சனி, ஜூன் 23, 2018

குறள் எண்: 1056 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 11 - குடியியல்; அதிகாரம்: 106 - இரவு; குறள் எண்: 1056}

கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்

விழியப்பன் விளக்கம்: யாசகம் தரும் தகுதியை மறைக்கும், தீக்குணம் இல்லாதவரைக் கண்டால்; யாசகம் கேட்கும் நிலையில் உள்ளோரின், தீமைகள் அனைத்தும் ஒருசேர அழியும்!
(அது போல்...)
பொதுநலம் காக்கும் திறனை மறுக்கும், சுயநலம் அற்றோரைக் கண்டால்; போராடிப் பெறும் நிலையில் இருப்போரின், தேவைகள் யாவும் ஒருசேர தீரும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக