திங்கள், ஆகஸ்ட் 10, 2015

மதிப்பிற்குரிய பெண்மணி - திருமதி. குஷ்பு


  
          ஆகஸ்ட் 8-ஆம் தேதி திருமதி. குஷ்பு அவர்கள் தந்தி டி.வி. யின் "கேள்விக்கென்ன பதில்" நிகழ்ச்சியில் பேசினார். தெளிவான/நாகரீகமான/நேர்மையான பேச்சு; அதிலும், நல்ல தமிழில் நேர்த்தியான பேச்சு. ஆங்காங்கே, ஆங்கிலம் வெளிப்பட்டாலும் - பொதுவில் பாராட்டும் விதமான அளவில் அவரது தமிழ் இருந்தது. பொதுவாய் இந்நிகழ்ச்சி அல்லது ஆயுத-எழுத்து நிகழ்ச்சியில் திரு. ரங்கராஜ் பாண்டே அல்லது திரு. ஹரிஹரன் - இருவரில் எவர் பேட்டி எடுப்பினும்; நமக்கே எரிச்சல் வரும் விதத்திலேயே பல-கேள்விகள் கேட்பர். அவற்றை மிகச்சரியான விதத்தில், நேரடியாய் பதில் அளித்தது மட்டுமல்ல! கேள்வியை கூர்ந்து கவனிக்கும் அவரின் பன்பும்; எந்த நேரத்திலும் மாறாத புன்னகையும் - மிகுந்த பாராட்டுக்கு உரியது. சில துளிகள்: 1. ஏன் "காங்கிரஸ்" ஆளும் மாநிலத்தின் விவசாயிகளை திரு. ராகுல் காந்தி சந்திக்கவில்லை? என்ற கேள்விக்கு திரு. ரங்கராஜை வறட்சிக்கு உள்ளான மாநிலங்கள் எவை என கேள்வி கேட்க... 

        திரு. பாண்டேயின் பதிலை வைத்தே அவர்களைத்தானே பார்க்கவேண்டும்; அதைத்தான் செய்தார் என்ற பதில். பேட்டி காண்போர் எதிர்காலத்தில் இப்படி நடக்குமா? அப்படி நடக்குமா?? எனக் கேட்பது வழக்கம். அதற்கு 2. You are thinking by fast-farwarding everything Mr. Pande என்றார்; "சபாஷ்" சொல்லவேண்டிய பதில்! 3. நீங்கள் தானே கட்சியின் செய்தி தொடர்பாளர்; உங்களிடம் தானே யூகங்கள் கேட்கப்பட வேண்டும் என்று கேட்ட போது; ஆம்! ஆனால், கட்சி மேலிடம் முடிவு எடுத்த பின்னர் தான் நான் சொல்லவேண்டும் என்ற விளக்கம். இப்படிப்பட்ட அறிவார்ந்த பதில்கள் ஆகட்டும்; அரசியல் நிகழ்வுகளின் பற்றய ஆழ்ந்த புரிதல் ஆகட்டும் - திருமதி. குஷ்பு பாராட்டுக்குரியவர். என் போலவே... சிலர் குஷ்புவின் இந்த பேட்டியைப் பாராட்டி இருப்பதை முக-நூலில் காண முடிந்தது. ஆனால், வழக்கம் போல் சில பதிவர்கள் அவரைப் பற்றி கீழ்த்தரமாய் கருத்து தெரிவித்திருந்தனர். அப்படிப்பட்ட பதிவுகளில், பலரும்... 

        "தே--யா!" என்று சொல்லி அவரைத் தூற்றுவதைப் பார்த்தபோது செய்வதறியா கோபம் எழுந்தது. அதே கோபத்தில் ஏதாவது எழுதவேண்டும் என்று எண்ணி... நானும் அத்தவறை செய்யவேண்டாம் என்று நகர்ந்து விட்டேன். பொதுவாழ்வில் உள்ளவரை விமர்சிக்கும் உரிமை நமக்கு இருப்பதை நான் மறுக்கவில்லை! ஆனால், எந்த நிலையிலும் நாகரிகம் இழந்து; ஒருவரைத் தனிப்பட்ட முறையில் தூற்றுதல் பெருந்தவறு, அதற்கு எவருக்கும் உரிமையில்லை! இதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆங்கே, திருமணத்திற்கு முன் உடலுறவு பற்றிய கேள்விக்கான அவரின் பதிலையும் சிலர் குறிப்பிட்டு பேசியிருந்தனர். அதை ஒரு நிருபர் ஒரு பெண்மணியிடம் கேட்டது தவறென்றோ/அநாகரீகமென்றோ எவரும் யோசிக்கவில்லை; ஆனால், அதற்கும் துணிச்சலாய் பதில் சொன்ன ஒரு பெண்மணியைத் "கீழ்த்தரமான" வார்த்தைகள் கொண்டு தூற்றுகின்றனர். இதைக் கூட நான் முன்பே எழுதி இருக்கிறேன். எவர் எப்படி சொன்னாலும்...

என்னளவில் - திருமதி. குஷ்பு அவர்கள் "மதிப்பிற்குரிய பெண்மணி"!!!

பின்குறிப்பு: இந்த பேட்டியின் பிரதி "யூ-டியூபில்" இருப்பதாய் சில பதிவுகள் குறிப்பிடுகின்றன. விருப்பமும்/நேரமும் இருப்போர் ஒருமுறை அந்த பேட்டியைக் காணுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக