ஞாயிறு, ஜனவரி 26, 2014

யார் இந்த சமூக ஆர்வலர்கள்???



      "திருக்கோவிலூர் அருகே 21 குரங்குகள் இறந்தன!" என்ற செய்தியை நாளிதழில் பார்த்ததும் ஆர்வமாய் படிக்க ஆரம்பித்தேன். அங்கிருந்து 9 கி.மீ. தொலைவில் தான் "திருப்பாலப்பந்தல்" என்ற என் கிராமம் உள்ளது. வேளாண்-துறையின் "இருப்புக் கிடங்கின்" உடைந்திருந்த கண்ணாடி-ஜன்னல் வழியே சென்ற குரங்குகள் அங்கு வைத்திருந்த "எலிக்கொல்லி மருந்து" தடவிய "பிஸ்கட்டை" தின்றதால் இறந்தனவென பின்னர் தெரிய-வந்ததாம்! இன்னும் எத்தனை குரங்குகள் பாதிப்படைந்துள்ளன என்பதை கண்டறியும் முயற்சி நடைபெறுகிறதாம். பின்னர் அந்த குரங்குகளை  அடக்கம் செய்தனராம்.  உடனே, சமூக ஆர்வலர்கள் (???!!!) சிலர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் கோரிக்கை வைத்தனராம். இதைப்படித்தவுடன் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை; பெரிய-நகைப்பு தான் வந்தது. யார் இந்த சமூக-ஆர்வலர்கள்? எங்கிருந்து வந்தனர், இவர்கள்?! இவர்களின் நியாயமும்/ புரிதலும் தான் என்ன??

          இப்படி பல கேள்விகள் எழுந்தன! சரி, இவர்கள் ஏன் "எலிக்கொல்ல மருந்தா???" என்ற கேள்வி  எழுப்பவில்லை! என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில், அது அவர்களுக்கு முக்கியம்! எலிகள் பெருகி தானியங்கள் அழிந்துவிட்டால்? என்ற பயமாய் இருக்கலாம். எலியை கொல்வது அவர்களுக்கு இலாபம்! அதாவது, தெரிந்தே எலியைக் கொல்வது அவர்களுக்கு நியாயம்!! ஆனால், தெரியாமல் குரங்குகள் இறந்துவிட்டால் இவர்களின் "சமூக ஆர்வம்" தலைதூக்கும்! ஏன்னா? காலைல தெம்பா "ஆட்டுக்கறி-குழம்பு" சாப்பிட்டு வந்துதானே பெரும்பாலோர் இந்த "சமூக ஆர்வமே" கொள்கின்றனர்?!. இல்லை எனவில்லை! எந்தெந்த விலங்குகள் கொல்லப்படலாம் என்பதையும் "மனித-விலங்குகள்"ஆகிய நாம் தான் முடிவு செய்கின்றோம்; நமக்கு தானே "ஆறறிவு??!!" இருக்கிறது? அதில் எந்த தவறும் இல்லை எனக்கூட கொள்வோம்! வன-விலங்குகளை தேவை இல்லாமல் "வேட்டையாடுவதை" தவறென்பதில் இருக்கும் நியாயம் புரியாமல் இல்லை!

      இந்த குரங்குகள் திருக்கோவிலூர் மற்றும் அதை சுற்றியுள்ள என்-கிராமம் போன்ற பல கிராமங்களை பாடாய்ப் படுத்துவதற்கு என்ன நடவடிக்கை? இதுபோல் பல ஊர்கள் உள்ளன; உண்மையில் இவைகளை கொல்லவேண்டும் என்ற வெறி என்னுள் பலமுறை எழுவதுண்டு! குரங்கு-கடியும் நாய்க்கடியும் ஒருபோன்ற பாதிப்பை கொடுப்பவை. ஒன்றரை வயதில் தனக்கு "ரோசாப்பூ" பிடிக்கும் என்று என்மகள் சொன்னதற்காய் "பெரிய ரோசா" தோட்டத்தையே 73-வயதில் கடினப்பட்டு வளர்த்து அதை குரங்குகள் நாசம் செய்வதை பார்த்து நொந்த என்னப்பன் போன்றோருக்கு இவர்களில் எவர் பதில் சொல்வர்? என்மகளுக்காய் அவர் பராமரித்த "வாழைத் தோட்டத்திற்கும்" அதே நிலை தான்! இவர்கள் ஏன் குரங்கு-பண்ணை அமைத்து அந்த குரங்குகளுக்கு வாழ்வாதாரமும்/ பொருளாதாரமும் ஏற்படுத்தி கொடுக்கக்-கூடாது?! அப்படி செய்திருந்தால், அக்குரங்குகள் இப்படி முறை தவறி செய்திருக்காதே?! இப்படி ஏன் அந்த ஆர்வலர்கள் யோசிப்பதில்லை?!

       இதேபோல் தான் தெரு-நாய் தொல்லைகளும்! அவ்வப்போது அப்படி கடிபட்டு "அவதிப்பட்டு இறக்கும்" சிறார்கள் பற்றி படிக்கும்போது மனம் எளிதில் "கனக்கும்"! அதற்கு இவர்கள் என்ன வரைமுறை செய்திருக்கிறார்கள்?! அதை-பிடித்து கொல்லும் நடைமுறையையும் எதிர்த்து நிறுத்தி விட்டார்கள்! அந்த நாய்களால் என்ன பயன்? அவைகளால் மற்றவர்களுக்கு தான் தொல்லை! அவைகளுக்கு "குடும்பக்கட்டுப்பாடு" செய்து "பின், விட்டு" விடவேண்டுமாம்! "ஏன்யா?! இது மாத்திரம் இயற்கைக்கு எதிரானது இல்லையா??!!". பின்னர், அவைகளுக்கு "ஆன்டி-ரேபிஸ்" மருந்து அளிக்கவேண்டுமாம்! இதற்கெல்லாம் எவர் பணம் செலவழிப்பது?! "இந்த ஆர்வலர்கள் ஏன் ஆளுக்கொரு நாயாய் எடுத்து சென்று வளர்க்கக்கூடாது?!". ம்ஹூம்! அதெல்லாம் அவர்கள் செய்ய மாட்டார்கள்: அவர்களின் "ஜிம்மியும்; டாமியும்" வெளிநாட்டில் இருந்து வந்திருக்கும்; அவைகள் "குளிரூட்டப்பட்ட அறையில்" வளரும். ஆனால், அவர்கள் தெரு-நாய்க்காய் இப்படி பேசுவர்.

      ஏனெனில், கடிபடப்போவது அவர்களின் குழந்தைகள் அல்லவே?! இதுபோல் பல விலங்குகள் சார்ந்த பிரச்சனைகள் உள்ளது எனினும், சமீபத்தில் ஊட்டியில் "பிடிக்க முயன்று பலனற்று போய்; இருதியார் அந்த ஆட்கொல்லி-புலியை சுட்டுக்கொன்ற" சம்பவமும் அதற்கான எதிர்க்குரல்களும்! அந்த பணியில் ஈடுபட்டிருந்தவர்களில் என் முக-நூல் நண்பர் திரு. பத்ரசாமி சின்னசாமி யும் ஒருவர். 2  வார காலம் குடும்பத்தையும்/ பண்டிகையையும் விட்டு காட்டில் அலைந்து-திரிந்த அவரை(யும்) பலர் சாடி  வருகின்றனர். காட்டில் நடக்கும் அனைத்து முயற்சிகளையும் ஆதாரத்தோடு அவ்வப்போது வெளியிடும் நல்ல அதிகாரி அவர். அவரை இப்படியா காயப்படுத்துவது?! அவரைப்போன்றோர் இல்லாமலா; வனமும்/ வன-விலங்குகளும் காப்பாற்றப்படுகின்றன? அவர்(களு)க்கு தெரியாத விலங்கின் உயிரா?/உயர்வா?? ஏன் சற்றும் சிந்திப்பதில்லை இந்த "ஆர்வலர்கள்" எனும் "ஆர்வக்கோலாறுகள்?". சரி, நாய் போலவே புலியையும் "பிடிக்கக்கூட" வேண்டாம் என்று வாதிட வேண்டியது-தானே?? அந்த அலுவலர்கள் பட்ட வலிகளும்/ வேதனைகளும்-ஆவது எஞ்சியிருக்கும்! ஏன்னா?! நான் முன்பே கூறிய-வண்ணம்...

அவர்களுக்கு எந்த விலங்குகள் பற்றி எப்படி பேசவேண்டும் என்பது தெளிவாய் தெரியும்!!!

பின்குறிப்பு: விலங்குகள் என்று மட்டுமல்ல! திருமணத்திற்கு முன் பாலுறவு கொள்வதில் தவறில்லை என்ற பதிலை சொன்னதற்காய் - "கேள்வி கேட்டவரை விட்டுவிட்டு" பதில் சொன்ன நடிகையை சாடும் இதுபோன்ற ஆர்வலர்கள் பலர் உள்ளனர். இவர்களுக்கு எல்லாம், இந்த நியதிகளை எவர் எந்த விதத்தில் எடுத்து சொல்வது???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக