ஞாயிறு, நவம்பர் 11, 2012

தீபாவளி...




பாட்டாசும், பட்டாடையும்!
"பட்டாம்பூச்சியாய்" என்மகள்;
பறக்கிறாள் - என்னினைவுகளும்!!
பறக்கின்றன; பின்னோக்கி!!!

எவ்வளவு கடினப்படினும்;
எத்தனை மன-நிறைவு?
என்-பெற்றோரின் - நிறைவுகளை;
ஏனறியவில்லை, இதுவரை???

இப்போதேனும் - உரைத்ததே,
இச்சிரியேனுக்கு; காலம்கடந்து;
இப்போதேனும் - என்பெற்றோருக்கு
இயம்பிடனும் "நன்றிகளை"!

தீப-ஒளி திருநாளது;
தெரியாது - என்மனதே!
தங்கிட்ட - இருளதையும்;
தெளிவாய் அகற்றிற்றே!!!

எத்தனை, ஆச்சர்யங்கள்!
எத்தனை, மகிச்சிகள்!!
எல்லாமும் - கடந்திடினும்;
என்-மகளால், மீண்டன-மீண்டும்!!!

"நாற்பது" அகவையாயினும்;
நான்பெற்ற மகளவள்!
நானறியாத உண்மைகளை;
நாளொவ்வொன்றும் - உணர்த்துகிறாள்!!

இதையுணர்த்திட்ட - என்;
இனியமகளுக்கு மட்டுமல்!
இவ்வையகத்தோர் - அனைவருக்கும்;
இனியதீபாவளி வாழ்த்துக்கள்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக