சனி, ஜூன் 16, 2018

குறள் எண்: 1049 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 11 - குடியியல்; அதிகாரம்: 105 - நல்குரவு; குறள் எண்: 1049}

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது

விழியப்பன் விளக்கம்: தேர்ந்த பயிற்சியால், நெருப்பில் உறங்குவது கூட சாத்தியமாகும்! ஆனால் எவ்வித வலிமையாலும், வறுமையில் உறங்குவது சாத்தியமற்றது ஆகும்!
(அது போல்...)
ஆழ்ந்த பகுத்தறிவால், விதியை வெல்வது கூட இயலும்! ஆனால் எவ்வித சதியாலும், வாழ்வை வெல்வது இயலாதது ஆகும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக