வியாழன், ஜூன் 21, 2018

குறள் எண்: 1054 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 11 - குடியியல்; அதிகாரம்: 106 - இரவு; குறள் எண்: 1054}

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு

விழியப்பன் விளக்கம்: யாசகம் தரும் தகுதியை மறைக்கும் செயலை, கனவிலும் அறியாத ஒருவரிடம்; யாசகம் கேட்பது கூட, பிறருக்கு கொடுப்பது போன்றதே ஆகும்!
(அது போல்...)
நீதியைக் காக்கும் அதிகாரத்தை மறுக்கும் செயலை, பதவிக்காகவும் செய்யாத ஆட்சியரிடம்; கோரிக்கை வைப்பது கூட, நீதியை வென்றது போன்றதே ஆகும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக