வியாழன், மே 28, 2015

கமலின் கவி, மெய், விஞ் = ஞானங்கள் - 2



மாலா-ஒளியாம்; ஞாயிறும் கூட மற்றோர் யுகத்தில்... போகும் கரிந்தே....ஏஏஏ!
கரிந்தே, கரிந்தே...ஏஏஏ!!
கரிந்து எரிந்தும், வெடித்த பின்னும்; உதிக்கும் குழம்பில் உயிர்கள் முளைக்கும்!!
முளைத்து முறிந்தும், துளிர்க்கும் வாழை; தன் மரணம்-குள்ளே விட்டது விதையை!...
கேளாய் மன்னா... ஓ ஓ ஓ ! கேளாய் மன்னா...!!

விதைத்திடும்-மெய், போல்-ஒரு உயிரை; உயிர்த்து விளங்கும்...
என் கவிதை விளங்கும்!
கவிதை விளங்கும்... ஓ ஓ ஓ !

விளங்கி, துலங்கிடும் வம்சம் வாழ...
வாழும் நாளில் கடமை செய்ய...
"செய்யுள் போல்" ஒரு காதல் வேண்டும்!
காதல் வேண்டும்....
"செய்யுள் போல்" ஒரு... காதல் வேண்டும்!
"செய்யுள் போல்" ஒரு...
ஹேய்...

"வேண்டியதெல்லாம் வாய்த்த ஒருவன்" சாவையும் வேண்டி; செத்த கதைகள்...
"ஆயிரம் உண்டு"!
கேளாய் மன்னா...!
"ஆயிரம் உண்டு"!
ஓ ஓ ஓ !
கேளாய் மன்னா...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக