ஞாயிறு, ஜனவரி 19, 2014

உண்மையில் இப்படி ஓர்-அதிகாரம் இருக்கிறதா???



      சமீபத்தில் மாவட்ட-ஆட்சியர் ஒருவரின் காலணியை டபேதார்(உதவியாளர்) அரை-மணி நேரத்திற்கு மேலாகவும் சுமந்திருந்தாயும், ஆட்சியர் "கிராம சபைக்கூட்டம்" முடிந்து வந்ததும் - காலணியை அணிந்துகொண்டு சென்றதாயும் செய்தி வந்தது. 65 ஆண்டுகால சுதந்தரத்தின் பலனாய் கிடைத்த தனி-மனித உரிமையையும்/மரியாதையையும் அச்செயல் பின்னுக்கு தள்ளியுள்ளதாய் "தி ஹிந்து" தமிழ்-நாளிதழ் தெரிவித்து இருந்தது! "மாவட்ட-ஆட்சியர் அப்படி செய்ய சொன்னாரா? அல்லது டபேதார் அப்படி செய்தாரா என்பது விவாதம் அல்ல! அதை ஏன் அந்த ஆட்சியர் ஏன் தடுக்கவில்லை?!" என்றும் கேட்டிருந்தது அந்த நாளிதழ்! பின்னர், அந்த டபேதார் வேலைக்கு சேர்ந்து 2 மாதமே ஆனதால் - ஆட்சியரிடம் நல்ல-பெயர் எடுக்க அப்படி செய்ததாயும் செய்திகள் வந்தனவாம்!  ஆனால், டபேதார் ஆட்சியர் காலணியை மகிழ்வுந்தில் வைக்க சொன்னார்; அதை எடுத்துசெல்லும்போது தான் இப்படி புகைப்படம் எடுத்தனர்; நான் அரை-மணி நேரம் எல்லாம் வைத்திருக்கவில்லை என்றாராம்!

          எனக்கு இங்கே ஒரேயொரு கேள்விதான்: காலணியை சுமக்க சொல்ல ஆட்சியருக்கு அதிகாரம் இருக்கிறதா? அப்படி "விதிமுறை" இருக்கிறதா?? அப்படியே இருப்பினும், எப்படி ஆட்சியராய் இருக்கும் ஒருவருக்கு "ஒரு சகமனிதனிடம்" அப்படி செய்ய சொல்ல மனம் வந்தது? அவரின் பொதுவறிவும்/ ஞானமும் எங்கே போனது?? ஏன் அதை அவர் மகிழ்வுந்திலேயே விட்டு சென்றிருக்கலாமே? மனிதன் என்ன பிறந்தது முதலா "காலணி"யை இடையறாது அணிந்து கொண்டிருக்கிறான்?? வீட்டிற்கு-வெளியே உள்ள கழிவறை போகக்கூட "காலணி"உபயோக்கிகாத பழக்கம் உள்ளவர் தானே நாம்? பின்னெப்படி, மகிழ்வுந்தில் இருந்து விழா-மேடை வரை செல்லக்கூட காலணி தேவைப்படுகிறது?? சரி, அதை விழா-மேடை அருகிலேயே விடவேண்டியது தானே?! அப்படி தொலைந்து  போனாலும், கண்டிப்பாய் "புதியதொன்றை" அவர் பணத்தில் வாங்குவார?! என்பது சந்தேகமே! பிறகு ஏன், அப்படி அந்த டபேதாரிடம் சொல்லவேண்டும்?...

இந்த செயலை - எப்படி கண்டிப்பது என்றே எனக்கு தெரியவில்லை!!!     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக