வெள்ளி, டிசம்பர் 23, 2011

ஏனிந்த வாழ்க்கை?...


*******

மனிதா! பணமே
முதன்மையாய் எண்ணி
முடிந்தது அத்துனையும்
முயன்று - எண்ணிலடங்கா
சொத்து குவித்து
சொந்தபந்தம் தவிர்த்து

சேர்த்தது போதாதென்று
சேர்த்ததை (கரை)சேர்க்க
போராடி (நடை)தள்ளாடி
போகும்போது ஏதும்
பற்றிசெல்ல லாகாதென்ற
பொருள் புரியாது

வாழவே மறந்து
வாழ்க்கை தொலைத்து
எதற்கும் பயனற்று
என்ன வாழ்க்கையிது?
எவர்க்காய் வாழ்கிறாய்??
எதற்கு(தான்) வாழ்கிறாய்???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக