ஞாயிறு, நவம்பர் 03, 2013

விழியப்பனோடு விவாதிப்போம் (03112013)




புகைப்படத்தில் உள்ள வாசகம் போன்ற பலவற்றை, பலரும் கேட்டிருக்கக் கூடும். தமிழில் சொல்லவேண்டுமானால் "கற்பழிப்பு என்பது தவிர்க்கமுடியாது போனால், அமைதியாய் அதை அனுபவியுங்கள்" என்று பொருள் கூறலாம். இதை மேலோட்டமாய் பார்க்கும்போது தவறாய் தோன்றக்கூடும். நானும், அப்படி யோசித்தவனே! ஆனால், ஆழ யோசிக்கும்போது - அவ்வாறு செய்ய முடிந்தால் - அந்த சம்பவம் "உளவியல்" போன்ற பின்விளைவுகளை தவிர்க்கக்கூடும் என்ற அர்த்தத்தில் கூறப்பட்டிருக்கலாம் என்று தோன்றியது!! இது போன்று பல காரணங்களும், இருக்கக்கூடும் என்று தோன்றியது!!!

இது சாத்தியமா?! என்று தெரியவில்லை! ஆனால், இதுபற்றி ஆழ யோசித்தபோது - எனக்கு வேறொரு யோசனை வந்தது. இம்மாதிரி கற்பழிப்பு என்பது தவிர்க்கமுடியாதது என்ற நிலை வரும்போது - பெண்கள், தங்கள் உடைகளை தாமே களைந்து எறிந்துவிட்டு "வாடா, மனித-மிருகமே?! இதற்கு தானே ஆசைப்பட்டாய்" என்று ஆவேசமாய் கதறி - ஓர் இறுதி-முயற்சி செய்து பார்க்கலாம் என்று தோன்றுகிறது. 

என்னுடைய கூற்றிற்கு இது தான் காரணம்: நிர்வாணத்தில், ஆபாசம் இல்லை! காமம் இல்லை!! அங்கே எந்த உணர்ச்சிகளும் இல்லை!!! இப்படி ஓர் பெண் செய்யும் போது - அந்த மனிதமிருகம் தடுமாறிட சாத்தியம் இருக்கிறது. அதை வைத்து, அவனை வீழ்த்த முனையலாம்! அல்லது அந்த மிருகம், செய்வதறியாது - கற்பழிப்பில் இறங்காமல் இருப்பதற்கும் சாத்தியம் இருப்பதாய் படுகிறது.

(குறிப்பு: கோவில்களில் இருக்கும் எந்த நிர்வாண-சிலையும் நம்மில் எந்த உணர்ச்சியையும் தூண்டாதத்திற்கு "வெறும்-பக்தி மட்டும்" காரணம் அல்ல! உண்மையில், இம்மாதிரியான விளக்கங்களை உண்டாக்கக் கூட அங்ஙனம் படைக்கப்பட்டிருக்கலாம்!!)

- இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? வாருங்களேன், விவாதிப்போம்!!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக