வியாழன், ஆகஸ்ட் 31, 2017

அதிகாரம் 076: பொருள் செயல்வகை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 08 - கூழியல்; அதிகாரம்: 076 - பொருள் செயல்வகை

0751.  பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
           பொருளல்லது இல்லை பொருள்

           விழியப்பன் விளக்கம்: பொருளற்ற வாழ்க்கையை வாழ்பவரையும், பொருட்படுத்தச் 

           செய்வது; செல்வமெனும் பொருளைத் தவிர்த்து, வேறெந்தப் பொருளும் இல்லை.
(அது போல்...)
           செயலற்ற இயல்பை உடையவரையும், செயல்பட வைப்பது; சிந்தனையெனும் செயலைத்
           தவிர்த்து, வேறெந்த செயலும் இல்லை.
      
0752.  இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
           எல்லாரும் செய்வர் சிறப்பு

           விழியப்பன் விளக்கம்: 
தகுதிகள் பலவிருந்தும், செல்வம் இல்லாதவரை எல்லோரும் 
           இகழ்வர்! தகுதி இல்லாத போதிலும், செல்வம் உள்ளவரை எல்லோரும் போற்றிடுவர்!
(அது போல்...)
           பட்டங்கள் பலவிருப்பினும், ஞானம் இல்லாதவரை அனைவரும் தூற்றுவர்; பட்டம் இல்லாத 
           போதிலும், ஞானம் உள்ளவரை அனைவரும் பாராட்டுவர்.
           
0753.  பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
           எண்ணிய தேயத்துச் சென்று

           விழியப்பன் விளக்கம்: 
செல்வமென்னும் பொய்க்காத விளக்கின் ஒளி; எண்ணிய எல்லா 
           இடங்களையும் சேர்ந்து, இருளென்னும் துன்பங்களைத் தகர்க்கும்!
(அது போல்...)
           அறமென்னும் பழுதடையாத நங்கூரத்தின் வேகம்; திட்டமிட்ட எல்லா பகுதிகளையும் 
           சேர்ந்து, சோம்பலெனும் தடைகளை வெல்லும்!

0754.  அறனீனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து
           தீதின்றி வந்த பொருள்

           விழியப்பன் விளக்கம்: 
பின் விளைவுகளை உணர்ந்து, தீமை ஏதுமின்றி கிடைத்த செல்வம்; 
           அறச்செயல்களை மட்டுமல்லாமல், மகிழ்ச்சியையும் பெருக்கும்!
(அது போல்...)
           தொடர் நிகழ்வுகளை அறிந்து, ஒழுங்கீனம் ஏதுமின்றி செய்த செயல்; நற்சிந்தனைகளை 
           மட்டுமின்றி; நேர்மையையும் அதிகரிக்கும்!

0755.  அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
           புல்லார் புரள விடல்

           விழியப்பன் விளக்கம்: 
மக்களுடைய அருள் மற்றும் அன்பும் கலந்து, குவிந்திடாத செல்வ 
           சேமிப்பை; அரசாள்வோர், விட்டொழிக்க வேண்டும்!
(அது போல்...)
           பெற்றோருடைய அனுமதி மற்றும் ஆதரவு சேர்ந்து, கற்பிக்கப்படாத பழக்க வழக்கங்களை; 
           பிள்ளைகள், அறுத்தெறிய வேண்டும்!

0756.  உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
           தெறுபொருளும் வேந்தன் பொருள்

           விழியப்பன் விளக்கம்: உரிமை கோராத பொதுச் சொத்து/வரி போன்ற வருவாய்/
           பகைவர்களை அழித்தோ அல்லது அடக்கியோ கிடைப்பவை - இவையாவும், பொது 
           மக்களுக்குப் பயனளிக்க வேண்டிய; அரசரின் உடைமைகள் ஆகும்.
(அது போல்...)
           பெற்றோர் சம்பாதிக்காத முன்னோர் சொத்து/வட்டி போன்ற வருமானம்/நற்பேறு மூலமோ 
           அல்லது இலவசமாகவோ கிடைப்பவை - இவையாவும், உதவியற்ற மக்களுக்குப் பகிரப்பட 
           வேண்டிய; பொது உடைமைகள் ஆகும்.

0757.  அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
           செல்வச் செவிலியால் உண்டு

           விழியப்பன் விளக்கம்: அன்பிலிருந்து பிறக்கும், அருள் எனும் குழந்தை; பொருள் எனும், 
            செல்வமிக்க செவிலித் தாயால் வளர்க்கப்படும்!
(அது போல்...)
            வாக்காளரிலிருந்து பிறக்கும், வாக்கு எனும் விதை; செங்கோல் எனும், சக்திவாய்ந்த 
            நேர்மையான ஆட்சியரால் உயிர்ப்பிக்கப்படும்!

0758.  குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
           உண்டாகச் செய்வான் வினை

           விழியப்பன் விளக்கம்: 
கடன் ஏதுமின்றி, நம் கையிலிருக்கும் இருப்பைக் கொண்டு 
           வாழ்வியல் செய்வது; குன்றின் மீதேறி, யானைகளின் சண்டையைப் பார்ப்பது போல் 
           பாதுகாப்பானதாகும்!
(அது போல்...)
           குறை ஏதுமின்றி, நம் சுற்றத்திலிருக்கும் உறவை இணைத்து இல்லறம் நடத்துவது; 
           தந்தையின் தோளேறி, திருவிழாக் கண்காட்சிகளை இரசிப்பது போல் பத்திரமானதாகும்!

0759.  செய்க பொருளைச் செறுநர் செருக்குஅறுக்கும்
           எஃகுஅதனின் கூரியது இல்

           விழியப்பன் விளக்கம்: முடிந்த அளவுக்கு, நேர்மையாய் செல்வத்தைச் சேருங்கள்! 

           பகைவர்களின் அகங்காரத்தை அழிக்கவல்ல போர்க்கருவியைப் பெற, செல்வத்தை விட 
           சிறந்தது ஏதுமில்லை!
(அது போல்...)
           இயன்ற அளவில், ஒழுக்கமாய் இல்லறத்தைப் பேணுங்கள்! காமத்தின் தீவிர்த்தைத் 
           தணிக்கவல்ல காதலை உணர, இல்லறத்தை விட உயர்ந்தது ஒன்றுமில்லை!

0760.  ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
           ஏனை இரண்டும் ஒருங்கு

           விழியப்பன் விளக்கம்: "பொருள்" எனும் வளத்தை, நல்வழியில் மிகுதியாய் சேர்ப்போர்; 
           “அறம் மற்றும் இன்பம்” எனும் மற்றிரண்டு வளங்களை, எளிதில் ஒருசேர அடைவர்!
(அது போல்...)
          "கண்ணியம்" எனும் அறத்தை, தவறாமல் உறுதியாய் பழகுவோர்; “கடமை மற்றும் 
          கட்டுப்பாடு” எனும் மற்றிரண்டு அறங்களைவிரைவில் இணைந்து பெறுவர்!
*****

குறள் எண்: 0760 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 08 - கூழியல்; அதிகாரம்: 076 - பொருள் செயல்வகை; குறள் எண்: 0760}

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு

விழியப்பன் விளக்கம்: "பொருள்" எனும் வளத்தை, நல்வழியில் மிகுதியாய் சேர்ப்போர்; “அறம் மற்றும் இன்பம்” எனும் மற்றிரண்டு வளங்களை, எளிதில் ஒருசேர அடைவர்!
(அது போல்...)
"கண்ணியம்" எனும் அறத்தை, தவறாமல் உறுதியாய் பழகுவோர்; “கடமை மற்றும் கட்டுப்பாடு” எனும் மற்றிரண்டு அறங்களைவிரைவில் இணைந்து பெறுவர்!
*****

புதன், ஆகஸ்ட் 30, 2017

குறள் எண்: 0759 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 08 - கூழியல்; அதிகாரம்: 076 - பொருள் செயல்வகை; குறள் எண்: 0759}

செய்க பொருளைச் செறுநர் செருக்குஅறுக்கும்
எஃகுஅதனின் கூரியது இல்

விழியப்பன் விளக்கம்: நேர்மையான வழியில் செல்வத்தைச் சேருங்கள்! செல்வத்தை விட, பகைவர்களின் அகங்காரத்தை அழிக்கவல்ல; சிறந்த போர்க்கருவி வேறேதுமில்லை!
(அது போல்...)
ஒழுக்கமான வழியில் இல்லறத்தைப் பேணுங்கள்! இல்லறத்தை விட, காமத்தின் தீவிரத்தைத் தணிக்கவல்ல; சிறந்த அறவழி வேறேதுமில்லை!
*****

செவ்வாய், ஆகஸ்ட் 29, 2017

குறள் எண்: 0758 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 08 - கூழியல்; அதிகாரம்: 076 - பொருள் செயல்வகை; குறள் எண்: 0758}

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை

விழியப்பன் விளக்கம்: கடன் ஏதுமின்றி, நம் கையிலிருக்கும் இருப்பைக் கொண்டு வாழ்வியல் செய்வது; குன்றின் மீதேறி, யானைகளின் சண்டையைப் பார்ப்பது போல் பாதுகாப்பானதாகும்!
(அது போல்...)
குறை ஏதுமின்றி, நம் சுற்றத்திலிருக்கும் உறவை இணைத்து இல்லறம் நடத்துவது; தந்தையின் தோளேறி, திருவிழாக் கண்காட்சிகளை இரசிப்பது போல் பத்திரமானதாகும்!
*****

திங்கள், ஆகஸ்ட் 28, 2017

குறள் எண்: 0757 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 08 - கூழியல்; அதிகாரம்: 076 - பொருள் செயல்வகை; குறள் எண்: 0757}

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு

விழியப்பன் விளக்கம்: அன்பிலிருந்து பிறக்கும், அருள் எனும் குழந்தை; பொருள் எனும், செல்வமிக்க செவிலித் தாயால் வளர்க்கப்படும்!
(அது போல்...)
வாக்காளரிலிருந்து பிறக்கும், வாக்கு எனும் விதை; செங்கோல் எனும், சக்திவாய்ந்த நேர்மையான ஆட்சியரால் உயிர்ப்பிக்கப்படும்!
*****

ஞாயிறு, ஆகஸ்ட் 27, 2017

குறள் எண்: 0756 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 08 - கூழியல்; அதிகாரம்: 076 - பொருள் செயல்வகை; குறள் எண்: 0756}

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்

விழியப்பன் விளக்கம்: உரிமை கோராத பொதுச் சொத்து/வரி போன்ற வருவாய்/பகைவர்களை அழித்தோ அல்லது அடக்கியோ கிடைப்பவை - இவையாவும், பொது மக்களுக்குப் பயனளிக்க வேண்டிய; அரசரின் உடைமைகள் ஆகும்.
(அது போல்...)
பெற்றோர் சம்பாதிக்காத முன்னோர் சொத்து/வட்டி போன்ற வருமானம்/நற்பேறு மூலமோ அல்லது இலவசமாகவோ கிடைப்பவை - இவையாவும், உதவியற்ற மக்களுக்குப் பகிரப்பட வேண்டிய; பொது உடைமைகள் ஆகும்.
*****

சனி, ஆகஸ்ட் 26, 2017

“தென்னாட்டின் நான்காம் கடலா?!”


   “பைரவா” திரைப்படத்தின் “நில்லாயோ“ எனத் துவங்கும் பாடலில், திரு. வைரமுத்து அருமையான கற்பனையில், உவமையொன்றைச் சேர்த்திருப்பார். அது - “இவள், தென்னாட்டின் நான்காம் கடலா?!” என கேள்வியாய் வைக்கும் வரியே. மிக அற்புதமான கற்பனை! இம்மாதிரியான உவமைகளில், கவிப்பேரரசுக்கென்று ஓர் தனியிடம் எப்போதுமுண்டு. இவ்வுவமையைச் சிலாகிக்கும் அதே நேரத்தில், ஓர் ஐயமும் எழுகிறது. மாற்றுக் கருத்தேதும் இன்றி, கவிப்பேரரசு “நம் தமிழகத்தை”த் தான் “தென்னாடு” என்கிறார்; அதிலும் முக்கடலை இணைக்கும் முனையை மையப்படுத்தி சொல்கிறார்! அம்முனையின், நான்காம் கடலா, அப்பெண்மகள்? என்றே வியந்து வர்ணிக்கிறார்! என் சந்தேகம் பின்வருவதே: முக்கடல் “மட்டும்” சேர்வதால் தான், அது தென்முனை ஆகிறது; நான்காம் கடல் இணைந்தால் “அதுவோர் தீபகற்பம்” ஆகி, நாற்புறமும் ஒரே கடலால் சூழ்ந்ததாய் ஆகிவிடும். பின்னெப்படி… அதில் “நான்காம் கடல்” இருக்கமுடியும்?

ஏனோ… இவ்வுவமையில் பிழையிருப்பதாய் உணர்கிறேன்! 

- விழியப்பன் (எனும்) இளங்கோவன் இளமுருகு
26082017
www.vizhiyappan.blogspot.com

குறள் எண்: 0755 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 08 - கூழியல்; அதிகாரம்: 076 - பொருள் செயல்வகை; குறள் எண்: 0755}

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்

விழியப்பன் விளக்கம்: மக்களுடைய அருள் மற்றும் அன்பும் கலந்து, குவிந்திடாத செல்வ சேமிப்பை; அரசாள்வோர், விட்டொழிக்க வேண்டும்!
(அது போல்...)
பெற்றோருடைய அனுமதி மற்றும் ஆதரவு சேர்ந்து, கற்பிக்கப்படாத பழக்க வழக்கங்களை; பிள்ளைகள், அறுத்தெறிய வேண்டும்!
*****

வெள்ளி, ஆகஸ்ட் 25, 2017

குறள் எண்: 0754 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 08 - கூழியல்; அதிகாரம்: 076 - பொருள் செயல்வகை; குறள் எண்: 0754}

அறனீனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து
தீதின்றி வந்த பொருள்

விழியப்பன் விளக்கம்: பின் விளைவுகளை உணர்ந்து, தீமை ஏதுமின்றி கிடைத்த செல்வம்; அறச்செயல்களை மட்டுமல்லாமல், மகிழ்ச்சியையும் பெருக்கும்!
(அது போல்...)
தொடர் நிகழ்வுகளை அறிந்து, ஒழுங்கீனம் ஏதுமின்றி செய்த செயல்; நற்சிந்தனைகளை மட்டுமின்றி; நேர்மையையும் அதிகரிக்கும்!
*****

திரு. பார்த்திபன் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு...


           திரு. பார்த்திபன் அவர்களே,

      மேலுள்ள புகைப்படத்தைப் பார்த்தவுடன், எதைப்பற்றி எழுதப் போகிறேன் என்பது புரியும். எனவே, எழுதவிருப்பதைப் பற்றிய முன்னுரை அவசியமில்லை! ஆனால் உங்களின் மீதான என்னைப் போன்றோரின் அபிமானத்திற்கு, ஓர் முன்னுரை கொடுப்பது  அவசியமாகிறது:
  • உங்களின் தனித்தன்மை மட்டுமே, என்னைப் போன்றோர் உங்களின் அபிமானியாக இருக்க காரணம். உங்கள் தன்மையிலிருந்து நீங்கள் "சாதாரணனாய்" மாறிட விரும்பினால், அது உங்கள் உரிமை! அதை, எங்கள் எவராலும் தடுக்க முடியாது. ஆனால், அதைத் தவறென; முறையாய் சுட்டிக் காட்டவேண்டிய கடமை எங்களுக்குள்ளது. என் விமர்சனம் கூட  - "இதுவரை, உங்களைக் கண்ணியம் இழந்து விமர்சிக்காத" மற்ற அன்பர்களை போன்று, உங்கள் மேலிருக்கும் "அக்கறையோடே" எழுதப்படுகிறது.
  • திரைப்படங்கள் மட்டுமல்ல! நடைமுறை வாழ்க்கையிலும் என் போன்றோரை, உம் பால் ஈர்த்தவர் நீங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு, தாய்/தந்தை இருவரின் முதழெழுத்தைச் சேர்த்து "P.S" என்பதை இணைத்து பெயரிட்டது துவங்கி; உங்களின் பொதுசேவை உட்பட, பலவற்றை அதற்கு காரணமாய் சொல்லலாம். அதனால் தான்; திரையுலகில் இருக்கும் பலரின் நடைமுறை வாழ்வுப் பிரச்சனையை, வெறும் செய்தியாய் கடக்கும் பலரால், உம் வாழ்க்கையில் ஓர் பிரச்னை என்றால் "செய்தியாய் கடக்காமல், மனம் வருந்திட" செய்கிறார்கள்.
*******
  • சரி... மேற்குறிப்பிட்ட முன்னரையுடன், விடயத்திற்கு வருகிறேன். ஓர் திரைப்படத்தின் இசை-வெளியீட்டு விழாவில், நீங்கள் பேசிய காணொளியொன்றை மூன்று தினங்கள் முன் முகநூலில் பதிவேற்றம் செய்திருந்தீர்கள். அன்று காலையில் அதைப் படித்தத்தில் இருந்தே; மனது அலைபாய்ந்து கொண்டிருக்கிறது. நான் மட்டுமல்ல! அந்தப் பதிவின் பின்னூட்டங்கள்; ஆயிரக் கணக்கானோர் அதுபோலவே வருந்தியதை உணர்த்தியது. இன்னமும் கூட "நீங்களா, அப்படிப் பேசினீர்கள்?!" என்று நம்பமுடியாமல் வியந்து கொண்டிருக்கிறேன்.
  • பிரபலமான திரைப்படத்தின் இசை-வெளியீடு என்றால், அதில் உங்களின் பேச்சின்றி இருக்க வாய்ப்பே இல்லையெனும் அளவில்; எண்ணிக்கையற்ற இசை-வெளியீட்டு விழாக்களில் நீங்கள் பேசியிருக்கிறீர்கள்! ஆனால், இதுவரை எந்த பேச்சுக்கும் இப்படிப்பட்ட விமர்சனத்தை எவரும் பார்த்ததில்லை! "அதிமேதாவித் தனமாய் பேசுகிறார்!" என்பதே, சிலரின் அதிகப்படியான விமர்சனமாய் இருக்கும். அதைக்கூட, உங்கள் "தனித்துவமான சிந்தனை"க்கு கிடைக்கும் பாராட்டாக(வே) நினைக்கலாம்!
  • "அப்படியிருக்க, உங்களின் அந்தப் பதிவைப் பார்த்தவுடன்; அத்தனை விமர்சனங்கள் ஏன் எழுந்தன?!" - இதை நீங்கள் சிந்திக்க வேண்டாமா?! "அந்த மேடையில் பேசும்போதே உணர்ந்திருக்க வேண்டிய" நீங்கள்; பின் "உங்கள் முதல் பதிவுக்கான" விமர்சனங்களை படித்தவுடனாவது உணர்ந்திருக்க வேண்டும். அதையும் செய்யாமல் "கொடுத்த காசுக்கு மேல் கூவினேனா?!" என்ற தலைப்பிட்ட வேறோர் பதிவையும் இடுகிறீர்கள். இரண்டாவது பதிவைப் படித்தப் பின்னர்தான்; இந்த திறந்த-மடலை "நிச்சயம் எழுதியே ஆகவேண்டும்!" என்ற முடிவுக்கு வந்தேன்.
  • "கொடுத்த காசுக்கு(மட்டும்) கூவுவதும்" அல்லது "கொடுத்ததுக்கும் மேலாய் கூவுவதும்" உங்கள் விருப்பம்! ஆனால் "கூவுதல் என்ற அந்த இயல்புக்கும்/இலக்கணத்துக்கும்" உட்பட்டு கூவ வேண்டாமா? இப்படியா "டையனோசர் கர்ஜிக்கும் அளவுக்கும், சத்தமாய் கூவுவீர்கள்?!"
  • இன்னமும், உங்களுக்கு "அதிகமாய் கூவியது புரியவில்லை எனில்!" - அந்த "முட்டைப் பொடிமாஸ்" செய்தியை உதாரணமிட விரும்புகிறேன். உங்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள்! அந்த செய்தியைச் சொன்ன பிறகு "ஆவது" சூப்பர்-ஸ்டார் போன்ற "மாஸ்"கள் நினைவில் வரவில்லையா?!" அந்நடிரை வைத்து "மாஸ்" படம் உருவாக்கலாம்! என்றால் தவறில்லை! ஆனால், அவரை "வைத்து மட்டும்தான், மாஸ்" படம் உருவாக்க முடியும்! என்பது எப்படி முறையாகும்?
  • "சூப்பர் ஸ்டார் எனும் மாஸை"க் கூட விடுங்கள்! "மாஸ்" படங்கள் என்றால், அவை வெற்றி பெற்ற பின், மற்றவர்கள் கூவ-வேண்டும்! சமீபத்திய உதாரணம் - "பாகுபலி 2"!. அப்படியோர்  "உலக மகா மாஸ்" கொடுத்தவர்கள் கூடவா நினைவுக்கு வரவில்லை?! அவர்களே, எந்த "கூவலும் இல்லாமல்" அத்தனை அமைதியாய் இருக்கும்போது; இப்படிப்பட்ட கூவல் அவசியம்தானா? - அதிலும் "இசை வெளியீட்டு விழா" மேடையில்?!
  • அதே நடிகரின், இரண்டெழுத்து படம் ஒன்றிற்கு "அடுக்குமொழியார்" கூவியதற்கு; கிடைத்த விமர்சனம் நினைவிருக்கிறதா? அதில் கூட, பெருமளவில் "அந்த நடிகரின், போட்டி-நடிகரின் இரசிகர்களின்" விமர்சனங்களே அதிகம்! என்னைப் போன்ற நடுநிலையானோர் கூட "அந்தக் கூவலை" விமர்சிக்க விரும்பவில்லை! ஆனால், உங்களை இப்போது விமர்சிப்போர் - வேறெவரின் இரசிகர்களும் இல்லை! உங்களை இரசிக்கும், உங்கள் இரசிகர்களே! இந்த வேறுபாடு புரிகிறதா? அப்படிப் புரிந்தால், உங்கள் கூவலைப் பற்றி; இனி வேறெவரும் "கூவி"த் தெரிவிக்கவேண்டிய அவசியமில்லை!
  • நீங்கள் பேசியதை; நீங்களே திரும்பக் கேட்டீர்களா? கேட்டிருப்பினும், எங்களுக்காய் இன்னும் ஒருமுறை "நல்ல மனநிலையில் இருக்கும்போது" கேளுங்கள். நிச்சயமாய் சொல்கிறேன்: {பன்ச் ஸ்டைலில் வேண்டுமெனில்} நீங்க ஒருதடவை அந்த பேச்சைக் கேட்டீங்கன்னா; அப்புறம், உங்க பேச்சை நீங்களே இரசிக்க மாட்டீங்க!
  • "நீங்கள் அப்படிப் பேசியதே அபத்தமானது!" அதையும் சமாளிக்க, அவரின் போட்டி-நடிகரைப் பற்றி, ஒரு செய்தியை சொல்லி விளக்கம் சொன்னீர்கள் பாருங்கள்... அதை எப்படி விமர்சிப்பதே என்றே தெரியவில்லை! வெறுமனே சிரிப்பு தான் எஞ்சியது! அந்த தடுமாற்றமே "உங்கள் செயலின் தாக்கத்தை, நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள்!" என உணர்த்தியது. 😊
  • கீழ்வரும் கருத்தை உங்களுக்கு மட்டும் சொல்லவில்லை! இனி "இசை வெளியீட்டு விழா" நடத்தும் அனைவருக்கும் சொல்கிறேன். "இசை வெளியீட்டு விழா" என்பது பாடலையும்/இசையையும்/நடனத்தையும் இணைத்த ஒரு விழா! அதில், பாடல் ஆசிரியருக்கும்/இசை அமைப்பாளருக்கும்/நடன இயக்குனருக்கும் - பாராட்டுகளைச் சொல்லிப் பழகுங்கள்! பாடல் வரிகளின் உன்னதம் குறித்துப் பேசுங்கள்! இசையின் மகத்துவம் குறித்துப் பேசுங்கள்! நடன அசைவுகளை பற்றி சிலாகியுங்கள்! அறிமுக பாடலாசிரியர்/இசையமைப்பாளர்/நடன-ஆசிரியர் எனில் - அவர்களைப் பற்றி, அதிகம் பேசுங்கள். அப்படிப் பேசப் பழகினால் "இம்மாதிரியான கூவல்கள்" குறையத் துவங்கும்! பின், "எந்த"க் கூவலும் அவசியமற்றுப் போய், "பேசப் பழகுவீர்கள்!".
*******
  • இதை எழுதும் முன், உங்கள் மேலிருக்கும் மரியாதைக்காவது, அப்பாடல்களைக் கேட்காமல் எழுதுவது, முறையற்றது என்பதால் எல்லாப் பாடல்களையும் குறைந்தது 5 முறையாவது கேட்ட பின்னே, இதை எழுதியிருக்கிறேன். வழக்கமாய், அந்நடிகரின் படப் பாடல்கள்; விரைவில் பிரபலமாகும்; கேட்கவும் நன்றாக இருக்கும். இறுதியாய் வெளிவந்த படத்தின் பாடல்கள் கூட அப்படித்தான். அதில், கவியரசு அவர்கள் "டப்பாங்குத்து" பாடலைக் கூட மிக அருமையாய் எழுதியிருப்பார். இப்படத்தின் பாடல்களில், எதை இரசித்தீர்கள்? நீங்கள் சொல்வது போல் "ஆளப்போறான் தமிழன்" என்ற பாடல்; பொதுவாய் தமிழர்களுக்கானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை! ஆனால், அந்தப் பாடலின் முன்னுரையைக் கேட்டீர்களா?! அது "பொதுவான தமிழர்களுக்கானதா?!" - அதை ஏன் ம(றந்/றைத்)து போனீர்கள்? "ஏன் இந்த தமிழ் அரசியல்?!" தமிழையும்/தமிழர்களையும் "முதலீடு செய்து" அரசியல்-"வியாபாரம்" செய்ய பலர் இருக்கின்றனர். ப்ளீஸ்... அவர்களின் பிழைப்பில் மண் அள்ளிப் போடாதீர்கள்!
  • குறைந்தபட்சம், பாடல்கள் இரசிக்கும் படியாய் இருந்திருப்பின் கூட; உங்கள் "கூவலை" கொஞ்சம் மறந்திருக்கலாம்! ஆனால்...
*******
  • "திரைத்துறையில் ஊழல் இருக்கிறது!" எனத் திரு. கமல் சொன்ன பிறகு, திரையுலக ஜாம்பவான்கள் அனைவரும்; "இன்றுவரை, மௌனித்து தியானத்தில்" இருக்க, அதை "தைரியத்துடன்" முதல் ஆளாய் உறுதி செய்த "அந்த நேர்மையான" பார்த்திபனைத் தான் நாங்கள் இன்னமும் விரும்புகிறோம். எனவே, இதுவே உங்களின் "முதலும்/இறுதியும்" ஆன கூவலாய் இருக்கவேண்டும் என்பதே எங்கள் ஆவல். ஆனால், முதலிலேயே குறிப்பிட்டது போல்; உங்களின் உரிமையை எங்கள் எவராலும் தடுக்கமுடியாது! நாங்கள், உங்களை (இன்னமும்)நேசிக்கிறோம் திரு. பார்த்திபன்! வாழ்த்துகளுடன், வணங்கி விடைபெறுகிறேன்.
பின்குறிப்பு: தயவு செய்து "கூவு/கூவி/கூவுதல்/கூவிய" என்பன போன்ற வார்த்தைகளை "பேசு/பேசி/பேசுதல்/பேசிய" என்ற வார்த்தைகளால் "பரிமாற்றிப் புரிந்துகொள்ளுங்கள்". மிகத்தெளிவாய் தெரிந்தே செய்த "அச்சுதட்டி"ப் பிழைக்காகக்(கூட), வருத்தம் தெரிவிக்கிறேன். 🙏

- விழியப்பன் (எனும்)  இளங்கோவன் இளமுருகு 
25082017
www.vizhiyappan.blogspot.com 

வியாழன், ஆகஸ்ட் 24, 2017

குறள் எண்: 0753 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 08 - கூழியல்; அதிகாரம்: 076 - பொருள் செயல்வகை; குறள் எண்: 0753}

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று

விழியப்பன் விளக்கம்: செல்வமென்னும் பொய்க்காத விளக்கின் ஒளி; எண்ணிய எல்லா இடங்களையும் சேர்ந்து, இருளென்னும் துன்பங்களைத் தகர்க்கும்!
(அது போல்...)
அறமென்னும் பழுதடையாத நங்கூரத்தின் வேகம்; திட்டமிட்ட எல்லா பகுதிகளையும் சேர்ந்து, சோம்பலெனும் தடைகளை வெல்லும்!
*****

புதன், ஆகஸ்ட் 23, 2017

குறள் எண்: 0752 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 08 - கூழியல்; அதிகாரம்: 076 - பொருள் செயல்வகை; குறள் எண்: 0752}

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு

விழியப்பன் விளக்கம்: தகுதிகள் பலவிருந்தும், செல்வம் இல்லாதவரை எல்லோரும் இகழ்வர்! தகுதி இல்லாத போதிலும், செல்வம் உள்ளவரை எல்லோரும் போற்றிடுவர்!
(அது போல்...)
பட்டங்கள் பலவிருப்பினும், ஞானம் இல்லாதவரை அனைவரும் தூற்றுவர்; பட்டம் இல்லாத போதிலும், ஞானம் உள்ளவரை அனைவரும் பாராட்டுவர்.
*****

செவ்வாய், ஆகஸ்ட் 22, 2017

கசிந்திடும் கண்ணீரைத் "திரும்பிடச்" செய்யய்யா...


        "கசிந்திடும் கண்ணீரைத் திரும்பிடச் செய்யய்யா...!" - பாகுபலி 2 திரைப்படத்தின் "வந்தாய் அய்யா!" எனத் துவங்கும் பாடலின் இந்த மிக ஆழ்ந்த அர்த்தமுள்ளது. பாடலாசிரியர் திரு. மதன் கார்க்கி எந்த எண்ணத்தில், இந்த வரியை எழுதினார் என்று தெரியவில்லை! "திரும்பிட செய்யய்யா" என்பதை, வெகு நிச்சயமாய் "துடைத்து விடய்யா" என்ற சாதாரண அர்த்தத்தில் எழுதி இருக்க மாட்டார் என்றே  எண்ணுகிறேன். ஆம்... "துடைத்து விடுவதற்கும்" மற்றும் "திரும்பிட வைப்பதற்கும்" நிறைய வித்தியாசம் உண்டு. எந்தவொரு துன்பத்தின் போதும், எவரேனும் கண்ணீரைத் துடைத்து; அத்துன்பத்திலிருந்து விடுபட வைக்கமுடியும். ஆனால், அது அந்த நேரத்திற்கான மாற்று மட்டுமே; பல துன்பங்கள், நம்மை மீண்டும்/மீண்டும் நினைவலைகள் மூலம் புரட்டிப்போடும். சரி, இது இயல்புதானே? ஆம்... இயல்புதான்! அடியோடு மாற்றிட முடியுமா?! என்றால்... மாற்றிட முடியும்! ஆனால், சாமான்யர்களால் முடியாது! பின் எவரால்...?

     பாகுபலி போன்ற ஒருவரால்! ஆம், கதைக்களத்தின் அடிப்படையில்; பாகுபலி மிகப்பெரிய பலசாலி! அவனால், முடியாதது எதுவுமே இல்லை; அதுதான், அந்தப் பாத்திரப்படைப்பின் பிரம்மாண்டம்! அதுதான், படத்தின் பிரம்மாண்டமும்! எனவே, அப்படியொருவனிடம் சாதாரணர் போன்று "வெறுமனே, துடைத்து விடய்யா!" என்று வேண்டாமல்; திரும்பிடச் செய்யய்யா என்று வேண்டுகின்றனர் மக்கள். ஆம்... கண்ணீரை மீண்டும் திரும்பிட வைத்து; அத்துன்பம் நேரும் முன்; அத்துன்ப நிகழ்வையே அழித்து விடய்யா! என வேண்டுவதாய் தோன்றுகிறது. அதுதான், பாகுபலியை சாதாரணர்கள் இடமிருந்துப் பிரித்து, வெகு உயரத்தில் வைக்கும்! இந்த அர்த்தத்தில் தான் பாடலாசிரியர் எழுதியிருப்பார் என்று தோன்றுகிறது. "புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?" என்பது போல்; திரு. வைரமுத்துவின் மகனான திரு. மதன் கார்க்கி இப்படியோர் அர்த்தத்தில் எழுதி இருப்பின், அதில் வியப்பேதும் இருக்கமுடியாது. தொடரட்டும் அவரின் சிந்தனைகள்!

*******

பின்குறிப்பு: முதன்முதலாய், இப்பாடலை என்னவள் மற்றும் என்மகளோடு கேட்கும்போது; இதை விளக்கி "எப்படி எழுதியிருக்கார் பாரு! என்னவொரு சிந்தனை?" என்று, என்னவளிடம் சிலாகித்தேன். அதன் பின், ஒவ்வொரு முறை இப்பாடல் ஒலிக்கும்போது; என்மகள், என்னவளிடம் "கசிந்திடும் கண்ணீரைத் திரும்பிடச் செய்யய்யா!"; அம்மா! எப்படி எழுதியிருக்கார் பாரேன்! என்று சொல்லி, அவளும் சிலாகிப்பாள்! அவளுக்கு என்ன புரிந்தது என்பது சரியாய் தெரியவில்லை! ஆனால், அதை அவள் சொல்லும் அழகே - அதீத சிலாகிப்புக்கு உரியது.

- விழியப்பன் (எனும்) இளங்கோவன் இளமுருகு 
22082017

குறள் எண்: 0751 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 08 - கூழியல்; அதிகாரம்: 076 - பொருள் செயல்வகை; குறள் எண்: 0751}

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்

விழியப்பன் விளக்கம்: பொருளற்ற வாழ்க்கை வாழ்வோர்க்கு, மதிப்பை அளிப்பது;  செல்வம் எனும் பொருளைத் தவிர்த்து, வேறெந்தப் பொருளும் இல்லை.
(அது போல்...)
செயலற்ற வாழ்க்கை வாழ்வோரை, செயல்பட வைப்பது; சிந்தனை எனும் செயலைத் தவிர்த்து, வேறெந்தச் செயலும் இல்லை.

ஓர் தந்தயின் சிறப்பு...

திங்கள், ஆகஸ்ட் 21, 2017

அதிகாரம் 075: அரண் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 075 - அரண்

0741.  ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தன்
           போற்று பவர்க்கும் பொருள்

           விழியப்பன் விளக்கம்: போர்களை வென்று மக்கள் பணியாற்றுவோர்க்கு, அரண்
           முக்கியமானது; போருக்குப் பயந்துத் தம்மைக் காக்க முயல்வோர்க்கும், அரணே
           முக்கியமானதாகும்.
(அது போல்...)
           அறத்தைப் பழகி நற்செயல் புரிவோர்க்கு, மனசாட்சி புனிதமானது; அறத்துக்குப் புறம்பாகித்
           தம்மைச் சிதைத்துக் கொள்வோர்க்கும், மனசாட்சியே புனிதமானது.
      
0742.  மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
           காடும் உடையது அரண்

           விழியப்பன் விளக்கம்: தெளிந்த நீர்பரப்பும்/புதர்களற்ற அகன்ற நிலமும்/உயர்ந்த
           மலைத்தொடரும்/படர்ந்த நிழலுடைய அடர்ந்த காடும் - கொண்டிருப்பதே, இயற்கையான
           அரண்களாகும்.
(அது போல்...)
           மலர்ந்த புன்சிரிப்பும்/வஞ்சமற்ற பரந்த நட்பும்/சிறந்த அறத்தழுவலும்/பரஸ்பர புரிதலுடைய
           ஆழ்ந்த அன்பும் - இருப்பதே, அடிப்படையான குணங்களாகும்.
           
0743.  உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
           அமைவுஅரண் என்றுரைக்கும் நூல்

           விழியப்பன் விளக்கம்: ஏற முடியாத உயரம்/ஊடுருவ முடியாத அகலம்/தகர்க்க முடியாத
           உறுதி/கணிக்க முடியாத அமைப்பு - இந்நான்கும் அமையப் பெற்றதே, அரண் என்று
           மறைநூல் உரைக்கும்.
(அது போல்...)
           மறுக்க முடியாத அன்பு/பிரிக்க முடியாத பிணைப்பு/அழிக்க முடியாத நம்பிக்கை/சிதைக்க
           முடியாத குடும்பம் - இந்நான்கும் கிடைக்கப் பெற்றதே, வம்சம் என சமுதாயம் போற்றும்.

0744.  சிறுகாப்பின் பேரிடத்தது ஆகி உறுபகை
           ஊக்கம் அழிப்பது அரண்

           விழியப்பன் விளக்கம்: காவல் வீரர்கள் நிற்குமிடம் சிறியதாகி, மற்றவிடங்கள் அகன்று
           பரந்தாதாகி; போரிட வரும் பகைவர்களின், வலிமையை அழிப்பதே அரணாகும்.
(அது போல்...)
           மாவட்ட நிர்வாகிகளின் ஆதிக்கத்தைக் குறைத்து, பொதுமக்களின் உரிமையை
           அதிகமாக்கி; ஊழல் செய்யும் கயவர்களின், ஆதிக்கத்தை அழிப்பதே கட்சியாகும்.

0745.  கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த்து ஆகி அகத்தார்
           நிலைக்கெளிதாம் நீரது அரண்

           விழியப்பன் விளக்கம்: பகைவரால் கைப்பற்ற இயலாததாய், எல்லோர்க்கும் உணவை
           அளிப்பதாகி; உள்ளிருக்கும் வீரர்கள் எளிதாய் போரிடும் வாய்ப்பை, அளிக்க வல்லதே
           அரணாகும்.
(அது போல்...)
           பிறரால் குறைகாண முடியாததாய், அனைத்து வளங்களையும் காப்பதாகி; குடியிருக்கும்
           மக்கள் எளிதாய் வாழும் வழியை, வழங்க வல்லதே அரசாகும்.

0746.  எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
           நல்லாள் உடையது அரண்

           விழியப்பன் விளக்கம்: உள்ளிருக்கும் யாவர்க்கும், தேவையான அனைத்தும் கொண்டு;
           பகைவர்கள் தாக்கும்போது அவர்களை அழித்து உதவும், வலிமையான வீரர்களை
           உடையதே அரணாகும்.
(அது போல்...)
           இளைஞர்கள் அனைவருக்கும், தகுதியான வேலையைக் கொடுத்து; பொருளாதார
           நெருக்கடியில் அனைத்தையும் சமாளித்து வெல்லும், திறமையான அலுவர்களைக்
           கொண்டதே அரசாகும்.

0747.  முற்றியும் முற்றாது எறிந்தும் அறைப்படுத்தும்
           பற்றற்கு அரியது அரண்

           விழியப்பன் விளக்கம்: படைகளை அழித்து முற்றுகை இட்டோ, முற்றுகை இடாமல்
           நெருங்கியோ அல்லது உள்ளிருப்போரை வஞ்சனையால் வீழித்தியோ; கைப்பற்றுவதற்கு  
           இயலாததே அரணாகும்.
(அது போல்...)
           விதிகளைத் தளர்த்தி சூழ்ச்சி செய்தோ, சூழ்ச்சி செய்யாமல் திட்டமிட்டோ அல்லது
           உரிமையாளரை அச்சத்தால் பணித்தோ; அபகரித்தலைச் செய்யாததே அறமாகும்.

0748.  முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
           பற்றியார் வெல்வது அரண்

           விழியப்பன் விளக்கம்: முற்றுகையில் திறமடைந்து, பல முற்றுகைகளைச் செய்தவரையும்;    
           பற்றுவதில் திறமடைந்த உள்ளிருக்கும் வீரர்கள் பற்றியதை, வெல்லச் செய்வதே
           அரணாகும்.
(அது போல்...)
           பிரிவினைகளில் கைதேர்ந்து, பல பிரிவினைகளைச் செய்தவரையும்; அன்புடைமையில்
           கைதேர்ந்த குடும்பத்திலிருக்கும் அன்பர்கள் போற்றிட, விலக்கச் செய்வதே உறவாகும்.

0749.  முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
           வீறெய்தி மாண்டது அரண்

           விழியப்பன் விளக்கம்: போர்முனையில் இருக்கும் போது, பகைவர்களைச் சாய்க்கும்
           வண்ணம்; செயலாற்ற வேண்டிய போது, உள்ளிருக்கும் வீரர்களை வீறுகொளச் செய்வதே
           அரணாகும்.
(அது போல்...)
           பொருளாதாரச் சிக்கலின் போது, ஆடம்பரத்தைக் குறைக்கும் வண்ணம்; தேவையான
           தருணத்தின் போது, குடும்பத்து உறுப்பினர்களைப் பொறுப்புணர வைப்பதே
           தலைமையாகும்.

0750.  எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
           இல்லார்கண் இல்லது அரண்

           விழியப்பன் விளக்கம்: எவ்வகை மகிமையை உடையது ஆயினும்; போரை வெல்லும்
           மகிமையற்ற வீரர்களைக், கொண்டிராமல் இருப்பதே அரணாகும்.
(அது போல்...)
           எவ்வித முனைப்பை உடையது எனினும்; ஊழலை ஒழிக்கும் முனைப்பற்ற நிர்வாகிகளைக்,
           கொண்டிராமல் இருப்பதே கட்சியாகும்.

குறள் எண்: 0750 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 075 - அரண்; குறள் எண்: 0750}

எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்

விழியப்பன் விளக்கம்: எவ்வகை மகிமையை உடையது ஆயினும்; போரை வெல்லும் மகிமையற்ற வீரர்களைக், கொண்டிராமல் இருப்பதே அரணாகும்.
(அது போல்...)
எவ்வித முனைப்பை உடையது எனினும்; ஊழலை ஒழிக்கும் முனைப்பற்ற நிர்வாகிகளைக், கொண்டிராமல் இருப்பதே கட்சியாகும்.

மனித உறவுகள்


உடல் உணர்ச்சிகளும்
உள்ள உணர்ச்சிகளும்
புரியாது போயிருப்பினும்...

மனிதவுறவுகள் மலர்ந்திருக்குமோ?!

ஞாயிறு, ஆகஸ்ட் 20, 2017

குறள் எண்: 0749 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 075 - அரண்; குறள் எண்: 0749}

முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்டது அரண்

விழியப்பன் விளக்கம்: போர்முனையில் இருக்கும் போது, பகைவர்களைச் சாய்க்கும் வண்ணம்; செயலாற்ற வேண்டிய போது, உள்ளிருக்கும் வீரர்களை வீறுகொளச் செய்வதே அரணாகும்.
(அது போல்...)
பொருளாதாரச் சிக்கலின் போது, ஆடம்பரத்தைக் குறைக்கும் வண்ணம்; தேவையான தருணத்தின் போது, குடும்பத்து உறுப்பினர்களைப் பொறுப்புணர வைப்பதே தலைமையாகும்.

சனி, ஆகஸ்ட் 19, 2017

குறள் எண்: 0748 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 075 - அரண்; குறள் எண்: 0748}

முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்

விழியப்பன் விளக்கம்: முற்றுகையில் திறமடைந்து, பல முற்றுகைகளைச் செய்தவரையும்; பற்றுவதில் திறமடைந்த உள்ளிருக்கும் வீரர்கள் பற்றியதை, வெல்லச் செய்வதே அரணாகும்.
(அது போல்...)
பிரிவினைகளில் கைதேர்ந்து, பல பிரிவினைகளைச் செய்தவரையும்; அன்புடைமையில் கைதேர்ந்த குடும்பத்திலிருக்கும் அன்பர்கள் போற்றிட, விலக்கச் செய்வதே உறவாகும்.

வெள்ளி, ஆகஸ்ட் 18, 2017

குறள் எண்: 0747 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 075 - அரண்; குறள் எண்: 0747}

முற்றியும் முற்றாது எறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற்கு அரியது அரண்

விழியப்பன் விளக்கம்: படைகளை அழித்து முற்றுகை இட்டோ, முற்றுகை இடாமல் நெருங்கியோ அல்லது உள்ளிருப்போரை வஞ்சனையால் வீழித்தியோ; கைப்பற்றுவதற்கு இயலாததே அரணாகும்.
(அது போல்...)
விதிகளைத் தளர்த்தி சூழ்ச்சி செய்தோ, சூழ்ச்சி செய்யாமல் திட்டமிட்டோ அல்லது உரிமையாளரை அச்சத்தால் பணித்தோ; அபகரித்தலைச் செய்யாததே அறமாகும்.

வியாழன், ஆகஸ்ட் 17, 2017

குறள் எண்: 0746 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 075 - அரண்; குறள் எண்: 0746}

எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்

விழியப்பன் விளக்கம்: உள்ளிருக்கும் யாவர்க்கும், தேவையான அனைத்தும் கொண்டு; பகைவர்கள் தாக்கும்போது அவர்களை அழித்து உதவும், வலிமையான வீரர்களை உடையதே அரணாகும்.
(அது போல்...)
இளைஞர்கள் அனைவருக்கும், தகுதியான வேலையைக் கொடுத்து; பொருளாதார நெருக்கடியில் அனைத்தையும் சமாளித்து வெல்லும், திறமையான அலுவர்களைக் கொண்டதே அரசாகும்.

புதன், ஆகஸ்ட் 16, 2017

குறள் எண்: 0745 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 075 - அரண்; குறள் எண்: 0745}

கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த்து ஆகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்

விழியப்பன் விளக்கம்: பகைவரால் கைப்பற்ற இயலாததாய், எல்லோர்க்கும் உணவை அளிப்பதாகி; உள்ளிருக்கும் வீரர்கள் எளிதாய் போரிடும் வாய்ப்பை, அளிக்க வல்லதே அரணாகும்.
(அது போல்...)
பிறரால் குறைகாண முடியாததாய், அனைத்து வளங்களையும் காப்பதாகி; குடியிருக்கும் மக்கள் எளிதாய் வாழும் வழியை, வழங்க வல்லதே அரசாகும்.

செவ்வாய், ஆகஸ்ட் 15, 2017

குறள் எண்: 0744 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 075 - அரண்; குறள் எண்: 0744}

சிறுகாப்பின் பேரிடத்தது ஆகி உறுபகை
ஊக்கம் அழிப்பது அரண்

விழியப்பன் விளக்கம்: காவல் வீரர்கள் நிற்குமிடம் சிறியதாகி, மற்றவிடங்கள் அகன்று பரந்தாதாகி; போரிட வரும் பகைவர்களின், வலிமையை அழிப்பதே அரணாகும்.
(அது போல்...)
மாவட்ட நிர்வாகிகளின் ஆதிக்கத்தைக் குறைத்து, பொதுமக்களின் உரிமையை அதிகமாக்கி; ஊழல் செய்யும் கயவர்களின், ஆதிக்கத்தை அழிப்பதே கட்சியாகும்.

திங்கள், ஆகஸ்ட் 14, 2017

குறள் எண்: 0743 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 075 - அரண்; குறள் எண்: 0743}

உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவுஅரண் என்றுரைக்கும் நூல்

விழியப்பன் விளக்கம்: ஏற முடியாத உயரம்/ஊடுருவ முடியாத அகலம்/தகர்க்க முடியாத உறுதி/கணிக்க முடியாத அமைப்பு - இந்நான்கும் அமையப் பெற்றதே, அரண் என்று மறைநூல் உரைக்கும்.
(அது போல்...)
மறுக்க முடியாத அன்பு/பிரிக்க முடியாத பிணைப்பு/அழிக்க முடியாத நம்பிக்கை/சிதைக்க முடியாத குடும்பம் - இந்நான்கும் கிடைக்கப் பெற்றதே, வம்சம் என சமுதாயம் போற்றும்.

ஞாயிறு, ஆகஸ்ட் 13, 2017

குறள் எண்: 0742 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 075 - அரண்; குறள் எண்: 0742}

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரண்

விழியப்பன் விளக்கம்: தெளிந்த நீர்பரப்பும்/புதர்களற்ற அகன்ற நிலமும்/உயர்ந்த மலைத்தொடரும்/படர்ந்த நிழலுடைய அடர்ந்த காடும் - கொண்டிருப்பதே, இயற்கையான அரண்களாகும்.
(அது போல்...)
மலர்ந்த புன்சிரிப்பும்/வஞ்சமற்ற பரந்த நட்பும்/சிறந்த அறத்தழுவலும்/பரஸ்பர புரிதலுடைய ஆழ்ந்த அன்பும் - இருப்பதே, அடிப்படையான குணங்களாகும்.