ஞாயிறு, அக்டோபர் 26, 2014

வெறிச்சோடி போனடதா வாழ்க்கை!!!



சதுரங்க வேட்டை என்ற படத்தில் வரும் "வெறிச்சோடி போனடதா வாழ்க்கை!" என்ற பாடலை எத்தனை பேர் வியந்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை!  எனக்கும், படம் பார்த்த போது, அந்த பாடல் அத்தனை அழுத்தமாய் மனதில் பதியவில்லை.

பின்னர் மீண்டும், மீண்டும் அந்த பாடலைக் கேட்டபோது தான், எத்தனை வியப்பான பாடல் என்று புரிந்தது. குறிப்பிட்டு சொல்ல விரும்புவது பின்வரும் வரிகள்:

"ஒனக்கு மட்டும் சொந்தம் இல்லை ஊரச்சுற்றும் காசு!
அது வேசிப்போல வந்து வந்து வெலகிப்போகும் தூசு!!"

ஒரு சராசரி மனிதனின் ஆசைகளையும், வாழ்க்கை மேல் வரும் சராசரி வெறுப்பையும்; மிக எளிமையான வார்த்தைகளைக் கொண்டு "சரமாரியாய்" விளக்கி இருக்கும் பாடல். பாடலின் வரிகளுக்கு - சற்றும் குறைவில்லாத குரலும், இராகமும் - பாடலுக்கு பெருத்த வலு சேர்த்திருக்கிறது.

"வியப்பானவை" என்ற என்னுடைய பாடல் தொகுப்பில் சமீபத்தில் இணைந்திருக்கும் பாடல்! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக