்பு பெறுவதும் உள்ளது என்று தோன்றியது. அவர் செய்யும் "சுவை-நீர்" மிகவும் நன்றாய் இருக்கும்; ஆரம்ப காலத்தில் எனக்கும் செய்து கொடுப்பார். பின்னர், வேலைப்பளுவால் - நான் சில முறை கேட்டும் "கொறைச்சி பிசி! சேட்டன் உண்டாக்கி கொள்ளும்!!" என்று புன்னகையுடன் கூறுவார். அதன் பின், அவர் செய்வது போலவே நானும் முயற்சி செய்து ஓரளவிற்கு பழகி கொண்டேன். அவர் என்னிடம் பணம் வாங்கிய அன்றிலிருந்து; என்னிடம் "செய்து கொடுக்கட்டுமா?!" என்று கேட்க வருவார்; எனக்கும் தெளிவாய் புரியும். ஆனால், நான் எந்த சூழலிலும் அதை கவனித்ததாய் காட்டிக்கொண்டதில்லை. கேவலம்! சிறிய பணத்திற்க்காய்...

அவரின் சுயத்தை; அவர் இழப்பதில் எனக்கு எந்த நாட்டமும் இல்லை!!!

பின்குறிப்பு: அவர் சொன்ன தேதியும் கடந்து - இன்று மேலும் ஒரு மாதம் கூட ஆகிவிட்டது. நான் இன்னமும், அவரிடம் பணம் பற்றி கேட்கவில்லை! இந்த பதிவின் முதல்-பிரதி எழுதும் ஒரு மணி நேரத்திற்கு முன்னர் கூட அவரை சந்தித்தேன். எப்போதும் போல், பேசிவிட்டு வந்துவிட்டேன். கண்டிப்பாய், கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருக்கும்; மேலும், அந்த தொகை எனக்கு நெருக்கடியாய் மாறும் சூழல் இன்னமும் வரவில்லை. பின்னர் ஏன், நான் அவரை கேட்கவேண்டும்?!    

நீயா நானா கோபிநாத்தின் பொறுமை...




"நீயா? நானா?" புகழ் கோபிநாத் அவர்களை போற்றியும்/தூற்றியும் பலரும் இரு பிரிவுகளாய் பேசுவதுண்டு...

எனக்கு, அடிக்கடி திரு. கோபிநாத்தைப் பார்த்து பரிதாபம் தான் எழும். பின்னர், அவரின் பொறுமை தான் என்னை மெய்சிலிர்க்க வைக்கும்! 


ஆம்! பல விவாதங்களில் பலர் பேசுவது "பலரையும் போல்" என்னையும் வெகுவாய் கோபமுற செய்யும்! பல நேரங்களில் - தொலைக்காட்சியை நோக்கி (நான் தனியே இருப்பது அதற்கு ஒரு செளகர்யமும் கூட!) "கண்ணா-பின்னாவென்று" அவர்களை திட்டி இருக்கிறேன். 

அப்படி பேசுபவர்களை - எதிரணியில் இருப்போர் கூட "எதிர்த்து; வாதிக்க" பேசமுடியும். ஏன்?! "சிறப்பு விருந்தினராய்" வருபவர் கூட; அவர்களின் கூற்றை எதிர்த்து/தவறென்று பேசமுடியும். இப்படி, எல்லோரும் - அவரவர் உணர்வுகளை வெளிக்காட்டி பேசும்போது; திரு. கோபிநாத் மட்டும் இறுதி-வரை "இரு சாராரையும்" அனுசரித்து நடுநிலையோடு மட்டுமே பேசவேண்டும் என்ற நிர்ப்பந்தம். பட்டி-மன்றம்/மண்டபம் - இவை போன்றவற்றில் கூட நடுவராய் இருப்போருக்கு அவரின் கருத்தை கூறி தீர்ப்பு வழங்க வாய்ப்பு இருக்கிறது. 

ஆனால், திரு. கோபிநாத் நிலைமை - அதனால், அவரின் "பொறுமை"தான் {என்னதான், அதுதான் அவரின் கடமை எனினும்...} என்னை; அவரை எப்போதும் உயர்வாய் பார்க்கத் தூண்டும்!

காதலும், காமமும் - 2...



"பெரும்"காதலோடு ஒரு ஆணோ/பெண்ணோ இன்னொருவரை நெருங்கும்போது; அதை மற்றொருவர்...

"வெறும்"காமத்தோடு எதிர்கொள்வது/அணுகுவது...

மகா-பாவம்!!!

அனையா விளக்கு மட்டுமா???



"அனையப்"போகும் விளக்கு மட்டுமல்ல...
"கொளுத்தி"யவுடன் எரிய ஆரம்பிக்கும்; 
விளக்கும், " பிரகாசமாய்"தான் எரியும்! 

ஆனால், அது முக்கியமாய் படுவதில்லை! - இது எனக்குள் உதித்தது! அதற்கு நானே கொடுக்கும் நீதி/விளக்கம் பின்வருவது:


"இறப்பை"பற்றி சதா-சர்வ காலமும் சிந்திக்கும் நாம்; நம் பிறப்பு பற்றியும் (பிறந்த நாள் என்ற ஒரு நாள் தவிர!); பிறப்புக்கும்/இறப்புக்கும் - இடைப்பட்ட காலத்தைப் பற்றியும் பெரிதாய் கவனம் கொள்வதில்லை!!

காதலும், காமமும் - 3


.....
நாடகம் முடிந்த பின்னாலும்;
நமைப் பின்னும் தொடர்வது என்ன?
ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே!
உயிர் போகும் மட்டும் உன் நிழலே கண்ணே!!
உயிரே....வா.....!!!
.....

யோவ்! கமலு(ஹாஸா)!!...


எத்தனை பேர் அசிங்கம்/ஆபாசம் என்று "புரியாமல்"பிதற்றினாலும்; காதலையும்/காமத்தையும் சரியான விகிதத்தில் கலந்து

 "உணர/அனுபவிக்க/உணர்த்த" 
தெரிந்த 
"மகான்"யா நீ!!!