ஞாயிறு, ஜனவரி 26, 2014

இந்திய-கிரிக்கெட்டின் இன்றைய-நிலை...



          நேற்று 3-ஆவது ஒரு-நாள் கிரிக்கெட்டின் 40-ஆவது ஓவர் முடிந்த நிலையில் இந்த மனதங்கத்தை எழுத ஆரம்பித்தேன். தோல்வியை நோக்கி இந்தியா விளையாடிக்கொண்டு இருந்தது; ஆனால், 2 "பௌலர்களின்" திடீர்-தாக்குதலால் அந்த போட்டியை "டை" செய்தது. சமீபத்தில் 5-போட்டிகளில் (தென்னாப்ரிக்கா உட்பட) "டாஸ்" வென்ற தோணி "ஃபீல்டிங்" தேர்வேடுத்துள்ளார். அதில், 2-ல் படுதோல்வி! இப்போதைய தொடரின் முதல் 2 போட்டிகளில் "நிரந்தர-கோலி"யுடன் தோணியும் கைகொடுக்க "குறைந்த"ரன் வித்தியாசத்தில் தோற்றது. நேற்றைய போட்டியில் கோலி-விரைவில் "அவுட்டாக" அடுத்தது "ரைனா" வந்ததைப் பார்த்து நான் "அவுட்டிங்" சென்றுவிட்டேன் - 40ஆவது ஓவர் நடைபெறும்போது மீண்டும் இல்லம் வந்தேன்! நேற்றும் தோணி சிறப்பாய் ஆடினார். தொடர்ந்து இப்படி தோணி "ஃபீல்டிங்" தேர்ந்தெடுக்க என்ன காரணம்? நம் சமீபத்திய "பேட்ஸ்மென்கள், சேசிங்கில்" சிறந்தவர்கள் என்பது இருக்கட்டும் - ஆனால், அதுவும் இந்தியாவில் மட்டும் தான்!

          நல்ல "பேட்ஸ்மென்கள்" இருப்பதால் முதலில் "பேட்டிங்" செய்து அதிக-ரன்கள் எடுப்பதுதானே "வலுவற்ற நம் பௌலர்களுக்கு" உதவியாய் இருக்கும்?! என்னவோ? நம் "பௌலர்கள்" எந்த "டீமையும்" 25-ஓவர்களுக்குள் சுருட்டி விடுவார்கள்; நாம் 15-ஓவர்களுக்குள் இலக்கை அடைந்து, 60-ஓவர்கள் மீதம் பண்ணி "ரெஸ்ட்"எடுக்கலாம் என்பது போல் ஓர்-கேப்டன் செயல்படுவது ஏன்? ஒன்றிரண்டு போட்டிகளில் முதலில் "பேட்டிங்" எடுக்கலாம்; அது(வும்) தொடர்ந்து தோல்வியை கொடுக்கும்போது மாற்றிக்கொள்ள வேண்டாமா? ஏன் இந்த பிடிவாதம்?? நல்ல கேப்டன்/வெற்றி கேப்டன் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை! அதற்காய் இப்படியொரு பிடிவாதம் வேண்டுமா? தொடர்ந்து "அவருக்கு பிடித்த வீரர்களுக்கு" வாய்ப்பளிப்பதிலும் இதே நிலைப்பாடு! இவர்களுக்கு பின்னால் (முன்போல் இல்லையெனினும்) ஒரு தேசமே "மனதால் விளையாடிக்கொண்டிருப்பது" இவர்களுக்கு தெரியாதா என்ன? இந்திய கிரிக்கெட்டின் இன்றைய நல்லது/கெட்டது...

என்ற இரண்டு நிலைகளும் ஒரு கேப்டன் கையில் இருப்பது துரதிஷ்டவசமோ???      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக