ஞாயிறு, அக்டோபர் 12, 2014

வேறு இனத்தவர் யாருமே இல்லையா???




       சென்ற வாரம் ஓர்நாள் "யான்" என்ற தமிழ் திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு இளைஞி "கலாச்சாரம்" என்று பலரும் சொல்வதை மீறும் ஒரு விசயத்தை செய்தால் என்ன? என்று தன் தோழியோடு விவாதிப்பது போல் ஒரு காட்சி. அருகில் ஒரு மூத்த தம்பதியரை காண்பித்து, அதில் கணவர் "கலி முத்திடுச்சு... ஷிவ, ஷிவா!" என்று சொல்வதைப்போல் ஒரு காட்சி வரும். இதுபோன்று, முன்பே வேறு சில படங்களிலும் ஒருவர் பேசுவது போல் வந்திருக்கிறது.  


     அது என்ன? இம்மாதிரியான காட்சிகளின் போது "ஒரு குறிப்பிட்ட இன"தம்பதியரை சித்தரித்து, அவர்கள் பேச்சு-மொழியிலேயே வசனங்கள் அமைப்பது? என்ன சொல்ல வருகிறார்கள்? ஆற்றாமையால் என்னுள் எழுந்த கேள்விகள் கீழ்வருவன:  
  1. இம்மாதிரி, கலாச்சார காப்பாற்றுதலை அந்த "இன"த்தவர் மட்டும்தான் கடைபிடிக்கின்றனர்! என்று சொல்ல வருகின்றனரா?
  2. அல்லது, அந்த இனத்தை சேர்ந்தவர்கள் தான் கலாச்சார-மாற்றத்திற்கு இடையூராய் இருகின்றனர்! என்று சொல்ல வருகின்றனரா?  
   நன்றாய் கவனியுங்கள். அந்த தம்பதியர், பின்னர் "ஒரேயொரு"காட்சியில் கூட எந்த திரைப்படத்திலும் இடம் பெற மாட்டனர். பின்னர், ஏன் அந்த தம்பதியர் "இந்த இனத்தவர்" என்று "அழுந்த"சொல்ல வேண்டும்? யாரென்று-கூட தெரியாமல் "வெறும் ஒலி"வடிவில் (அல்லது எழுத்து வடிவில்) கூட அந்த வசனத்தை இடம் பெற செய்யலாமே??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக