ஞாயிறு, ஜூன் 10, 2012

உணவும், கற்பனையும்



வெகுநாட்களுக்கு பின்
வெய்யில் தாழ்ந்தஓர்
மாலை நேரத்தில்,
மனதின் ஆழத்தில் -
கற்பனையின் உருதேடி
காட்சிகளில் கவிதேடி
கவிதையின் கருதேடி
கடற்கரை மணலில்!

நண்பர்கள் இருவரும்
நகைக்கின்றனர், கதைக்கின்றனர்;
நானோ அவைகளில்
நாட்டமில்லாது; கற்பனையின்
முனையை பிடிக்க,
முனைப்புடன் இருக்க;
நேரமும் கரைந்தது
'நிமிட'த்திலிருந்து, "மணி"களாய்!!

எத்தனை முயன்றும்,
எதுவும் "கரு"வுறவில்லை;
யோசித்தேன் பிற்பாடு,
ஏன் கூடவில்லைஎன!
காரணம் என்னவென்று
தோரணம் ஏதுமின்றி
விளங்கியது; என்றுமழியா,
வள்ளுவனின் "குறள்"வழியா(ய்)!!!

"வேறில்லை செவிக்கெனில்,
வயிற்றுக்கு - என்றானே!"
வயிற்றில் இடமிருப்பின்,
வழிவரும் அனைத்தும்;
"வலி"யின்றி, செவிசேர்ந்து -
வலிசேர்க்கும் - என்பது(வும்);
வள்ளுவன் சொல்லாது
விளக்கிட்ட பொருளன்றோ???

வயிறுபுடைக்க உண்டு
வேறுவழி ஏதுமின்றி
கடற்கரை சென்று
கடுந்தவமே புரிந்திடினும்
கூடுவது எங்கனம்?
கற்பனையும், கவிதையும்??
பொய்த்துத்தான் போகுமோ;
பெருந்தகையின் பொதுமறையும்???

(பின்குறிப்புஉண்ட உணவு செரிமானம் ஆன பின்பே, "கரு"வும் இக்கவிதையும் உருவானது)  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக