திங்கள், பிப்ரவரி 12, 2018

குறள் எண்: 0925 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 093 -  கள்ளுண்ணாமை; குறள் எண்: 0925}

கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்

விழியப்பன் விளக்கம்: பணம் போன்ற பொருளைக் கொடுத்து, கள் போன்ற திரவத்தை அருந்தி; உடல் மயக்கத்தைப் பெறுவது, பிறவிப்பயனை உணராத மயக்கத்துக்கு நிகராகும்!
(அது போல்...)
ஓட்டு போன்ற உரிமையை விற்று, தொலைக்காட்சி போன்ற இலவசத்தைப் பெற்று; சுய அடையாளத்தை இழப்பது, பரிணாம வளர்ச்சியடையாத அடையாளத்தை அளிக்கும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக