ஞாயிறு, ஆகஸ்ட் 24, 2014

விழியப்பனோடு விவாதிப்போம் (23082014)




விழியப்பனோடு விவாதிப்போம் (23082014):

நேற்று "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கம்" என்ற குறள் பற்றி ஓர் சிந்தனை எழுந்தது! உடனொரு விவாதமும் வந்தது.

அறத்துப்பாலில் "மக்கட் பேறு" எனும் அந்த 7-ஆம் அதிக்காரத்தில் மேற்குறிப்பிட்ட குறள் (எண் 69) மற்றும் "தந்தை மகற்காற்றும் உதவி"{எண் 67; பெரும்பான்மையில் இது மகன் என்றே பார்க்கப்படுகிறது!}; "மகன் தந்தைக்காற்றும் உதவி" (எண் 70) என்று நம் வள்ளுவப் பெருந்தகை "ஆண்"பாலை குறிப்பிட்டு சொல்ல என்ன காரணம்? என்பதே அந்த சிந்தனை.

"குழலினிது யாழினிது என்பர்தம்..." உட்பட மீதமுள்ள 7 குறள்களிலும் உள்ளது போல்; "மக்கள்"என்று பொதுப்பாலில் ஏன் கூறவில்லை?! என்பதே அந்த வாதம்.

அந்த காலகட்டத்தில் ஆணாதிக்கம் உயர்ந்திருந்ததாய் வரலாறு கூறுகிறது. "ஜான் பிள்ளையானாலும்; ஆண் பிள்ளை" போன்ற கூறுகளும் பல்கிபெருகி இருந்த காலம் என்பதால் - "சில செயல்களில் மட்டும்" இப்படி "ஆண்"என்று குறிப்பிட்டு சொல்லப்பட்டதா?! என்றோர் ஐயம் வந்தது. ஆனால், நம் பெருந்தகை அப்படி எண்ணியிருக்க வாய்ப்பேயில்லை என்பதும் திண்ணமாய் புரிந்தது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? வாங்களேன்... விவாதிப்போம்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக