ஞாயிறு, அக்டோபர் 12, 2014

டெல்லி சம்பவம் உணர்த்துவது...



      சமீபத்தில் டெல்லியில் இருக்கும் உயிரியல் பூங்காவில் இளைஞர் ஒருவர் துரதிஷ்டவசமாய் புலியால் கொல்லப்பட்டது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த காணொளியை மீண்டும், மீண்டும் பார்த்து, பலரையும் போல் என்மனமும் மிகவும் வேதனை அடைந்தது. என்னுடைய ஆதங்கத்தை கேள்விகளாய் என் முக-நூல் அண்ணாச்சி திரு. பத்ரசாமி சின்னசாமி அவர்களிடம் கேட்டிருந்தேன். வன-அதிகாரி என்ற வகையில் அவருடைய அனுபவித்ததை பதில்களாய் கொடுத்ததை இந்த இணைப்பில் காணலாம். என்னளவில், அங்கே கூடியிருந்தவர்கள் தங்களின் உணர்ச்சியை கொஞ்சம் அடக்கி, சிறிது யோசித்திருந்தால்  அந்த இளைஞரை காப்பாற்றி இருக்கலாம் என்றே தோன்றியது. இறந்தது, எவரோ என்று எளிதாய் எடுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால், என்னுடைய ஆற்றாமையை "அடச்சே! ஒரு மிருகத்திடம் அத்தனை பேரும் தோற்று உள்ளார்களே?!" அப்புறம் என்ன "நாம் நம் சக மனிதர்களிடம் வீராப்பு" காட்டுவது?! அடப்போங்கடா! மனுஷப்பசங்களா!! என்று வெளிப்படுத்தி இருந்தேன். 

    ஒருநாள் என் தம்பி திரு. வினோத் முருகன் "வாட்ஸ்ஆப்"பில் தடய-அறிவியல் துறையின் விளக்கத்துடன் கூடிய மேலுள்ள புகைப்படத்தை பகிர்ந்தான். என்போன்ற பலரும் எண்ணியிருந்தது போல், கற்களால் அடித்ததால் "தனக்கு ஏற்பட்ட" பயத்தால் புலி அந்த இளைஞரை கவ்வி செல்லவில்லையாம்! அந்த கற்களால், அந்த இளைஞருக்கு ஆபத்து என்று எண்ணி, பயந்துதான் கவ்வி சென்றதாம். தன் குட்டியையே அப்படி கவ்வி எடுத்து செல்வதுதான் புலியின் இயல்பு. ஆனால், "மனிதனின் சதை தன்னினத்தை போலில்லை; அதனால், கவ்வுதல் அவனைக் கொன்றுவிடும்"! என்று பாவம் அந்த புலிக்கு தெரியவில்லை. அந்த புலியின் நல்லெண்ணம், இறுதியில் அந்த இளைஞனின் உயிரைக் காவு கொடுத்துவிட்டது! என்னுடைய ஆற்றாமை இன்னும் அதிகமானது. அதன் விளைவாய் இன்னொரு பதிவில் இரண்டு குறிப்புகளை கொடுத்தேன்: 1. மனிதர்களுள் பல மிருகங்கள் உள்ளன! 2. மிருகங்களில் சில மனித(ர்கள்/ம்) இருக்கி(றார்கள்/றது) - என்பவையே அவை. சாமான்யர்கள் நமக்கு...

இம்மாதிரியான விலங்குகளின் அடிப்படை குணாதிசயங்களை அறிதல் - மிகமுக்கியம்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக