ஞாயிறு, ஜூன் 17, 2018

குறள் எண்: 1050 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 11 - குடியியல்; அதிகாரம்: 105 - நல்குரவு; குறள் எண்: 1050}

துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று

விழியப்பன் விளக்கம்: வாழ்க்கையின் அடிப்படை இல்லாதோர், முற்றும் துறவாமல் வாழ்வது; வேறொருவரின் உப்பிற்கும் கஞ்சிக்கும், எமனாக இருப்பது போன்றதாகும்!
(அது போல்...)
போராட்டத்தின் பின்னணி அறியாதோர், முற்றும் அறியாமல் கருத்திடுவது; பிறரின் வாழ்விலும் உரிமையிலும், நஞ்சைக் கலப்பது போலாகும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக