ஞாயிறு, டிசம்பர் 15, 2013

மனிதமும், உறவும் எங்கே சென்றுகொண்டிருக்கிறது???




      தான் பெற்ற மகளை இப்படியா?! ஒருவன் செய்வான்? "என்ன மனுசண்டா நீ???"-ன்னு இன்னுமோர் முறை கதறிட தோன்றுகிறது! இந்த  மாதிரியான தகப்பன்களை என்ன செய்வது? "என்ன மனுசண்டா நீ???" தலையங்கத்தில் நான் பரிந்துரை செய்த தண்டனை சற்றும்-தவறில்லை என்று படுகிறது. இப்படியெல்லாம் செய்ய இவர்களுக்கு எப்படி துணிவு வருகிறது? எவர் இவர்களுக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது?? பெண்ணை(அல்லது மகனை)பெற்றதால் மட்டும் இப்படி செய்யலாமா???   இரண்டு நாட்கள்முன் நாளிதழில் படித்த செய்தி இதுதான்: வங்க-தேசத்தில் ஓர்கிராமத்தில் பக்கத்து வீட்டுக்காரன் ஒருவனுடன் "சீட்டு விளையாடி" அனைத்தும் தோற்ற ஓர்தகப்பன் தன் 13-வயது மகளை திருமணம் செய்து கொடுப்பதாய் ஒப்புக்கொண்டு தோற்றுவிட்டானாம்! அதன்படி திருமணம் செய்து வைக்க இரண்டு-வீட்டாரும் ஏற்பாடுகள் செய்து கொண்டு இருக்கின்றனராம்! பெண்ணுக்கே மிகக்குறைந்த வயது; அவளை மணக்க இரு(ப்ப/ந்த)வனுக்கு இருமடங்கிற்கும் கூடுதலான வயதாம்!!

       நேற்று ஒர்செய்தி: "மது போதவில்லை; வாங்கி வா" என்று சொல்லியதை கேளாத (ஒன்றுவிட்ட)தகப்பனை ஒருவன் கொன்றுவிட்டானாம்! அதாவது, அந்த தாயின் முதல்-கணவனுக்கு பிறந்தவனாம்; கொல்லப்பட்டது இரண்டாம் கணவன். அது கிடக்கட்டும்! பெற்ற தகப்பனா? இல்லை ஒன்றுவிட்ட-தகப்பனா?? என்பதல்ல கேள்வி! இதில், இருவரும் ஒன்றாய் சேர்ந்து வீட்டிலேயே மது அருந்திக்கொண்டு இருந்தனராம். எது எப்படியோ, "மது வாங்கிவரவில்லை" என்பதற்காகவா ஒருவரை கொல்வது? "போதையில்" என்ற வாதமே தவறானது"; அப்படி எனின், ஏன் தலைமறைவாக வேண்டும்?! என்ன கொடுமையடா?? ஏன் இப்படி உறவு(கள்) என்றால் என்னவென்று சற்றும் புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்? இதுபோன்றே, ஏன் கள்ளக்காதல்களும் - அவை சார்ந்த கொலைகளும் தொடர்கின்றன?; பிடிக்கவில்லை என்றால், விவாகரத்து பெற்று (பிடித்தவருடன்)இயல்பாய் வாழலாமே??. விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் வளர்வது கிடக்கட்டும்; உண்மையில்...

மனிதமும், உறவும் எங்கே சென்றுகொண்டிருக்கிறது???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக