ஞாயிறு, செப்டம்பர் 15, 2013

ஏன் இந்த மொழி-வெறி?



       நேற்று "முக-நூல்" பகிர்வு ஒன்றில் மேற்கூறிய படத்தையும் அதை சார்ந்த கருத்தையும் காண-நேர்ந்தது! "இந்தி"யை தாய்மொழியாய் கொண்டோர் இப்படி கொண்டாடுவதில் எனக்கோ/ இந்த பகிர்வை எழுதியவருக்கோ எந்த ஆட்சேபனையும் இல்லை! அதை, அவர்கள் எல்லைக்குள் வைத்துக் கொள்ளவேண்டும்!! எம்-எல்லைக்குள், நீங்கள் பேசுவதோடு இருக்கட்டும்; விருப்பம் இருப்பின் நாங்களும் பேசுவோம்! ஆனால், உம்மொழி சிறந்த-மொழி என்று எங்கள் இடத்தில் பறைசாற்றிக்கொள்வது நாகரீகமாய் தெரியவில்லை. நானும், என்-தாய்மொழி மீது பற்று கொண்டவன் என்பதை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பதிந்து வருபவனே! சமீபத்தில் கூட "தமிழ் வளர" என்ற விருத்தப்பாவை எழுதி இருந்தேன். ஆனால், அது என்-மொழியை எப்படி வளர்ப்பது என்ற தெளிந்த பார்வையை எடுத்துரைக்க எழுதியது! அதிலும் கூட, வேற்று மொழியை தவறாய் விமர்சிக்கக்கூடாது என்று எழுதி இருந்தேன்; மேலும், என்னை "தமிழ் பேசும் இந்தியன்" என்றே குறிப்பிட்டு இருந்தேன்.

           உங்களின் மொழிப்பற்று, உங்களின் எல்லைக்கு/வரம்புக்கு உட்பட்டு இருக்கட்டும்!  நம் அண்டை மாநிலம் ஒன்றில் "அந்த மொழியை கற்க! இல்லை எனில், அந்த மாநிலத்தை விட்டு விலகுக!!" என்பதை ஆங்கிலத்தில் (??!!) ஓர் கவிதை வடிவில் எழுதி இருப்பர்! என்னதான், அவர்கள் எல்லை என்றாலும் - அம்மொழி தெரியாத காரணத்திற்காய், அந்த மாநிலத்தை விட்டு விலக சொல்ல எந்த ஓர் இந்தியனுக்கும் உரிமை இல்ல?! அப்படியிருக்க, நம் எல்லைக்குள் "பிறர்" வந்து இப்படி எழுதுவதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? ஆம்! எங்கே சென்றனர் "தமிழையும்/தமிழனையும்-காப்பது தம் கடமை" மட்டுமே என்பது போல்-அறிக்கைகள் விடும் "மஞ்சள்-துண்டு"காரரும் (2G பயமா?), கறுப்புத்-துண்டுக்காரரும் மற்றும் கருப்புச்-சட்டைக்காரரும்? ஒருவேளை, இதில் "அரசியல் ஆதாயம்" எதுவும் இல்லையோ?! இவர்கள் அனைவரும் வெறும் "வாய்ச்சொல்" வீரர்களாய் இல்லாமல், முதலில் இந்த பகிர்வில் குரல்-கொடுத்திருப்போர் போன்று தமிழ் எனும் உணர்வை வளர்க்க பாடுபடட்டும்...

பின் தானாய், தமிழன் எனும் உணர்வை ஒவ்வொரு தமிழனும் கொள்வான்!!!       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக