ஞாயிறு, ஜூன் 15, 2014

என்மீதான என்காதல்...

(உன் காதலுக்கு; என் "வெண்பா" பரிசும்/பதிலும்!!!)


எழுத்துகளின் உயிர்ப்பினில்;என் அகத்தை கண்டாய்!
       விழித்தெழுந்தாய்!! கவலைகள்சூழ் யுகமும் ஓர்நாள்
ஒழிந்தழிந்தே சுகம்தழுவும் கனாக்கள் யாவும்
       முழுமையாய்உள் செலல்உணர்ந்தாய்; அனைத்தும் எந்தன்
எழுத்துயிரால் நிகழ்ந்தது!ஆம் உரைப்பது யாவும்
       "அழகுசேர்நம் தமிழ்மொழிபோல்" நிலைத்த ஒன்றாம்!
"பழகலாமோ; ஒருவருடன் ஒருவர்?" என்றாய்
        மொழியதன்பால் எனக்கிருந்த உறவால் நானும்;

சரியெனவே தயக்கமேதும் சிறிதும் அற்றே;
        புரிதலையும் உயர்த்தலாம்;வா சிநேகம் என்றேன்!
உரிமையும்;நம் சிநேகமும்-ஓர் விகிதம் என்றாய்;
        சரிசமமாய் "நகமுடன்சேர் சதையும்" போலாம்
கரியினால்,வார் வெளிச்சமாய்;நம் உறவின் பலமும்
         உரியதாம்ஓர் உயரமும்;பேர் உரம்சேர் அன்பால்
அரியதொரு நிகழ்வினால்;சீர் மிகும்ஓர் நாளின்
         சிரிப்புடன்பல் சிறப்புடனும் வளர்ந்து நின்ற;

பொழுதுஒன்றில் தயக்கமாய்ஓர் கலக்கம் வந்தே;
         அழுக்ககன்ற உனதுளத்தின் அடியில் எந்தே;
அழுந்தியூன்றி கிடக்கிறதாம்? எனவே கேட்டேன்!
         அழகிநீயும்! மறுப்பெதுவும் அறவே அற்று
மொழியைகாதல் புரிபவன்;என் அகத்தே "காதல்"
         செழித்துஓங்கும் சுகத்தை;நீயும் சுவைத்தே நிற்கும்
அழகியதோர் கதையுமொன்றை கதைத்தாய்; கேட்டேன்
         "பழிபலவும் புரிந்தவன்போல்" இரும்பன் நானும்!

இனியவள்!என் சிநேகமுன்னை மறந்தும் அஃதாய்
        கனவதிலும் உணர்வுஅற்றும் நினைத்தேன் இல்லை;
எனக்கிருக்கும் குடும்பமே-என் உயிரும், மெய்யும்!
        "எனதவளும்; அழகுசேர்என் மகளும்" போதும்!
எனையுமே;நான் சுயத்துடன்இன் களித்தல்; மேல்சொல்
        எனதிருவர் மிகுந்துஏதும் கொடுத்தால் உண்டாம்!
வினையோ?நீ தயக்கமாய்கேட் டதுவும் சொல்வாய்!
        எனக்கிருக்கும் எனதுமேலாம் "என்காதல்" போதும்!

உனக்குமோர்நல் குடும்பமொன்றும் இருத்தல் உண்டாம்!
       உனதவனும்; உனதரும்-இன் மகனும் கேட்பர்
தினந்தோறும் முனைசிரிதும் குறையா உந்தன்
       இனியதோர்நல் இமயஅன்பை! உணர்வாய் தோழி!
கனத்திடும்-உன் இதயமும்;நல் மனமும் கண்டேன்!
        எனக்கிதையும் கடந்துசெய்தல் எதிலும் இல்லை;
இனக்கமாய்ஓர் உடன்படுதல்! மறந்தும் இஃதால்
        எனைதொடர்தல் தவிர்த்தலாம்!நீ எனக்கும் செய்வாய்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக