ஞாயிறு, ஜனவரி 19, 2014

குடும்ப-உறவுகள் எதிர்காலத்தில் பலமடையுமா? பலவீனமடையுமா??



        பொங்கல்2014-சிறப்பு பட்டிமன்றம் பலரும் பார்த்திருக்கக்கூடும்! சாலமன்-பாப்பையா அவர்களின் தலைமையில் "குடும்ப-உறவுகள் எதிர்காலத்தில் பலமடையுமா? பலவீனமடையுமா??" என்ற பட்டிமன்றம் ஒன்றும் நடந்தது! எங்கே, நடுவர் "பலமடையும்" என்ற பலவீனமான! முடிவை கூறிவிடுவாரோ என்று (பலரையும் போல்)பதபதைப்புடனே பார்த்தேன். அதில் பேசிய ஒருவர் "இப்போதெல்லாம் ஒரேயொரு பிள்ளை" என்ற கொள்கையுடன் வாழ்கிறார்கள்; எனவே, வருங்காலத்தில் தமிழகத்தில் "தமையன், தமக்கை, தமையன்-பிள்ளைகள். தமக்கை-பிள்ளைகள்" என்ற சொற்களே-கூட அழிந்துவிடும் என்று பேசினார். அப்படியே என்னுடைய உணர்வை பிரதிபலிப்பது போல் இருந்தது! இந்த கொள்கைக்கு பலரும் "பொருளாதாரத்தை" காரணமாய் கூறுவதைத் தான் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை! அந்த ஆற்றாமையாய் தான் "எத்தனை குழந்தைகள் வேண்டும்???" என்ற தலைப்பில் முன்பொரு தலையங்கத்தில் எழுதி இருந்தேன். 

     என்மகளும் தனியாய் இருப்பதையும் என்னுடைய பார்வையையும் அந்த தலையங்கத்தில் கூறியிருந்தேன். என்மகளுக்காவது பெரியப்பா-பிள்ளைகள், அத்தை-பிள்ளைகள் என்ற உறவுகள் இருக்கின்றன. ஒரேயொரு பிள்ளையாய் இருக்கும் கணவன்/மனைவிக்கு (அல்லது இருவருக்கும்) ஒரேயொரு பிள்ளை என்ற குடும்பங்கள் பலவும் உள்ளனவே?! அவை எல்லாம் எதை நோக்கி வளர்கின்றன?? எத்தனையோ தலைமுறைகள் வளர்த்திட்ட குடும்ப-உறவுக்கொடிகளை அறுத்தெறிய எவர் தந்தது அந்த உரிமையை?! இந்த சூழலில், அப்படி இருக்கும் சின்ன-சின்ன குடும்பங்கள் கூட இருக்கும் அந்த-சிறிய உறவுகளிடம் எந்த பிணைப்பும் இல்லாமல் இருப்பதை என்னவென்று சொல்ல? பாரம்பரியமான நம் குடும்ப உறவுகள் பின்னெப்படி பலமடையும்? நடுவரும், இப்போதுள்ள உண்மை-சூழலை எடுத்து சொல்லி "இதை நான் மறைத்து முடிவை சொன்னால்" என்னுடைய மனசாட்சி என்னை கொல்லும் என்றாரே?! எத்தனை உண்மை அது! ஒருவேளை...

இப்படியாய் உறவுகள் அழிந்துசென்று தான் உலகமும் அழியுமோ???!!!    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக