ஞாயிறு, ஆகஸ்ட் 04, 2013

தமிழ் இனி...



     என் நண்பர் - ஜனார்தன் ஜெயராமன் - பரிந்துரை செய்ததன் பேரில், சமீபத்தில் "தமிழ் இனி" என்றொரு குறும்படத்தை பார்த்தேன். பெரும்பாலும், உங்களில் நிறைய பேர் அதை பார்த்திருக்கக்கூடும்! இரண்டு தலைமுறை கடந்து வெளிநாடு-வாழ்  தமிழ்குடும்பம் எப்படி இருக்கும் என்பதை அழுத்தமாய் பதிவு செய்திருக்கின்றனர்.  ஆனால், இதனால் தமிழ் அழிந்துவிடும் என்ற கூற்றும் அது சார்ந்த கவலையும் தேவையற்றது. ஏனெனில், தமிழ் வாழ என்ன செய்யவேண்டும் என்று முன்பே கூறியிருக்கிறேன்.  வெளிநாட்டில் வாழும் பெற்றோர் மற்றும் அவர்களின் குழந்தைகள் வளரும் சூழல் அவ்வாறு உள்ளது என்பதை எள்ளளவும் மறுப்பதற்கில்லை!! அங்கே, தமிழ் தேவையில்லை என்பதும் ஒப்புக்கொள்ளக்கூடியதே!!! அந்த பெற்றோருக்கோ அல்லது குழந்தைகளுக்கோ தமிழில் எழுத/படிக்க தெரியவில்லை என்பதை வேண்டுமானால் பொறுத்துக்கொள்ளலாம். ஆனால், உடைந்து போன-நிலையிலாவது தமிழில் பேசத்தெரியவில்லை என்பதை ஒப்புக்கொள்ளவே முடியாது. 

   அந்த குறும்படத்திலேயே, வேற்றுமொழி பேசும் ஓர் தாயும் அவரின் மகனும் - அவர்களின் தாய்மொழியில் உரையாடும் ஓர் சிறிய-காட்சி வரும்! அதைப்பற்றி இயக்குனர் பெரிதாய் விளக்கிடவில்லை; அது தேவையுமில்லை என்றே தோன்றுகிறது - எங்கிருந்தாலும், விருப்பமிருப்பின் தாய்மொழியில் கண்டிப்பாய் பேசிடமுடியும் என்று எடுத்துக்கொள்ளலாம்! அல்லது, தாய்மொழி உரையாடல்தான் சிறந்தது என்றும் எடுத்துக்கொள்ளலாம். இங்கே, தாய்மொழி மீது பெற்றோருக்கு ஓர் மதிப்பும், ஈர்ப்பும் இருப்பின் - எந்த தேசத்திலிருப்பினும் தாய்மொழியில் தடையின்றி பேசமுடியும் என்று தோன்றுகிறது. என் மச்சானின் மகளும், அது போன்று பல குழந்தைகளும் - "சௌதாம்ப்டன்" நகரில் இருந்துகொண்டே எப்படி தமிழை கற்கிறார்கள் என்பதை முன்பே விளக்கி இருந்தேன். அம்மாதிரி, தமிழில் எழுத/படிக்க கூட அவசியமில்லை; குறைந்தபட்சம் தமிழில் பேச வைக்கவாவது முயலலாமே?!  ஏனெனில், தாய்மொழி தெரியாத குழந்தையின் சிந்தனை...

சிறப்பாய் அமைந்திடுதல் சாத்தியமன்று!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக