ஞாயிறு, ஜனவரி 26, 2014

எல்லாவற்றிற்கும் ஆண்கள்தான் காரணமா???



         மேலுள்ள புகைப்படத்தையும், அது சார்ந்த சர்ச்சையையும் பலரும் படித்திருக்கக்கூடும். இப்படி ஓர் பெண்ணை (நடிகையை) ஓர் ஆணின் (நடிகனின்) காலடியில் நடந்து வருவது-போல் சித்தரிப்பது பலருக்கும் அருவருப்பாய் இருந்திருக்கக்கூடும்! இதை தவிர்த்திருக்கலாம் என்ற வாதத்திலும் எவருக்கும் பெரிதாய் முரண்பாடு இருக்காது என்றே நம்புகிறேன். ஆனால், இதைப் பார்த்த இன்னொரு நடிகை கொதித்துப்போய் அந்த நடிகனை விமர்சிப்பது எந்த விதத்தில் நியாயம்? அந்த நடிகையோடு சேர்ந்து சில-நடிகர்களும் எதிர்த்ததாய் செய்தி! என்னுடைய கேள்வி; ஏன் இவர்கள் சம்பந்தப்பட்ட அந்த நடிகையை (முதலில்)கேட்கவில்லை?? அப்படி அந்த நடிகையை காலடியில் நடக்க சொல்லி அந்த நடிகரோ/அல்லது வேறெவரோ நிர்ப்பந்தப்படுத்தி இருப்பின் அந்த நடிகரை சாடுவது சரியென்றே ஒப்புக்கொள்ளலாம். ஆனால், அப்படி எதுவும் நடந்ததாய் தெரியவில்லை. அப்படி எவரும் இதுவரையும் சொல்லவே இல்லை.

    பின்ஏன், அந்த நடிகை-உட்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட நடிகரை(மட்டும்) குறிவைத்து தாக்கவேண்டும்? எதற்கெடுத்தாலும் ஆண்களை குறை-கூறும் போக்கு பெரிதாய் வளர்ந்து வருவதையே இந்த சம்பவம் காட்டுகிறது. இந்த சமுதாயமும், பெண்ணியம் பேசுபவர்களும் இன்னமும் "பெண்கள் ஆண்களிடம் அடிமைப்பட்டு" இருப்பதைப் போன்ற "மாயையுடனேயே" இருக்கின்றனர். ஆனால், இன்றைய சூழல் அப்படியில்லை என்ற அப்பட்டமான உண்மையை அறியாதார் எவரும் இருக்க வாய்ப்பில்லை; அதை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நான் சுட்டிக்காட்டி வருகிறேன். அதனால் தான் எதிர்-பெண்ணியம்(Anti-Feminism) என்ற கோட்பாடும் நடைமுறையில் வந்திருக்கிறது. எந்த-எதிர்ப்பும் தேவையான அளவிற்கும் மேலாய் தொடரும்போது அதையும் "எதிர்க்கும் எதிர்வினை" ஒன்று உருவாவது தவிர்க்க முடியாதது! எனவே, பெண்ணியம் என்ற நிலைப்பாடு இன்னமும் ஆணை எதிர்ப்பது என்ற தவறான-கொள்கையில் இருந்து மாறுபடவேண்டும். இன்னமும்...

எல்லாவற்றிற்கும் ஆண்கள்தான் காரணமா???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக