ஞாயிறு, ஜூலை 28, 2013

எத்தனை பேருக்கு கிடைத்ததிது/கிடைக்குமிது???




    மேலிருக்கும் புகைப்படங்கள், என்மகளின் 4-ஆவது பிறந்தநாள் (சூலை 2, 2013) கொண்டாட்டத்தின் போது எடுத்தவை! இரண்டு புகைப்படங்களிலும் இருப்பவர் - என்மகளின் வகுப்பு-ஆசிரியை!! அவரை இந்த கொண்டாட்டத்திற்கு அழைத்தது - முழுக்கமுழுக்க என்னுடை செயல். அவரை இம்மாதிரி விழாவிற்கு அழைத்தது சரியில்லை என்று (நேரிடையாகவும்/மறைமுகமாகவும்) சிலர் கூறினர். அவர்கள், இந்த நிகழ்வை எந்த விதத்தில் பார்த்தனர் என்று தெரியவில்லை; என்னுடைய பார்வையும் கோணமும் வேறானது. அவர்களின் கூற்றைப் போல், என்மகளும் - அவளின் நண்பிகளும் சிலமணித்துளிகள் கொண்டாட்டத்தை மறந்து உரைந்துபோய் நின்றது உண்மை! அதைத்தான் முதல் புகைப்படம் உணர்த்துகிறது - குறிப்பாய், என்மகள்! அபூர்வமாய் தான் அவள் இப்படி "பவ்யமாய்" இப்படி நிற்பாள்!! ஆனால், அதன்பின் அவர்கள் இயல்பு-நிலைக்கு திரும்பி விட்டனர். ஆசிரியை/ஆசிரியர் என்பவர் "ஒழுங்க படிக்கலைன்னா??!!" என்று குழந்தைகளை மிரட்டுவதற்காய்-மட்டும் அல்ல!!!

   நம்மில், எத்தனை பேருக்கு 4 வயதில் நமக்கு சொல்லிக்கொடுத்த ஆசிரியை/ஆசிரியரை நினைவிருக்கிறது? 12 ஆண்டுகளும் ஒரே பள்ளிக்கூடத்தில் படித்த/படிக்கும் சிலருக்கு இது சாத்தியமாதல் கூடும்! எவருக்காய் இயற்பியலில் ஆராய்ச்சி செய்யவேண்டும் என்று எண்ணினேனோ, அந்த 12-ஆம் வகுப்பு ஆசிரியரை(யே) அதன் பின் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை - அவருக்காய் நான் ஆராய்ச்சி-படிப்பை படித்தேன் என்பது கூட அவருக்கு(இன்றுவரை) தெரியாது!! அவரை தொடர்பு  கொள்ள இன்றுவரை முயன்றுகொண்டிருக்கிறேன் - இது தான் எதார்த்தம்!!! ஆனால், என்மகளுக்கு - அவளின் ஆசிரியையுடன் அவளின் பிறந்தநாளன்று புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது! அதிலும், 2-ஆவது புகைப்படத்தை போன்றொரு நினைவுச்சின்னம் எத்தனை பேருக்கு கிடைத்திருக்கிறது? வெகுநிச்சயமாய், என்மகள் ஓர் 20 ஆண்டுகள் கழித்து இதற்காய் என்னை மெச்சுவாள் என்ற நம்பிக்கை இருக்கிறது; எனக்கு அதுதான் முக்கியமாய் படுகிறது...

மற்றவர்களின் அர்த்தமில்லாத விமர்சனம் அல்ல!!!    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக