வெள்ளி, அக்டோபர் 11, 2013

விழியப்பனுடன் விவாதிப்போம் (07102013)



விழியப்பனுடன் விவாதிப்போம் (07102013):

நான் என் வாழ்க்கையில் சந்தித்த அனுபவம் கீழ்வருவது!

ஓர் மாமியார் என்னிடம் சொன்னார்! "என்மருமகள், என்னுடைய பெயரனுக்கு ஆசையாய் நான் வாங்கிக் கொடுத்த "முருக்கை" பிடுங்கி எறிந்துவிட்டாள்" என்று! எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது; எப்படி? அந்த மருமகள் அப்படி செய்யலாம் என்று!! எனக்கு அந்த மருமகளையும் பரிச்சயம் என்பதால் அவரிடம் "இப்படி செய்யலாமா? இது நியாயமா?!" என்று கேட்டேன். அந்த மருமகள் சிரித்துக் கொண்டே "அட நீங்க வேற! அந்த முருக்கை 'நாய்' நக்கிவிட்டது!'; அதனால் தான், பிடுங்கி எறிந்துவிட்டேன்" என்றார். மனித-மனம் தான் குறங்கு ஆயிற்றே! நான் உடனே "அடடே! ஏன் இதை அந்த மாமியார் புரிந்து கொள்ளவில்லை" என்று நினைக்க ஆரம்பித்துவிட்டேன். இது தான் பிரச்சனை இங்கே!! நாய் நக்கியதை பார்த்தும் அந்த மாமியார் பொய் சொல்லி இருக்கலாம்! அல்லது அந்த மருமகள் அப்படி ஓர் கதையை பொய்யாய் சொல்லியும் இருக்கலாம்!!

இப்போது அடுத்த கட்டம்: மாமியார், தன் கனவனிடம் "உங்க மருமகள்" என்னை மதிக்கறதே இல்லை; அதை என்னன்னு கேட்கக் கூடாதா?! மருமகள், தன் கனவனிடம் "உங்க அம்மா" என்னை நம்பறதே இல்லை; அதை என்னன்னு கேட்கக்கூடாதா??!! அந்த இரு கனவன்கள் சும்மாவே இருக்க நினைத்தாலும் இவர்கள் விடுவதில்லை. ஆதலால், தந்தை; தன் மகனிடம் "ஏண்டா! உன் பெண்டாட்டியை கொஞ்சம் புரிந்து நடந்துக்க சொல்லக்கூடாதா?!". மகன், தன் தந்தையிடம் "ஏன்! உங்க பெண்டாட்டியை கொஞ்சம் புரிந்து நடந்துக்க சொல்லக்கூடாதா??!!". மாமியார்-மருமகள் பிரச்சனை, இப்போது தந்தை-மகன் பிரச்சனையாய் உருவாக ஆரம்பித்துவிட்டது.

நான் கூறியது - ஓர் வீட்டில் நான் பார்த்த ஒரேயொரு நிகழ்வை தான்! இதுபோல் நூற்றுக்கணக்கான நிகழ்வுகள், பல்லாயிரக்கணக்கான இல்லங்களில் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இப்போது, விவாதத்திற்கான கேள்வி:

இந்த பிரச்சனையை மாமியாரும்; மருமகளும் எப்படி அனுகவேண்டும்? அதை எப்படி தந்தையும்-மகனும் எடுத்து செல்லவேண்டும்??

{குறிப்பு: தயவு செய்து, நீங்கள் கருத்திடும் முன் - இரண்டு "திறமையான" மனைவிகள் (மாமியார் & மருமகள்) நடத்தும் நாடகத்தால்; பாதிக்கப்படுவது இரண்டு "அப்பாவியான" கனவன்கள் (தந்தை & மகன்) என்பதை நினைவில் கொள்ளுங்கள்!!!}

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக