சனி, மே 12, 2018

குறள் எண்: 1014 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 11 - குடியியல்; அதிகாரம்: 102- நாணுடைமை; குறள் எண்: 1014}

அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை

விழியப்பன் விளக்கம்: நாணுடைமை தானே சான்றோர்க்கு அணிகலன்? அவ்வணிகலன் இல்லை எனில்; அவர்களின் கம்பீர நடை, நோயுற்றது தானே?
(அது போல்...)
அன்புடைமை தானே இல்லறத்திற்கு கேடயம்? அக்கேடயம் இல்லை எனில்; இல்லறத்தின் உன்னத மாண்பு, பாகாப்பற்றது தானே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக