திங்கள், ஜூன் 18, 2018

குறள் எண்: 1051 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 11 - குடியியல்; அதிகாரம்: 106 - இரவு; குறள் எண்: 1051}

இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று

விழியப்பன் விளக்கம்: யாசகம் கேட்கத் தகுதியானவரைக் கண்டால், யாசகம் கேட்க வேண்டும்! யாசகம் தரும் தகுதியை மறைத்தால், அது அவர் பழியாகும்! யாசகம் கேட்போரின் பழியல்ல!
(அது போல்...)
அரசியல் செய்யும் திறனுடையவரை அறிந்தால், அரசியலுக்கு அழைக்க வேண்டும்! அரசியல் செய்யும் திறனை மறுத்தால், அது அவர் பிழையாகும்! அரசியலுக்கு அழைப்போரின் பிழையல்ல!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக