வெள்ளி, நவம்பர் 11, 2011

அச்சம்


அச்சத்தை மடமையென்போர்
துச்சமெனில் சந்திக்கட்டும்
என்னவளின் "விழி"களை

பெருஞ்சத்தம் எழுப்பும் புயல்சீனப்
பெருஞ்சுவராய் உயர்ந்திடும் அலை
விண்ணையே மிரட்டும் விண்கற்கள்
மண்ணையே உலுக்கும் நிலநடுக்கம்
எல்லாமும் புறமுதுகிட்டு திரும்பிடும்
என்னவள் அவளின்விழி நோக்கின்

இத்துனை அறிந்தும்
பித்தானேன் அவள்மேல்
அவளை...
மணக்கவும் வழியில்லை
மறக்கவும் தெரியவில்லை
மரணிக்கவும் துணிவில்லை

எனக்குதவ யாரும் கூறிவிடாதீர்
இதனை அவளிடம்
இருக்கட்டும் இக்காதல்
ஒருதலையாகவே!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக