சனி, ஜூலை 27, 2013

முன்னுரை...



      இந்த வாரம் முதல் எனக்கு பிடித்த விசயங்களை, நான் வியந்து பார்த்த விசயங்களை சுருக்கமாய் எழுத எத்தனித்து, இன்னுமொரு பிரிவை உருவாக்கி இருக்கிறேன். விவரித்து எழுதும் வடிவத்தை - வழக்கமாய், எல்லோரும் அழைப்பது போல் - "தலையங்கம்" என்று குறிப்பிடுவது போல் அல்லாது, ஓர் புதிய வடிவில் பெயரிடுதல் வேண்டும் என்று தோன்றியது. எனவே, சிறிது நேரம் செலவிட்டு ஓர் பெயர்-வடிவத்தை கண்டிட்டேன்; இவ்வாறு, வேறெவரும் குறிப்பிடுகின்றனரா என்று எனக்கு தெரியவில்லை! இந்த பகுதியை "மனதங்கம்" என்று அழைக்க விரும்புகிறேன். மனிதனின் உடலில் முதலில் முக்கியமானது "தலை" என்பதால் தான் விவரித்து எழுதும் விசயத்தை "தலையங்கம்" என்று அழைப்பதாய் தோன்றியது!! "மனம்" என்பது "தலை"-க்கு அடுத்த முக்கியமான பகுதி என்பதால்தான் இந்த பிரிவை "மனதங்கம்" என்று பெயரிட்டிருக்கிறேன். மேலும், இதில் என் மனதில் பட்ட/மனதை தொட்ட விசயங்களை எழுத எத்தனிருப்பதாலும், இந்த பெயரிடுதல் மிகவும் பொருத்தமாய் இருப்பதாய் உணர்ந்தேன். இந்த பகுதியின்-பெயர் புதியதாய்/பொருத்தமாய் இருப்பதாய் நீங்களும் நம்புவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது - அவ்வாறே, இந்த பகுதியில் வரும் படைப்புகளும் இருக்கும்.

உங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றிகள் பல!!!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக