செவ்வாய், ஜூன் 19, 2018

குறள் எண்: 1052 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 11 - குடியியல்; அதிகாரம்: 106 - இரவு; குறள் எண்: 1052}

இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்

விழியப்பன் விளக்கம்: யாசகமாய் கேட்கப் படுபவை, கேட்பவருக்கும் கொடுப்பவருக்கும் துன்பம் அளிக்காமல் இருக்குமாயின்; யாசகம் கேட்பது கூட, ஒருவருக்கு இன்பமே ஆகும்!
(அது போல்...)
உரிமையாய் கோரப் படுபவை, கோருவோருக்கும் அளிப்போருக்கும் விரிசலை உருவாக்காமல் இருக்குமாயின்; உரிமையைக் கோருவது கூட, ஒருவருக்கு வெற்றியே ஆகும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக