வெள்ளி, மே 11, 2018

குறள் எண்: 1013 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 11 - குடியியல்; அதிகாரம்: 102- நாணுடைமை; குறள் எண்: 1013}

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு

விழியப்பன் விளக்கம்: உயிர்கள் அனைத்துக்கும், உடம்பே அடிப்படை ஆகும்! அதுபோல் நாணம் என்னும் நன்மையை அடிப்படையாகக் கொண்டதே, உயர்குணம் ஆகும்!
(அது போல்...)
தொழில்கள் அனைத்துக்கும், முதலீடே அடிப்படை ஆகும்! அதுபோல் நேர்மை என்னும் அறத்தை அடிப்படையாகக் கொண்டதே, தொழில்தர்மம் ஆகும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக