ஞாயிறு, நவம்பர் 09, 2014

முத்தத்தை வட்டிக்கு விடும் கற்பனை...



         ஆலமரம் என்ற திரைப்படத்தில் "தேரேறி வர்றாரு சாமியாடி; தேருக்கு முன்னால கும்மியடி" என்ற பாடலில் "முத்தத்தை வட்டிக்கு தந்தவள! முந்தானை காசாக்கி கொண்டவளே!!" வரும் வரியைக் குறிப்பிட்டு, அந்த கவிஞனின் "கற்பனை வளத்திற்கு" என் வாழ்த்துகளை துணுக்குகள் பகுதியில் பதிந்திருக்கிறேன். அங்கே, குறிப்பிட்டபடி இதனை அக்கவிஞன் நடைமுறையில் சந்தித்து கூட இருக்கக்கூடும். இன்று பல தம்பதியருக்குள் இயல்பாய் கூட "முத்தமிடுதல்" நடப்பதில் பல பிரச்சனைகள் உள்ளன. அவர்களின் உறவுகளுக்குள் இருக்கும் விரிசல் காரணமாய், இம்மாதிரியான செயல்களைப் பற்றி கற்பனையாய் எண்ணிப்பார்ப்பது கூட அவர்களுக்கு இயலாமல் போகிறது. இருப்பினும், வெகுசிலருக்கு அம்மாதிரியான வாய்ப்புகள் கிடைக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை; அதற்கு உதாரணம்தான் இந்த வரி! அந்த கவிஞன் ற்பனையாய் கூறி இருப்பினும்; இதை கூர்ந்து கவனித்து பாராட்ட வேண்டும் என்று தோன்றியது. அதனால், இந்த மனதங்கமும்!

     இந்நிகழ்வை என்னுடைய கற்பனையில் "உன்னுடைய சக்திக்கும் மீறிய அளவில், அசல் இருக்கட்டும்! எவ்வளவு வட்டி ஆனாலும், அசல் அதிகமாய் இருக்கட்டும்; அப்போது தான் உனக்கு வட்டியே அதிகம் கிடைக்கும்!!" என்று காதலன்/கணவன் தன் காதலி/மனைவி இடம் கூறுவதாய் ஒரு கற்பனை செய்தேன். அதற்கு அப்பெண் "டீலக்ஸ் வட்டி" என்று பதில் சொல்வதாய் கற்பனை நீண்டது. அதன் பின், அவன் "சரி! டவுன்-பேமெண்ட் எவ்வளவு?" என்று கேட்பதாயும்; அதற்கு அவள் "100 முத்தங்கள்" என்பதாயும்; பின்னர், அவ்வளவு தானா? என்று அவன் மீண்டும் கேட்பதாயும் என் கற்பனை தொடர்ந்தது. என்னுடைய கற்பனைக்கு முக்கிய காரணம் அக்கவிஞனின் கற்பனையே! இம்மாதிரியான கற்பனைகளை தொடர்ந்து அவ்வப்போது நம் தமிழ் திரைப்பாடல்களில் கேட்டு வருகிறோம். மிக அபூர்வம் எனினும், அவைகளை நாம் தவறாமல் கவனிக்க வேண்டும் என்று தோன்றியது. அட... அட... அட... "முத்தத்தை வட்டிக்கு தருதல்!" - என்னவொரு கற்பனை?!     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக