வெள்ளி, அக்டோபர் 11, 2013

விழியப்பனோடு விவாதிப்போம் (01102013)


(விழியப்பனோடு விவாதிப்போம் என்று தலைப்பிட்டு "முக-நூலில்" தொடர்ந்து ஒவ்வொரு விவாதத்தை 2 வாரங்களாய் நடத்தி வருகிறேன். ஏதோ, ஓரளவிற்கு சிலர் விவாதம் செய்கின்றனர். சரி! அதை அப்படியே வலைப்பதிவிலும் பதிந்து வாதத்திற்கு விட்டுவிடலாம் என்றோர் முயற்சி!) 
***************


விழியப்பனோடு விவாதிப்போம் (01102013):

வெகு-நிச்சயமாய் புகைப்படத்தில் உள்ள வாசகத்தை பலரும் படித்திருப்பீர்! அதில் உண்மையும் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். நான் முதன்முதலில் இந்த வாசகத்தை அறிந்தது, என்னவளின் மூலமாய்! அவள் எனக்களித்த முதல்-பரிசில் இந்த வாசகமே இருந்தது.

விவாதத்தை நான் இப்படி துவங்குகிறேன்:

1. ஓர் உறவில் (உதாரணம்: கணவன்/மனைவி) ஒருவர் இதை பின்பற்றி அடுத்தவர் திரும்பி வருவார் என்று காத்திருக்கிறார்; அவர் திரும்பி வரவேயில்லை! இப்போது; முதலாமவர், இரண்டாமவர் எப்போதும் நம்மவராய் இருந்ததில்லை என்றே நினைக்கவேண்டுமா?
2. சரி, இரண்டாமவரும் அங்ஙனமே நினைத்திருந்தால்? இப்போது சொல்லுங்கள்!

(உள்ளீடு: எந்த ஓர் உறவிலும், எத்தனை வாதிட்டும்; எவர் அதிக-அளவில் அன்பு வைத்திருந்தார் என்பதை அறியவோ/முடிவிடவோ முடியாது! அதிலும் குறிப்பாய், அந்த உறவில் விரிசல் இருக்கும்போது!)

என்னதான், நம்மொழியில் இதனை மிக-எளிதாய் "விட்டுக்கொடுத்தல்" என்ற ஒற்றை-வார்த்தையில் கூறி இருந்தாலும் - அங்கும், எவர் (முதலில்)விட்டு கொடுப்பது? எத்தனை காலத்திற்கு/முறை விட்டு கொடுப்பது?? போன்ற கேள்விகள் தொடர்ந்து இருந்துகொண்டே தான் வருகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக