ஞாயிறு, ஜனவரி 26, 2014

திருமண-நிகழ்ச்சியின் மகத்துவம் என்ன???



        பலநாட்களாய்/சில ஆண்டுகளாய் எண்ணியிருந்த "என் திருமண"புகைப்படங்களைப் பார்க்கும் செயல் 2 நாட்கள்-முன் நடந்தேறியது. அதில் என்னை மிகவும் கவர்ந்த ஓன்று மேலிருப்பது! அதில் என்னுடன் இருப்பது என் தமக்கை-மகன். அவன் அத்தனை இளையதாய் இருப்பது மட்டுமன்றி அவன் என்னுடன் இருக்கும் புகைப்படங்களின் எண்ணிக்கையும் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தியது. அவற்றில் இருக்கும் பலரை அவனுக்கு தெரியாது; ஏன், எனக்கு தெரியாதவர்களே அதிகம்! அப்படி இருந்தும் அவன் என்னுடன் இருக்கவேண்டும் என்ற ஒரேயொரு காரணத்திற்காய் மட்டும் அத்தனை நேரம் இருந்ததை உணர்ந்தேன். அவன் என்னை மிகவும் நேசிப்பது தெரியும்; ஆனால், அத்தனை நேசிப்பதை இப்போது தான் உணர்ந்தேன். அவனை மனமுவந்து பாராட்டுகிறேன்! இதிலென்ன? எல்லாக்குழந்தைகளும் அப்படித்ததான் இருக்கும் எனலாம்! ஆனால், அவனின் குணம் அதுவல்ல; எல்லோரிடமும் அவன் அப்படி இருந்துவிடுவதில்லை.

        "சிலர் அர்த்தமில்லாது திருமண-நிகழ்ச்சி என்பது பண-விரயம்/ நேர-விரயம்" என்று சொல்வதில் எந்த உடன்பாடும் இல்லை! உண்மையில், இதுபோன்ற நிகழ்ச்சியில் வாழ்க்கைக்கான பாடங்கள் நிறைய உள்ளன! அதுதான் திருமண-நிகழ்ச்சியின் கருவாயும் இருந்திருக்கவேண்டும்; இதை நம்மில் பலர் உணராதது துரதிஷ்டமே! என் தமக்கை-மகன் அப்படியொரு நேசத்துடன் என்னிடம் இருப்பதை ஓர் உதாரணத்திற்காய் கூறினேன்; இது போல் எத்தனை எத்தனை உறவுகள்? நேசங்கள்?? எத்தனை நெஞ்சங்களின் வாழ்த்துக்கள்??? எந்த பிரச்சனையை சந்தித்துக்கொண்டிருக்கும் எந்தவொரு தம்பதியரும் - தத்தம் திருமணம் போன்ற நிகழ்வுகளின் புகைப்படங்கள் மற்றும் அவை சார்ந்தவற்றை பார்த்தால் போதும்! எத்தனை உறவுகள் அவர்களின் திருமண-பந்தம் நீடிக்க வாழ்த்தியது/விரும்பியது தெரியும்; அவர்களின் எந்த சிக்கலும் தீரும்; மனம் இலகுவாகும்! ஆனால், அதை பார்க்கவேண்டும் என்ற எண்ணம் வேண்டும்; எப்போதும் வேண்டும். நான் எல்லா புகைப்படங்களையும்/ காணொளிகளையும்...

மிகவும் ஆழமாய் பார்க்கப்போகிறேன்!... அப்போ நீங்க???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக