ஞாயிறு, டிசம்பர் 01, 2013

திருமணம்...




(என்னுடைய முந்தைய-கிறுக்கல்; இப்போது, முறைபயின்ற-ஓவியமாய்!)
*****


எதிரெதிராம் துருவங்கள் இரண்டை ஒன்றாய்
         இணைப்பதேயாம் திருமணம்!ஆம் தெரிந்தே செய்யும்
விதிவினையாம் இந்நிகழ்வும்! இணைப்போர் சூழ்ச்சி
         செய்தேதான் உண்மைதனை மறைப்பர்; ஆங்கே
துதிபுரிந்தே கைகொடுப்போர் பலரும்! பத்தும்
          இருந்தென்ன பயன்?பத்தில் எதுவும் பந்தம்
புதிதில்சேர் மணமக்கள் குணத்தில் இன்றேல்;
          ஓங்கிடுதல் எங்கனமாம் குடும்பம் ஒன்றும்?

என்பணம் என் இனம்என்ற முதன்மை வந்தால்
          எவர்மனம்தான் ஒக்கும்?யார் உரைப்பர் ஆர்க்கும்?
இன்பங்கள் பலவிருந்தும் புதிதாய் சேர்தல்
          இல்லையாம்ஓர் உறவுமரம் விருத்தம் கூட்ட!
துன்பங்கள் சிலவிருந்தும் கழிதல் மட்டும்
          அதிகரிக்கும் மர்மமும்என்? எவர்தான் சொல்வர்??
இன்னல்கள் துடைக்கும்நம் உறவும் கொன்று
          உவர்ப்பாய்வாழ் தல்எதற்காம்? உணர்தல் நன்றாம்!

குழந்தையும்ஓர் குதூகலமாய் வரும்நாள் எல்லாம்
          மாறிடும்!காத் திருப்போம்அந் தநாளும் ஓர்நாள்
அழகியலாய் வந்திடுமாம்! விருப்பம் சேர்ந்தும்
          வெறுப்பனைத்தும் கலைந்தும்ஓர் தெளிவும் பூக்கும்!
அழுகையையும் அழித்தேநாம் குடும்பம் ஓங்கும்
          ஓர்வழியும் கண்டுணர்ந்து உரைப்போம்! நம்மால்
அழகியல்சேர் திருமணம்நாம் மடிந்தும் என்றும்
          வாழ்ந்திடவே! முயற்சியொன்றும் பயின்றே வீழ்வோம்!!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக