ஞாயிறு, ஆகஸ்ட் 19, 2012

திருமணம்...



திருமணம் - மறுப்பேதுமின்றி,
துருவங்கள் இரண்டை -
இனையாதென்று தெரிந்தே;
இணைக்கும் முயற்சி!
உண்மை உரைக்காது;
உணர வேண்டுமென்று!!
நிதர்சனம் தெரிந்தோர்...
நிகழ்த்தும் சூழ்ச்சி!!!

பொருத்தம் பலவிருந்தும்;
பொதுமையில் பலனென்ன?
ஒன்றுக்கொன்று பொருந்தினும்,
ஒன்றுடனொன்று பொருந்தாதன்றோ??
என்பணம்! என்னினம்!!
என்றெண்ணம் மேலோங்கின்;
இருமனங்கள் ஒன்றாய்
இணைதல் எங்கனம்???

உறவுச்சங்கிலியில் புதியதாய்;
உருவாகும் இணைப்பைவிட!
பழைய இணைப்புகள்;
பாழடைவதே அதிகம்!!
உதிரும் இணைப்புகள்;
உறவுகளை தளர்த்திடும்!!!
உறவுகள் உதறி;
உவர்ப்பாய் வாழ்வதெதற்கு??? 

ஒவ்வாதென்ற "ஓரினச்சேர்க்கை"
ஓங்கி வளர்வது;
ஒத்த துருவங்கள்
ஒன்றையொன்று கவருமென்பதாலா?
ஒவ்வாத இச்சேர்க்கை -
ஒழுக்கத்தை சிதைத்து;
ஒப்பற்ற மனிதத்தை
ஒழித்து விடாதா??

ஆயின்! திருமனமென்ற
அழகியல் அழிந்துவிடாதா?
அழிவை தடுத்து
அழகியல் வளர்க்க;
இறைவனோ, இயற்கையோ
இன்வழி ஈயவில்லையோ??
வலிமறந்து தேடிடின்;
வழியொன்று புலப்படும்!!!

குழந்தை ஒன்று,
குதூகலமாய் வந்திடின்!
பிரிவினைகள் அனைத்தும்;
பின்வாங்கிடும்; பின் -
இல்வாழ்க்கை என்றும்;
இனிதே சிறந்திடும்!!
ஆயினும், அதுவரை;
ஆணவம் ஆதிக்காதிருக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக