ஞாயிறு, நவம்பர் 11, 2012

இரண்டாம் ஆண்டு துவக்கம்...



      இந்தப்பதிவு வெளியாகியுள்ள இதே தினம் - சென்ற ஆண்டு (11.11.11) - "விழியப்பன் பார்வை" என்ற இந்த வலைப்பதிவு உருவானது. "வலைப்பதிவை சார்ந்தது" என்ற பிரிவின் கீழ், ஒரு தலைப்பில் - எவ்வாறு பல முயற்சிகளுக்கு பின், சில நபர்களின் உதவியுடன் இவ்வலைப்பதிவு உருவானது என்று முன்பே விளக்கி இருந்தேன். அதே தலைப்பில் விளக்கியபடி இவ்வலைப்பதிவிற்காய் எழுதப்பட்ட "முதல்  தலையங்கத்தை" இந்த வாரம் வெளியிட்டிருக்கிறேன். கடந்த ஆண்டு, 38 வாரங்கள் பதிவுகளை வெளியிட்டிருக்கிறேன்; பதிவுகள் வெளியாகாத 14 வாரங்களுக்கு, பெரும்பான்மையான காரணம் - விடுப்பில் இந்தியா சென்று "என் மகளுடன்" இருந்ததே.

        என்னுடைய வலைப்பதிவு ஏதோ மிகப்பெரிய அளவில் சாதித்துவிட்டதாய் எண்ணம் ஏதும் இல்லை; மிகக்குறுகிய பார்வையாளர்கள் இருப்பினும் தொடர்ந்து படித்து வருவது - வலைப்பதிவின் "புள்ளி-விவரங்கள்" மூலம் அறிய முடிகிறது. ஒரு சிலரையாவது என்னுடைய பார்வை சென்று சேர்ந்திருக்கிறது என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி; இந்த ஆதரவு மேலும், மேலும் தொடர்ந்து எழுதிட - என்னை வழி நடத்தி செல்லும். என்னால் இயன்ற மட்டும், இந்த வலைப்பதிவை தொடர்ந்து நடத்திட திண்ணமாய் உள்ளேன். நான், மீண்டும்-மீண்டும் கேட்டும், இது வரை 10 பின்னூட்டங்கள் கூட வராதது ஓர் குறையே! எல்லாவிதமான பின்னூட்டங்களும் என்னுடைய பார்வையை வலிதாக்கும் என்று நம்புகிறேன்.

        நான் அடிக்கடி குறிப்பிடும் என்-நெருங்கிய நண்பன் என்னுடைய முயற்சியை கண்டு - அவனின் "கன்னிக்-கவிதையை" எழுதினான். அவனுள் அப்படியொரு தமிழ்-திறன் இருப்பது அவனுக்கே கூட அப்போதே தெரிந்தது - எழுதி ஓராண்டாகியும், இன்னமும் அவன் அதை வெளியிடவில்லை. சமீபத்தில் கூட தமிழ் ஈழம் பற்றிய என் தலையங்கத்தை பாராட்டி ஒரு புதுக்கவிதை எழுதியிருந்தான். என்னுடைய தம்பி (சித்தப்பா மகன்) "வினோத்"-உம் - என்னுடைய முயற்சியும் ஓர் காரணமாய் இருக்க - பல கவிதைகள் எழுதி விரைவில், அவனும் ஓர் வலைப்பதிவு ஆரம்பிக்க உள்ளான். இவ்விருவரையும் என்னுடைய இவ்வலைப்பதிவு முயற்சி, அவர்களின் திறனை அறிய செய்ததில் எனக்கு ஓர் திருப்தி.

    இவ்விருவர் மட்டுமல்லாது - மேலும் சில நண்பர்களும் அவர்களுடைய படைப்புகளை ஓர் வலைப்பதிவு துவங்கி வெளியிடுவதாய் கூறினர்; அது பற்றிய மேற்கொன்டு தகவல்கள் ஏதும் இல்லை. அவர்களும், விரைவில் அவ்வாறு செய்திடுவர் என்று நம்புகிறேன். இதுவரை, உங்களின் ஆதரவை தெரிவித்தமைக்கும் - இன்னமும் தொடர இருப்பதற்காகவும் என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன். இவ்வலைப்பதிவின் துவக்க-அழைப்பதில் குறிப்பிட்ட படி, இவ்வலைப்பதிவை எழுதுவது நானாயிருப்பினும்…

இதை எழுச்சி பெறச் செய்(யப்போ)வது நீங்களே!!! 

என்னுடைய திருத்தங்களுடன் - என் நண்பனின் புதுக்கவிதை:

"மப்பு" போடாத  "மாப்பு"
தப்பாது வைக்கிறாயே "ஆப்பு"
அரசியவாதிகளுக்கு கொடுத்தாயே "சூப்பு"
"அப்ரிசியேட்" பன்றான் "(சுரேஷ்)பாபு"        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக