ஞாயிறு, ஆகஸ்ட் 24, 2014

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்...



      "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்" என்ற குறளை ஆழ்ந்து பார்த்தால்; நம் வள்ளுவப் பெருந்தகை "உவகையின் உச்சமாய்" தாய் ஒரு-குழந்தையை ஈனும் தருணத்தை பார்த்திருப்பது புலப்படும். அதனால் தான், தன்-மகன் சான்றோன் என்று அழைக்கப்படும் போது கிடைக்கும் உவகையை; அந்த நிகழ்வோடு ஒப்பிட்டு இருக்கிறார்.

          - இன்றைய காலகட்டத்தில் பெரும்பான்மையான பெண்கள்; அத்தகைய உயரிய "உவகையை" ஒருமுறை (ஒரே குழந்தை!) அனுபவிப்பதோடு போதும் என்று நினைப்பதை என்னவென்று சொல்வது?! 

{ஈதலின் போது ஒரு தாய் அடையும் வழியையும்/வேதனையையும் உணராதவர் அல்ல வள்ளுவர்! ஆனால், அந்த சில கணங்கள் அடையும் "அழுகை"யை விட; அதன் பின் அந்த நிகழ்வு பற்பல ஆண்டுகள் தரும் "உவகை"யை உயர்வாய் பார்த்திருக்கிறார் என்பதே பேருண்மை!!!}  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக