புதன், ஜூன் 20, 2018

குறள் எண்: 1053 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 11 - குடியியல்; அதிகாரம்: 106 - இரவு; குறள் எண்: 1053}

கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோ ரேஎர் உடைத்து

விழியப்பன் விளக்கம்: யாசகமெனும் கடமையை உணர்ந்து, யாசகம் தரும் தகுதியை மறைக்காத உள்ளமுடைய ஒருவரின் முன் நின்று; யாசகம் கேட்பதும், ஒருவித அழகை உடையதாகும்!
(அது போல்...)
அரசியலெனும் பொதுநலனைக் காத்து, அரசியல் செய்யும் முயற்சியை கைவிடாத திடமுடைய ஒருவரை முன் மொழிந்து; அரசியலுக்கு அழைப்பதும், ஒருவித சமுதாயக் கடமையாகும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக