ஞாயிறு, ஆகஸ்ட் 03, 2014

நீயா நானா கோபிநாத்தின் பொறுமை...




"நீயா? நானா?" புகழ் கோபிநாத் அவர்களை போற்றியும்/தூற்றியும் பலரும் இரு பிரிவுகளாய் பேசுவதுண்டு...

எனக்கு, அடிக்கடி திரு. கோபிநாத்தைப் பார்த்து பரிதாபம் தான் எழும். பின்னர், அவரின் பொறுமை தான் என்னை மெய்சிலிர்க்க வைக்கும்! 


ஆம்! பல விவாதங்களில் பலர் பேசுவது "பலரையும் போல்" என்னையும் வெகுவாய் கோபமுற செய்யும்! பல நேரங்களில் - தொலைக்காட்சியை நோக்கி (நான் தனியே இருப்பது அதற்கு ஒரு செளகர்யமும் கூட!) "கண்ணா-பின்னாவென்று" அவர்களை திட்டி இருக்கிறேன். 

அப்படி பேசுபவர்களை - எதிரணியில் இருப்போர் கூட "எதிர்த்து; வாதிக்க" பேசமுடியும். ஏன்?! "சிறப்பு விருந்தினராய்" வருபவர் கூட; அவர்களின் கூற்றை எதிர்த்து/தவறென்று பேசமுடியும். இப்படி, எல்லோரும் - அவரவர் உணர்வுகளை வெளிக்காட்டி பேசும்போது; திரு. கோபிநாத் மட்டும் இறுதி-வரை "இரு சாராரையும்" அனுசரித்து நடுநிலையோடு மட்டுமே பேசவேண்டும் என்ற நிர்ப்பந்தம். பட்டி-மன்றம்/மண்டபம் - இவை போன்றவற்றில் கூட நடுவராய் இருப்போருக்கு அவரின் கருத்தை கூறி தீர்ப்பு வழங்க வாய்ப்பு இருக்கிறது. 

ஆனால், திரு. கோபிநாத் நிலைமை - அதனால், அவரின் "பொறுமை"தான் {என்னதான், அதுதான் அவரின் கடமை எனினும்...} என்னை; அவரை எப்போதும் உயர்வாய் பார்க்கத் தூண்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக