ஞாயிறு, ஜூன் 16, 2013

குறை - சொல்லிலா, பொருளிலா???



காதலை, கவிதையாய்;
காமமும் - கலந்திட்டு!
கன்னியவளிடம் கொடுத்தேன்!!
"கா(ளி/ளை)யாய்-சீறிடுவாளோ?" என்றஞ்சி;
கண்ணைக்கூட அசைக்காது;
காத்திருந்தேன் - பதிலுக்காய்!!!

கண்ணியவளும், கம்பீரமாய்!
கண்ணை அசைக்காது;
கூறிட்டாள் - "ஒத்துவராதென்று"!!
கதறி-அழக்கூட நேரமின்றி;
கேட்டேன் கேள்வியொன்றை;
"குறையேதும்" உண்டோவேன்று!!!

குறை-சொல்லிலாலா, பொருளிலா?
கேள்வியின் - கருப்பொருளை;
கூடுதலாய், விளக்கிட்டேன்!
காலதாமதமின்றி சொல்லிட்டாள்;
குறை-என் பொருளிலென்று!!
குறையா? பொருளிலா??

கேள்வியின்-க(ண/ன)ம் நீண்டது!
குறையேதும் இல்லையே-என்;
கவிதையில்! என்றேன்;
குறை-கவிதையில் அல்லவென்றாள்!!
கண்ணை-திறக்கவே முடியாது;
கண்ணயர்ந்து நின்றேன்!!!

குறை-பின் எதிலில்?
கேள்வி-எழுந்தது; என்னுள்ளே!
குறையிருப்பது - இதுவென்று;
கண்ணுயர்த்தி - கூறிட்டாள்!!
"காரும்; பங்களாவும்"
குறைகிறது என்றாள்!!!

காதலும் - காமமும்;
கவிதையும்(கூட) அழிந்தது!
குறை - "இப்"பொருளிலா?
காதலின் - இல்லக்கணம்;
"கிடக்கட்டும்"!! - அடிப்படை;
"கூடவா" மறந்துபோனது???

குறை-என்னவென்று புரிந்தது!
காதலில் - காமத்தில்;
கவிதையில்(கூட) அல்ல!!
"காதலியவள்" - குறையென்று;
கண்ணை -  மட்டுமல்ல;
கழுத்தையும்  உயர்த்தினேன்!!!

கணமும்; தாமதிக்காது!
கன்னியவளுக்கு - விடைசொல்லி;
கண்ணியமாய் - விலகிட்டேன்!!
காதலில் - காமத்தில்;
கவிதையில்(கூட) - எப்போதும்;
குறை-வர வாய்ப்பேயில்லை!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக